என் மலர்
நீங்கள் தேடியது "26 பேரைகடித்த"
- அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டு பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
- வெறி நாயை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொட்டாரம் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொது மக்கள் 26 பேரை வெறி நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்து உள்ளது. வெறிநாய் கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டு பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
கொட்டாரம் சுற்று வட்டார பகுதியில் சுற்றி திரியும் அந்தவெறி நாய் சிவப்புநிறம் உடைய தாகவும் வாயில் கருப்பு நிறம் உள்ளதாகவும் கழுத்து பகுதியில் நீல நிறம் உள்ள கயிறு அணியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.எனவே கொட்டாரம் சுற்று வட்டார பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் அந்த வெறி நாயை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொட்டாரம் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.