என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தரின் படத்துடன் இலவச டிக்கெட்"

    • திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 முதல் 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
    • கோவில்களில் முடி காணிக்கை செலுத்து வோரின் புகைப்படத்துடன் கூடிய இலவச டிக்கெட் வழங்கும் முறை நடைமுறை ப்படுத்த ப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 7 இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது முக்கிய நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.

    திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 முதல் 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகி ன்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முடி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பக்தர்களுக்கு கியூ ஆர் கோடுடன் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. அதனை காண்பித்து முடி காணிக்கை செலுத்தி வந்தனர். இந்நிலையில் முடி காணிக்கை செலுத்த டிக்கெட் வாங்கும்போது பக்தரின் புகைப்படம், முடி இறக்கும் ஊழியரின் பெயர், அவரது பதிவு எண், இடத்தின்பெயர் , நாள், நேரம் குறிப்பிட்டு கியூஆர் கோடுடன் டிக்கெட் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்த ப்பட்டு ள்ளது.

    முடி காணிக்கை செலுத்திய பிறகு மொட்டை தலையுடன் பக்தரை புகைப்படம் எடுத்து அதில் முடி இறக்கும்செய்த தொழிலாளியின் புகைப்பட த்துடன் மற்றொரு டிக்கெட் வழங்கப்படுகிறது. அப்போது அதிலுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து கோவில் பணியாளர்கள், பக்தர்களை வெளியே அனுப்புகின்றனர்.

    மொட்டை அடிக்கும் பக்தர்கள் மட்டுமின்றி பூ முடி காணிக்கை செலுத்தும் பெண்பக்தர்களின் புகைப்படமும் எடுக்கப்படு கிறது. இந்த புதிய நடை முறையால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் அறநிலைய த்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முடி காணிக்கை செலுத்து வோரின் புகைப்படத்துடன் கூடிய இலவச டிக்கெட் வழங்கும் முறை நடைமுறை ப்படுத்த ப்பட்டுள்ளது.

    முடி காணிக்கை செலுத்தவும், முடி இறக்கும் செய்யும் ஊழியர்களுக்கும் கட்டணம் வழங்க தேவை யில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதனை யும் மீறி பக்தர்களிடம் ஊழியர்கள் பணம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. தேவஸ்தானம் சார்பில் மொட்டையடிக்கும் பெண்களுக்கு மூன்று ரூ.100 தரிசன டிக்கெட்டுகளுக்கான பாஸ் வழங்கப்படுகிறது. சிலர் இவவச டிக்கெட்டு களை பெற்று க்கொண்டு வெளியூர் பக்தர்களை வெளியிடங்களில் வைத்து மொட்டையடித்து பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.

    இதுபோன்ற முறைகேடு களை தவிர்க்கும் வகையில் தினமும் எத்தனை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்து கிறார்கள் என்பதை கணக்கிடவும், முடி இறக்கம் செய்யும் பக்தர்களிடம் பணம் கேட்கும் ஊழிய ர்களை அடையாளம் காண வும், இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்றனர்.

    ×