search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடித் திருவிழா"

    • காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பயபக்தியுடன் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
    • ஞாயிற்றுக்கிழமை காலை கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், மாலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வாரத்தை முன்னிட்டு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், முளைப்பாரி ஊர்வலம் செல்லும் திருவிழா நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெறும்.

    அவ்வகையில் இன்று ஆடி மாதம் முதல் வாரத்தை முன்னிட்டு கூழ் ஊற்றுதல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவர் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது தலையில் பயபக்தியுடன் முளைப்பாரியை சுமந்து கொண்டு கோவிலில் இருந்து சிவன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, எம்ஜிஆர் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலம் சென்று வந்தனர். 

    இதன் பின்னர், முளைப்பாரிக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், முளைப்பாரியை அல்லாரம் குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் கோடுவெளி குழந்தைவேலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை ஆடிப்பூர விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. நாளை மாலை பதிபூஜையுடன் தீபாராதனை நடைபெறுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை காலை கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், மாலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு பாரத மாதா நாடக சபாவின் தெருக்கூத்து நிகழ்ச்சி ஆசிரியர் கோவர்தனன் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாகரல் கிராம பொதுமக்களும், பக்தர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.

    ×