search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநாதசுவாமி"

    • முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.
    • 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் ஸ்ரீராமர்,சீதை,அனுமன் வழிபட்ட சிவாலாயமாகும். இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. அமாவாசை நாட்களில் பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.

    இந்த நிலையில், இன்று சித்திரை மாத சர்வ அமாவா சையை முன்னிட்டு அதி காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதன் பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் விட்டுச்செல்லும் துணிகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனுக்குடன் அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

     ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் கிழக்கு வாசல் பகுதியில் 500 மீட்டர் வரை தற்காலிக நிழல் தரும் பந்தல் அமைக்கப்பட்டது.

    ராமேசுவரம் ராம நாதசுவாமி கோவிலுக்கு நாள் தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர்.மேலும் திருவிழா நாட்கள் அமாவாசை போன்ற காலங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். கிழக்கு வாசல் வழியாக சுவாமி தரி சனத்திற்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் பக்தர்கள் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் கிழக்கு வாசல் பகுதியில் 500 மீட்டர் தூரம் வரையில் நிழல் தரும் வகையில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் காலணி அணி யாமல் செல்லும் நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளுக்கு நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராம நாதசுவாமி கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பர்வதவர்த்தினி அம்மன், ராமநாத சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரு கின்றனர்.

    விழாவின் 12-வது நாளான நாளை மாலை கோவிலின் தெற்கு நந்தவனத்தில் அமைக்கப் பட்டுள்ள மண்டபத்தில் திருக்கல்யா ணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்று கோவிலுக்கு சொந்த மான ராமதீர்த்தம்கரை மண்டகபடியில் மாற்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மண்டக படிக்கு 4 ரத வீதி, நகர் பகுதி வழியாக வந்து சேர்ந்தார். அங்கு அம்பா ளுக்கு சிறப்பு பூஜைகள் தீபாரா தனை நடந்தது.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதனை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மன் இன்று பிற்பகலில் மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளுவார். பின்னர் ராமநாதசுவாமி- பிரியா விடை, பர்வதவர்த்தினி அம்மன், ராமநாதசுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து நாளை அதிகா லையில் ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளுவர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை மாலை 6 மணிக்கு மேல் ராமநாத சுவாமி- பர்வத வர்த்தினி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ×