என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுச்சேவை"

    • அன்பகம் திருப்பதி தலைமை தாங்கி காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • தன்னலமற்ற சேவையை காமராஜர் செய்து அணைகள் பல கட்டி நீர்ப்பாசன புரட்சியை ஏற்படுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கே.வி. ஆர்.நகர், செல்லம்நகர் மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42-வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தலைமை தாங்கி காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியை தொடங்கி வைத்து கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசும்போது, 'தன்னலமற்ற சேவையை காமராஜர் வழங்கினார். அணைகள் கட்டி நீர்ப்பாசன புரட்சியை ஏற்படுத்தினார். அவரைப்போல் பொதுநல சேவையை மாணவ- மாணவிகள் செயல்படுத்த உறுதி ஏற்க வேண்டும்' என்றார். பின்னர் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தலைமை ஆசிரியர் மருதையப்பன், நிர்வாகிகள் சிட்டி பழனிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, பொன் மருதாசலம், மாரிமுத்து, தமிழன், அய்யப்ப சேவா சங்க தலைவர் சுனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன.
    • முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும் நின்ற இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு அந்த பகுதி ஸ்தம்பித்து நின்றது.

    நாகர்கோவில்:

    நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் கேக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். பண்டிகை கொண்டாட்டத்திற்காக இன்று (செவ்வாய்க்கிழ மை) குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

    இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் நிலவி வருகிறது. வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன.

    முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும் நின்ற இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு அந்த பகுதி ஸ்தம்பித்து நின்றது. அப்போது மின்னலாக ஒரு பெண் சாலையில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இறங்கினார்.

    இங்கும் அங்கும் கைகளை காட்டி வாகனங்களை நிறுத்தியும், போகச்செய்தும் சிறிது நேரத்தில் நெருக்கடி நிலையை சீர்படுத்திய அவரை அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர். ஆண்களும் பெண்களும் வாகனங்களை விட்டு இறங்காமல் காத்து நின்ற போது, வேகமாக செயல்பட்டு போக்குவரத்து நெருக்கடியை தீர்த்தவர் குறித்து விசாரித்த போது, அவர் பெண் போலீஸ் பவானி என தெரிய வந்தது.



    ஆனால் அவர் பணிபுரிவது நம் மாவட்டத்தில் அல்ல. கோவையில் பணியாற்றும் அவர், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அப்போது வேர்கிளம்பி வந்த அவர், ஸ்தம்பித்து நின்ற வாகனங்களை பார்த்து உடனடியாக களம் இறங்கி நிலைமையை சமாளித்துள்ளார். விடுமுறையிலும் பொதுச்சேவை புரிந்த அவரது செயல்பாடுகள் சமூகவலைதளங்களில் வைரலானதால் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    ×