என் மலர்
நீங்கள் தேடியது "கர்நாடக அணை"
- கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுக்கு வர 48 மணிநேரம் ஆகும்.
- நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
முதலில் வினாடிக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தேவைக்கேற்ப அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறித்த காலத்தில் பெய்யாததால் நீர்வரத்து குறைந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.94 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 154 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்மட்டம் குறைந்து வருவதால் அணைக்குள் மூழ்கி இருந்த கிறிஸ்துவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை ஆகியவை வெளியே தெரிகிறது. மேலும் மேட்டூர் அணையின் வலதுகரை வறண்டு காணப்படுகிறது.தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 3 வாரங்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்யத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடியும், கபினி அணையில் இருந்து 2ஆயிரத்து 487 கனஅடியும் என மொத்தம் 4 ஆயிரத்து 987 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு நேற்றிரவு திறக்கப்பட்டது.
பொதுவாக பருவமழை காலங்களில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நேரங்களில் கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுக்கு வர 48 மணிநேரம் ஆகும். தற்போது மழை இல்லாததால் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.
காவிரி ஆற்றில் ஆங்காங்கே வறட்சியின் காரணமாக பாளம், பாளமாக நிலம் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வர 6 மணிநேரம் ஆகும். எனவே புதன்கிழமை அதிகாலைக்குள் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும். தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.
- ஒரே நாளில் அணை நீர்மட்டம் 5 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
- கபினி அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர்:
கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று காலை 29 ஆயிரத்து 552 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மாலையில் 44 ஆயிரத்து 436 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து 5,452 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது.
124 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 92 அடியாக இருந்த நிலையில் நேற்று 97.5 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் அணை நீர்மட்டம் 5 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
இதேபோல் கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 79.50 அடியாக இருந்தது. அணை நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 21,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களாக 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று முதல் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரத்து 452 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்ட நீர் இன்று பிற்பகல் தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டலு வந்து சேருமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் வந்து சேரும் பட்சத்தில் ஒகேனக்கல்லில் இன்று பிற்பகல் முதல் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டுலு பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் 6 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் கர்நாடக அணைகளில் இருந்து விடப்பட்ட தண்ணீர் இன்று இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என தெரிகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 119 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 66.86 அடியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இனிவரும் நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூருக்கு வந்து சேரும் என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
- கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
- இதனால் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவான 124 அடியில் தற்போது 100 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரத்து 25 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 2,680 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணை தனது மொத்த கொள்ளளவான 84 அடியில் தற்போது 80 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 11,250 கனஅடி தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 13 ஆயிரத்து 930 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று ஒகேனக்கல்லை வந்தடைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
அதன்படி நேற்று மாலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது
- கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை.
காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தரா மையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவிரி நீர் திறப்பு 9,300 கன அடியாக அதிகரித்துள்ளது.
- அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு 14,300 கன அடியாக அதிகரிப்பு.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியதன் எதிரொலியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 5,300 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 9,300 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இரு அணைகளில் இருந்தும் தற்பொழுது நீர் வெளியேற்றத்தின் அளவு 14,300 கன அடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 720 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
சேலம்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 17 ஆயிரத்து 960 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரத்து 985 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 2 அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கபினி அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 970 கன அடியாகவும், நீர்மட்டம் 75.72 அடியாகவும் உள்ளது.
அதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 720 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 491 கன அடியாகவும், நீர்மட்டம் 103.20 அடியாகவும் உள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 11 ஆயிரத்து 720 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 11 ஆயிரத்து 22 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வெகுவாக சரிந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 978 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
நேற்று காலையில் 55.75 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 55.48 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட வாய்ப்புள்ளது.
- 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
- கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதத்துக்கு குறையாமலும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதமும் என மொத்தம் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7,436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 7,128 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 6, 436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது
அதுபோல் கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் 7,436 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
- நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படவில்லை. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6,181 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 1000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இன்று காலை இந்த 2 அணைகளில் இருந்தும் நீர் திறப்பு 6,753 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6,149 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3,988 கன அடியாகவும், நீர்மட்டம் 99.06 அடியாகவும் உள்ளது. இதேபோல் கபினி அணையில் இருந்து 604 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 274 கன அடியாகவும், நீர்மட்டம் 73.62 அடியாகவும் உள்ளது.
இந்த நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலையில் 6,430 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,060 கன அடியாக அதிகரித்தது.
இன்று காலையில் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 6,428 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று காலை 8 மணி அளவில் 48.23 அடியாக நீடித்த நீர்மட்டம் இன்று காலையில் 47.99 அடியாக சரிந்தது.
இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற்போது முழு மையாக வெளியே தெரிகிறது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையில் 16.56 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 10.56 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். மீதியுள்ள தண்ணீர் குடிநீர், மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் தற்போது நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை, நீர்வரத்து 3686 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் தற்போது நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது. அதேபோல் கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 4726 கன அடியாக இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் தற்போதைய நீர்மட்டம் 75.82 அடியாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 2 ஆயிரத்து 787 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
- கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 4,674 கன அடி திறப்பு
- கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சேலம்:
தமிழகம்-கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக போதிய மழை பெய்யாத காலக்கட்டத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் 15 நாட்களுக்கு திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஏற்கனவே இதுபோல் தண்ணீர் திறந்து விட அறிவுறுத்தியும் கர்நாடக அரசு கண்டு கொள்ளவில்லை. கர்நாடக அரசு பெயரளவுக்கு கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்திற்கு நேற்று முன்தினம் முதல் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 3,834 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. 2-வது நாளாக நேற்று 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு 4 ஆயிரத்து 674 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இன்றும் அதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது மண்டியா மாவட்டம் கண்ணம்பாடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2,674 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,336 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது.
அதேபோல மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு உள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 75.70 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர் 2,799 கன அடி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டுகிறது. இந்த மழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 844 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 938 கன அடி நீர் வந்தது. இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 3,367 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று முன்தினம் 39.75 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 39.13 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் மேலும் சரிந்து 38.57 அடியானது.
- கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 384 கனஅடி தண்ணீர் வருகிறது.
பெங்களூரு:
கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று 4-வது நாளாகவும் வினாடிக்கு 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 7ஆயிரத்து 134 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த அணையில் இருந்து 3ஆயிரத்து 837 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 384 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
- அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
- நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 1180 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 6ஆயிரத்து 75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.