search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச விருது"

    • இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு ‘தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி’ என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.
    • இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும்.

    2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் அடுத்தடுத்து இந்திய குறும் படங்களுக்கும், திரைப்படங்களுக்கும், நடிகருக்கும் அங்கீகாரம் கிடைத்த நிலையில் தற்பொழுது இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு 'தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி' என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.

    இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும். சந்தோஷ் சிவன் அவருக்கென ஒரு ஸ்டைலில் கதையை ஒளிப்பதிவில் காண்பிக்கும் திறனுள்ளவர். ஒரு குழந்தை எப்படி இந்த உலகை வியந்தும், புதுமையாக ஒவ்வொரு விஷயத்தை பார்க்கிறதோ. அதுப்போல தான் சந்தோஷ் சிவனின் காட்சிபதிவு இருக்கும்.

    இவரின் இந்த காட்சிபதிவு திறனுக்கு இவரின் அப்பா மிக முக்கிய காரணம். இவரது தந்தையான  சிவசங்கரன் நாயர் பிரபலமான மலையாள இயக்குனர் ஆவார். இவர் ஒரு போட்டோ ஸ்டூடியோவை சொந்தமாக வைத்து இருந்தார். சிறு வயதில் இருந்தே தன் அப்பாவுடன் போட்டோ ஸ்டூடியோக்கு செல்வதும், அவர் எடுக்கும் போட்டோ ஷூட்டுகளுக்கு உதவி செய்து வந்து, ஒளிப்பதிவின் மீது ஆர்வம் பற்றிக் கொண்டது.

    1986 ஆம் ஆண்டு வெளியான `நிதியுடே கதா' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது ஒளிப்பதிவாளர் பயணத்தை தொடங்கினார். மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா மற்றும் தளபதி படங்களில் இவரது ஒளிப்பதிவின் திறமை அபாரமாக இருக்கும்.

    ரோஜா படத்தில் வரும் இயற்கை காட்சிகள், தளபதி படத்தில் ரஜினி கதாப்பாத்திரத்திற்கும் சூரியனுக்கும் ஒரு தொடர்பு இருந்துக் கொண்டே இருக்கும், அதை மிக அழகாக காட்சி படுத்திருப்பார். இவர் ஒளிப்பதிவில் உருவான சாருக்கான் ஓடும் ரெயிலில் ஆடிய 'சையா சையா' பாடல் இன்று வரை மக்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

     

    இந்தியன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் என்ற சங்கத்தை தொடங்கி வைத்தது சந்தோஷ் சிவன் ஆகும்.அமேரிகன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் பட்டியலில் இடம் பெற்ற முதல் ஆசிய ஒளிப்பதிவாளர் பெருமை இவரே சேறும். இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் 50-மேற்பட்ட டாக்குமண்டரிகளுக்கும் ஒளிப்பதிவு ஆற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

    சர்வதேச அளவில் இதுவரை பல பிரபல ஒளிப்பதிவாளர் பெற்ற இந்த கேன்ஸ் கவுரவ விருதை நம் இந்தியாவை சேர்ந்த சந்தோஷ் சிவன் தற்பொழுது பெற்றுள்ளது மிகப் பெரிய ஒரு அங்கீகாரம் இந்திய சினிமா பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3,851 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • 50 இறுதிப்போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    உலக அளவில் கற்றல் மூலமாக சமூகத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ள தலைசிறந்த மாணவர் ஒருவரை தேர்வு செய்து ரூ.82 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய இந்த விருதை பிரிட்டனைச் சேர்ந்த செக்.ஓ.ஆர்ஜி. அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

    நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3,851 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 50 மாணவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.

    இந்த 50 இறுதிப்போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா சர்வதேச பள்ளி மாணவி வினிஷா உமா சங்கர் (16), பஞ்சாப் மாநிலம் லூதியானா சத்பால் மிட்டல் பள்ளி மாணவி நம்யா ஜோஷி (16), குஜராத் மாநிலம் காந்தி நகர் குஜராத் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்க மருத்துவக் கல்லூரி மாணவர் கிளாட்சன் வகேலா (25), ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ஸ்ரீ பதம்பத் சிங்கானியா பள்ளி மாணவர் பத்மாக்ஷ் கண்டேல்வால் (17), பஞ்சாப் மாநிலம் மொகாலி சண்டீகர் பொறியியல் கல்லூரி மாணவர் ரவீந்தர் பிஷ்னோய் (20, ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

    தனது 12-வது வயது முதல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வரும் தமிழக மாணவியான வினிஷா உமாசங்கர் சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டி, மின்சாரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் மின்விசிறி உள்ளிட்டவைகளை கண்டு பிடித்துள்ளார். பல அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் பங்கேற்று சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை பெற்றுள்ளார். தேர்வு செய்யப்பட்டுள்ள 50 பேரில் இருந்து 10 இறுதிப் போட்டியாளர்கள் அடுத்த மாதம் தேர்வு செய்யப்படுவர். இந்த 10 பேரில் இருந்து இறுதி வெற்றியாளர் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படுவார்.

    ×