search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலாப்பூர்"

    • சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
    • தேவநாதன் உடன் கைதான குணசீலன், மகிமைநாதன் ஆகியோருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவன மோசடி வழக்கில் வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். டெபாசிட் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

    நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனுக்கு நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தேவநாதன் உடன் கைதான குணசீலன், மகிமைநாதன் ஆகியோருக்கும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்ததன்பேரின் திருச்சியில் நேற்று கைது.
    • சென்னை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட் நிலையில் சிறையில் அடைப்பு.

    மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவன மோசடி வழக்கில் வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேவநாதனை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி வருகிற 28-ந்தேதி வரை (14 நாட்கள்) சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி தேவநாதன் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். இநத் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். டெபாசிஸ்ட் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

    சுமார் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.
    • மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் 'இறுதி நாயகர்கள்' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகமாக நம்பிக்கை வைத்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் முருகன்தான் நம்முடைய தெய்வம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

    வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம். நீங்கள் வழிபாடுகளை மதத்தை, கடவுளை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பது வேறு ஒரு விசயம்.


    ஆனால் அதைத் தாண்டி அந்த கடவுள் யார்? அந்த கடவுள் உருவம் எது? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். அது தனிப்பட்ட ஒரு விசயம். அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.

    மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் பெயரளவில் மட்டும்தான் உள்ளது. மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.


    மக்களுக்கு போய் சேரக் கூடிய எல்லா திட்டங்களையும் இன்று அழித்து விட்டு வேறு ஒரு விசயத்தை மக்களுடைய வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் மக்களுடைய வாழ்க்கையை எந்தவிதத்திலும் மாற்ற முடியாத சில விசயங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதை இந்த தேசமாக தேசியமாக மக்களின் அடையாளமாக மாற்ற நினைத்து கொண்டிருக்க கூடியவர்களை நாம் மாற்ற முடியும். அவர்களுடைய இடத்தை வேறு ஒன்றாக மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • கோயிலில் வைக்கப்பட்ட ஓலைகளில் தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம்.

    சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து, கோயிலை சுற்றி ஓலைகள் கட்டப்பட்டு இருந்தது. ஓலையில் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

    • தெற்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தபோது அதை அகற்றி விட்டு சித்திரை குளக்கரையில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.
    • பழமை வாய்ந்த இந்த குளத்து நீரை புனிதமாக கருதினார்கள்.

    மயிலாப்பூர்...

    சென்னையின் அழகிய நகரம் மட்டுமல்ல ஆன்மீக நகரம் ஆகும்.

    புகழ் பெற்ற கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், ஆதிகேசவப் பெருமாள்கோவில், மாதவப் பெருமாள்கோவில், மற்றும் சாந்தோம் தேவாலயம் ஆகிய முக்கிய கோவில்கள் அமைந்துள்ளன. இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    மக்கள் நெரிசலில் சிக்கித் திணறும் இந்த பகுதியில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 4 மாட வீதிகள் மயிலாப்பூருக்கு தனி அழகை கொடுத்தது. இந்த அழகை கெடுக்கும் வகையில் 4 மாட வீதிகளுமே ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. கோவிலுக்கு வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கிறார்கள். பலர் காரிலேயே மாட வீதிகளை சுற்றி விட்டு கார்களை நிறுத்த முடியாமல் திரும்பி விடுகிறார்கள்.

    தெற்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தபோது அதை அகற்றி விட்டு சித்திரை குளக்கரையில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த கடைகளை கட்டி வாடகைக்கு விடுவது போன்ற முறைகேடுகள்தான் அரங்கேறியதை தவிர ஆக்கிரமிப்புகள் அகன்றபாடில்லை. மயிலாப்பூரில் அந்த காலத்தில் சித்தர்கள் அதிகம் வாழ்ந்த இடம். அவர்கள் நீராடிய குளம்தான் இன்றைய சித்திரை குளம் என்ற சித்தர் குளமாகும்.

    பழமை வாய்ந்த இந்த குளத்து நீரை புனிதமாக கருதினார்கள். ஆனால் இப்போத குளம் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து காணப்படுகிறது. படிக்கட்டுகள், சுற்றுச்சுவர்கள் இடிந்து நொறுங்கி கிடக்கின்றன.

    தண்ணீரும் மாசுபட்டு பயன்படுத்த முயாத நிலையிலேயே உள்ளது.

    ஆக்கிரமிப்பு காரணமாக மக்கள் மட்டுமல்ல சுவாமி கூட வீதி உலா செல்ல முடியாமல் தவிக்கும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது மயிலாப்பூர்.

    படித்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் நிறைந்த பகுதி. இந்த பகுதியை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டு சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு கதைதான் என்கிறார்கள் அந்த பகுதிவாசிகள்.

    ×