search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.20 லட்சம்"

    • ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


    நாகர்கோவில் : கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மங்காவிளையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மங்காவிளை ஊர் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மக்களின் வேண்டு கோளுக்கு இணங்க மாங்கா விளையில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சோதனைகள் பல வந்த போதும் இப்பகுதி மக்கள் அ.தி.மு.க.வின் பக்கம் என்றும் இருந்து வருகிறார்கள். ஊர் கூடி தேர் இழுப்பது போல அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து வருகிறார்கள்.

    வெற்றி, தோல்வி வாழ்க்கையில் நிரந்தரம் கிடையாது. என்றும் மக்களுக்காக உழைத்து வருகிறேன். உங்களின் உயர்வே எனது உயர்வு. தொடங்கப்பட்ட இப்பணிகள் விரைவில் நிறைவடையும். இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அய்யப்பன், கவுன்சிலர்கள் புனிதா கலையரசன், அமுதசெல்வி, செல்ல பெருமாள், பரமேஸ்குமார், மங்காவிளை ஊர் செயலாளர் துளசிமணி, பொருளாளர் பார்த்தசாரதி, பேராசிரியர் அய்யப்பன், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீராசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்.சேகர், டாஸ்மாக் பிரிவு செயலாளர் மணிகண்டன், புத்தளம் சிவகந்தன், தெங்கம்புதூர் முத்துகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஒரே நாளில் ரூ.2¾ லட்சம் வசூலானது
    • தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி சாலையில் மாணவர்கள் 'பைக்' ரேசில் ஈடுபடுவதாக போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    கோணம் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் சாலையின் இருபுறமும் பேரிகாடுகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடத்திய சோதனையில் ஹெல்ெமட் அணியாமல் வந்த பலரும் சிக்கினர். லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களும் போலீசாரிடம் சிக்கி தவித்தனர். அவர்களுக்கு தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். கோணம் பகுதியில் மட்டும் மாலை நடந்த சோதனையில் 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் நகர் முழுவ தும் நேற்று ஒரே நாளில் 225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஹெல்மெட், லைசென்சு, போக்குவரத்து விதிமுறை மீறல் போன்ற காரணங்களுக்காக போலீசார் அபரா தம் விதித்துள்ளனர். இதன் மூலமாக ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூல் ஆகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே போக்கு வரத்து போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் காலை, மாலை நேரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களுக்கும் அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. கடந்த 12 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.20 லட்சம் வசூலாகியுள்ளது.

    இதே போல் மார்த்தாண்டம் போக்குவரத்து போலீசா ரும் போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    ×