search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மகளிர் அணி"

    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
    • வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று நடந்தது.

    பாரிஸ்:

    பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று இன்று நடைபெற்றது. இதில் 72 அம்புகள் எய்யப்பட்டன.

    இதில் தென் கொரியா 2016 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், சீனா 1996 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், இந்தியா 1983 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்தன.

    இதன்மூலம் வில்வித்தை பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    • பாட் கம்மின்ஸ் மற்றும் அணியின் பயிற்சியாளர், உதவிப் பணியாளர்கள் யோசிப்பதைப் போன்று வேறு யாரும் யோசித்து நான் பார்த்ததில்லை.
    • உன்னால் முடிந்தவரை அதிரடியாக விளையாடு என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

    இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரார்ங்கனைகளாக ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இதில் ஷஃபாலி வர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஸ்மிருதி மந்தனா - தயாளன் ஹேமலதா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா 33 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 30 ரன்களிலும் ஹெமலதா 37 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்தில் இருந்த ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 28 ரன்களைச் சேர்த்தார்.

    இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் மற்றும் நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் திலாரா அக்தர், சோபனா மோஸ்ட்ரி, ருபியா அக்தர், கேப்டன் நிகர் சுல்தானா உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    அதன்பின் இணைந்த ரிது மோனி - சோரிஃபா கதும் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

    இதில் சிறப்பாக விளையாடிய ரிது மோனி 37 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய சொரிஃபா கதும் 28 ரன்களையும், ரபேயா கான் 14 ரன்களை சேர்த்தனர்.

    இதனால் வங்கதேச அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    • இந்திய மகளிர் அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.
    • 3-வது இடத்துக்கான போட்டியில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்த ஆண்டில் பாரிசில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவதற்கான எஃப்எச் மகளிர் ஒலிம்பிக் குவாலிபயர் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இதில், இந்தியா - ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்த நிலையில் போட்டியானது 2-2 என சமநிலை அடைந்தது. இதனால் பெனால்டி முறை பின்பற்றப்பட்டது. இதில் 4-3 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுடன் இணைந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.

    தோல்வியடைந்தாலும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற இந்திய அணிக்கு மற்றொரு வாய்ப்பு இருந்தது. அது என்னவென்றால் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பானை இந்தியா வீழ்த்த வேண்டும்.

    இந்நிலையில் இந்தியா- ஜப்பான் அணிகள் இன்று மோதியது. இதில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஒலிம்பிக் கனவு இதோடு முடிவுக்கு வந்தது. 

    • 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
    • நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    மிர்புரி:

    இந்தியா-வங்காளதேசம் மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.

    பரபரப்பான இந்த ஆட்டம் வெற்றி, தோல்வியன்றி 'டை'யில் முடிவடைந் தது. முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 49.3 ஓவரில் 225 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது.

    இந்தப் போட்டி'டை'யில் முடிந்ததில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனது. இதனால் இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன. முதல் ஆட்டத்தில் வங்காள தேசமும் (40 ரன்), 2-வது போட்டியில் இந்தியாவும் (108 ரன்) வெற்றி பெற்று இருந்தன.

    3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இந்நிலையில் நடுவர்களின் முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளித்ததாக இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் குற்றம் சாட்டியுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    இரு அணிகளுமே மிகச் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர். வங்காள அணியினர் நன்றாக பேட்டிங் செய்தனர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆடினார்கள். இடையில் நாங்கள் கொஞ்சம் ரன்களை கொடுத்து விட்டோம்.

    நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பரிசளிப்பு விழாவின்போது வங்காளதேச கேப்டனும், வீராங்கனைகளும் அவமரியாதை செய்தனர்.

    இவ்வாறு ஹர்மன் பிரீத் கவூர் கூறியுள்ளார்.

    ×