என் மலர்
நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி தலைவர்கள்"
- காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
- ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மீது பாரதிய ஜனதா அரசு மேற் கொள்ளும் தாக்குதலை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறிதது கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார். காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார். எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது.
இந்த நிலையில் டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதை மறைமுகமாக தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மீது பாரதிய ஜனதா அரசு மேற் கொள்ளும் தாக்குதலை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்துள்ளது. நேரடியாகவோ அல்லது கவர்னர்கள் மூலமாகவோ இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பாராளுமன்றத்தில் காங்கிரஸ் இதை எதிர்த்துள்ளது. தொடர்ந்து எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது.
- மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார். காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.
எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது. இந்த நிலையில் டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என எம்.பி. ராகவ் சாதா அறிவித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்பதாக ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவசர சட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்க போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து, ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தி அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுக்க இருக்கிறது.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
அதேபோல் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில கட்டப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்திய முக்கிய தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது மூப்பு காரணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களும் அதையும் ஏற்றுக்கொண்டதாக ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஆனால் விஷ்வ இந்து பரிசத், இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
துறவிகள், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறையில் சாதனைப் படைத்தவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.