search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெபிட் கார்டு"

    • ஜி-பே, போன் பே மூலம் கண்டக்டருக்கு கட்டணத்தை செலுத்தலாம்.
    • மே 1-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.இ.டி.சி.) மூலம் தினமும் 1000 பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெங்களூர், மைசூர், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.

    கோடைக்காலம் என்பதால் தற்போது அனைத்து பஸ்களிலும் முழு இடங்களும் நிரம்பி விடுகின்றன. குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    இணையதளம் வழியாக எளிதாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பயணிகள் வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர்.

    இந்த நிலையில் பயணிகளுக்கு கூடுதலாக மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி பரீட்சார்த்தமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து அரசு விரைவு பஸ்களிலும் இந்த வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    1000 வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு பஸ் களிலும் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின் வழங்கப்பட்டுள்ளது. இனி டிக்கெட் எடுக்க ரொக்கமாக பணம் கொடுக்க தேவையில்லை. வங்கி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி-பே, போன் பே போன்றவற்றின் மூலம் கண்டக்டருக்கு கட்டணத்தை செலுத்தலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

    மின்னணு பண பரிவர்த்தனை திட்டத்தை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மே 1-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

    முன்பதிவு செய்யாமல் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் பஸ்சிற்குள் டிக்கெட் எடுக்கும் போது சில்லரை பிரச்சினை ஏற்படுகிறது. குடும்பமாக பயணிக்கும் போது ஆயிரக்கணக்கில் ரொக்கமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது சில்லரை கொடுப்பதில் கண்டக்டருக்கும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்படுவது உண்டு.

    இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி-பே, போன் பே போன்ற டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    டிக்கெட்டிற்காக பெரும் தொகையை கையில் எடுத்து செல்லத் தேவையில்லை. இந்த திட்ட செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் அனைத்து பஸ்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய வகை ஏ.டி.எம்.- யு.பி.ஐ. ஏ.டி.எம். என்று அழைக்கப்படுகிறது.
    • புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.

    மொபைல் சாதனங்களில் இருந்து யுனைஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளும் வசதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    சர்வதேச ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில் டெபிட் கார்டு எதுவும் இன்றி ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுக்கும் வழிமுறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அறிமுகமாகி இருக்கும் புதிய வகை ஏ.டி.எம். ஆனது "யு.பி.ஐ. ஏ.டி.எம்." என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.

    இவ்வாறு செய்யும் போது பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல், தங்களது மொபைல் போனில் இருக்கும் யு.பி.ஐ. சேவை மூலம் ஏதேனும் செயலி மூலமாக ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.

    இது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் ஃபின்டெக் வல்லுனர் ஒருவர் ஏ.டி.எம்.-இல் யு.பி.ஐ. பயன்படுத்தி எப்படி பணம் எடுக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார். இந்த வீடியோவுக்கு பூயூஷ் கோயல், "யு.பி.ஐ. ஏ.டி.எம்.: ஃபின்டெக் எதிர்காலம் இங்கே தான் இருக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புதிய வகை ஏ.டி.எம். இயந்திரத்தை தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் மற்றும் என்.சி.ஆர். கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இந்த யு.பி.ஐ. ஏ.டி.எம். வழக்கமான ஏ.டி.எம். போன்றே இயங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயன்படுத்தும் போது, அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. 

    • கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்து நிற்காமல் உடனே செல்ல வசதியாக டிக்கெட் பெறுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
    • கேட்டில் கார்டை காண்பிக்கும் போது உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க பல்வேறு வசதிகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    டிக்கெட் கவுண்டர்களில் கட்டணம் செலுத்தி டோக்கன் பெறுதல், பயண அட்டை, கியூஆர் கோடு மற்றும் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெற்று செல்லுதல் போன்ற நடைமுறைகள் தற்போது உள்ளன.

    பயணிகள் சிரமமில்லாமல் எளிதாக டிக்கெட் தானியங்கி கேட்டுகளில் செல்ல வசதியாக புதிய தொழில் நுட்பங்கள் கையாளப்படுகின்றன. மெட்ரோ ரெயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்து நிற்காமல் உடனே செல்ல வசதியாக டிக்கெட் பெறுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

    வார நாட்களில் பயணிகள் அதிகளவில் பயணிக்கிறார்கள். தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

    இந்நிலையில் மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணியில் அமைகின்ற ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயில் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் கூடுதல் வசதிகளை நிர்வாகம் தர இருக்கிறது.

    கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதிலாக பயணிகள் தங்கள் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டை காண்பித்து பயணம் செய்யும் நவீன தொழில் நுட்பம் கையாளப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் நுழைவு வாயலில் டெபிட், கிரெடிட் கார்டை காண்பித்தால் போதுமானது. கட்டண தொகை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதோடு செல்போனில் இது பற்றிய விவரங்கள் வரும்.

    வங்கி அட்டையை பயன்படுத்தும் முறையில் பயணிகள் காத்து நிற்க தேவையில்லை. கேட்டில் கார்டை காண்பிக்கும் போது உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×