search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்"

    • அமெரிக்கவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற ஸ்டாலின் அந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்
    • தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலினின் புகைப்டபத்தை பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சிகாகோ சென்றார்.

    சிகாகோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபின் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை 'சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலினின் புகைப்டபத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி, அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்து எங்கள் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த அபாரமான வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது." என தெரிவித்துள்ளார். 

    • உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர்.
    • அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது.

    சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் எக்ஸ் [ட்விட்டர்] தளம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சற்று நேரத்திற்கு முடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனை டவுன்-டிடெக்டர் என்ற இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர்.

    திடீரென எக்ஸ் தளம் வேலை செய்யாமல் முடங்கிப்போக என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையே எக்ஸ் தளத்தில் என்ன பிரச்சனை என்ற குழப்பம் பலரிடையே ஏற்பட்டது. இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது. 

    • ஆனந்த் மஹிந்திரா சொந்தமாக அதிக வெளிநாட்டு சொகுசு கார்களையே வைத்துள்ளார் என்றும் அதையே அவர் பயன்படுத்துகிறார் என்ற சர்ச்சை எழுந்தது
    • தனது தாய் ஸ்கை ப்ளூ பிரிமியர் பத்மினி [sky-blue premier] காரில் தான் தனக்கு கார் ஓட்ட சொல்லித்தந்தார் என்று தெரிவித்தார்

    தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சொந்தமாக அதிக வெளிநாட்டு சொகுசு கார்களையே வைத்துள்ளார் என்றும் அதையே அவர் பயன்படுத்துகிறார் என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியது சர்சையானது. உள்நாட்டு தயாரிப்பான அவரது மஹிந்திரா கார்களை பயன்படுத்தாமல் வெளிநாட்டு கார்களை பயன்படுத்துவது ஏன் என ஆனந்த் மஹிந்திராவிடம் நபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    மேலும் வெளிநாட்டு கார்களான பெராரி கலிபோர்னியா T, போர்ச்சே 911, மெர்சிடிஸ் பென்ஸ் SLS AMG உள்ளிட்ட கார்களை பயன்படுத்துவதாக புகைப்படங்களுடன் வெளியான கட்டுரை ஒன்றின் ஸ்க்ரீன்சாட்டை அந்த நெட்டிசன் பகிர்ந்திருந்தார்.

    மேக் இன் இந்தியா பொருட்களைப் பயன்படுத்த தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆனந்த் மஹிந்திரா அந்த நெட்டிசனின் பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இந்த புதிய சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவரது பதிவில், 1991 இல் மஹிந்திராவில் பொறுப்பு வகிக்கத் தொடங்கியது முதல் மஹிந்திரா கார்களையே பயன்படுத்தி வருகிறேன், எனக்கு சொந்தமான கார்கள் அனைத்தும் மஹிந்திரா கார்கள் மட்டும்தான் என்றும் தற்சமயம் ஸ்கார்பியோ N மாடல் மஹிந்திரா காரை பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

     

    வெளிநாட்டு கார்களுடன் நிற்கும் அந்த புகைப்படங்கள் மஹிந்திரா படிஸ்டா மின்சார ஹைப்பர் கார் அறிமுகத்தின்போது மான்டேர் கார் வார நிகழ்வில் [Monterey Car Week] எடுக்கப்பட்ட புகைப்படம் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும்தனது தாய் ஸ்கை ப்ளூ பிரிமியர் பத்மினி [sky-blue premier][Fiat] காரில் தான் தனக்கு கார் ஓட்ட சொல்லித்தந்தார்என்றும், அதற்கு ப்ளூ பேர்ட்  (BlueBird) என்று தனது தாய் பெயர் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். 

     

    • பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    • பிரேசில் நாட்டில் எக்ஸ் ஆப்பை 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்

    பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து தளத்தில் பாலிசிகளில் பல திருத்தங்களை மேற்கொண்டார்.

    சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

    இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

    பிரேசில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதனையடுத்து, பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 24 மணிநேரத்திற்குள் எக்ஸ் தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.

    மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் எக்ஸ் ஆப்பை தடுக்கும் தொழில்நுட்பத் தடைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் VPN போன்றவற்றை பயன்படுத்தி எக்ஸ் ஆப்பை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தெரிவித்தார்.

    பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

    பிரேசில் நாட்டில் எக்ஸ் ஆப்பை 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.
    • அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

    பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து தளத்தில் பாலிசிகளில் பல திருத்தங்களை மேற்கொண்டார். உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக எக்ஸ் திகழ்ந்து வரும் நிலையில் 24 மணி நேரத்துக்குள் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

    இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

    • செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ளது
    • கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்

    சமூக ஊடகமாகவும் செய்தி பரிமாற்ற செயலியாகவும் விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  மேலும் பயங்கரவாத்துக்கு துணை நிற்பதாவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் டெலிகிராம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் இந்த கைது குறித்து மற்றொரு சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து தனது பதிவில் குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், 2030 ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவில் மீம் [MEME] ஒன்றுக்கு லைக் போட்டால் கூட உங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாவெல் துரோவ் பிரான்சில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு எக்ஸ் தளத்தின் ஏஐ தொழில்நுட்பமான GORK அளித்த பதிவையும் பகிர்ந்துள்ளார். மேலும் பாவெலுக்கு 20 வருடன் சிறை தண்டனை கிடைக்கும் என்று பயனர் ஒருவரின் பதிவை பகிர்ந்து, 20 ஆண்டுகளா.. என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கிடையே பாவெல் துரோவின் கைது குறித்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. பெருமபாலான சமூக வலைத்தளங்களை மூலமும் தனி நபரோ குழுவோ சட்டவிரோதமான செயல்களுக்குப் பயன்படுத்துவது அவ்வப்போது வெளிச்சத்து வரும் நிலையில், டெலிகிராமை மட்டும் குறிவைப்பது, பாவெல் துரோவ் ரஷிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலா என்ற கேள்வியும் நெட்டிசன்கள் எழுந்துள்ளது. மேலும் எக்ஸ் தலத்தில் பாவெல் துப்ரோவ் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

    • அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
    • இதற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தீர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடத்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இதற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். கோட் சூட்டுடன் மிடுக்காக மேடையில் பதவியேற்பதுபோன்ற தனது ஏஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ள மஸ்க், 'சேவையாற்ற நான் விரும்புகிறேன்' [I am willing to serve] என்று பதிவிட்டுள்ளார்.

    அந்த புகைப்படத்தில் DOGE [Department of government efficiency] என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக அரசின் செயல்திறனை ஊக்குவிக்கும் அமைச்சகம் என்று ஒன்றை உருவாக்கி அதன் மந்திரியாக எலான் மஸ்க்கை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பலர் கருத்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • Something big soon India என்று ஒற்றை வரியில் ஹிண்டன்பெர்க் நிறுவனம் பதிவிட்டுள்ளது
    • அதானி குழுமமானது தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பங்கு முறைகேடு மற்றும் கணக்கியல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.

    இந்தியாவுக்கு விரைவில் பெரிய அளவில் எதோ ஒன்று காத்திருப்பதாகப் அமரிக்காவில்  இயங்கி வரும் பிரபல நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலைதனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் Something big soon India என்று ஒற்றை வரியில் ஹிண்டன்பெர்க் நிறுவனம் பதிவிட்டுள்ளது அனைவரிடையேயும் பேசுபொருளாகியுள்ளது.

    முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பெரு நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளைக் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் ஹிண்டன்பெர்ஜ் ஆய்வு நிறுவனம் , இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமமானது தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பங்கு முறைகேடு மற்றும் கணக்கியல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.

    பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை உயர்த்திக் காண்பித்து அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் அதானி குழுமம் ஈடுபட்டதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையானது இந்திய அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    ஹிண்டன்பர்க்கின் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை மாபெரும் சரிவை சந்தித்தன. தங்களின் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் குற்றம்சாட்டியது. ஆனால் தங்கள் அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் வழக்குகூட தொடரலாம் என்று ஹிண்டன்பெர்க் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது. இந்தநிலையில்தான் தற்போதைய இந்த பதிவு அதானி குழுமம் பற்றியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

    • அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருகின்றனர்.
    • கையில் டெத் ஆப் புளூ ஸ்க்ரீன் கணினியுடன் பில் கேட்ஸ் நடந்து வருகிறார்.

    இதுவரை வந்த ஏஐ வீடியோக்களிலேயே சிறந்த வீடியோ இதுதான் என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. அந்த வீடியோவில், பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக  சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருகின்றனர்.

    கைதி உடையில் டொனால்டு டிரம்ப், சக்கர நாற்காலியில் ஜோ பைடன், ஒபாமா, மார்க் ஸுகர்பெர்க், நரேந்திர மோடி, கமலா ஹார்ஸ், ஸேனா அதிபர் ஜி ஜிங்பிங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் ஆண்டவர் என அனைவரும் வரிசையாக நடந்து வருகின்றனர். 

    இறுதியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், கையில் டெத் ஆப் புளூ ஸ்க்ரீன் கணினியுடன் மைக்ரோசாப் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க்கும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். ஏஐ தொழிநுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. 

    • மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது.
    • பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

    அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது. உலக அளவிலும் சொற்ப தலைவர்களுக்கே இந்த அளவிலான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

     

    பிரதமர் மோடி, கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ்[ட்விட்டர்] தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் தற்போது 10 கோடி ஃபாலோயர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    மஸ்க் தனது எக்ஸ் பதிவில், உலகில் அதிகம்  பின்தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மோடியை எக்ஸ் [ட்விட்டர்] தளத்தில் பின்தொடரும் கணக்குகளில் 60 சதவீதம் போலியானவை என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும்

    அமெரிக்காவைச் சேர்ந்த  உலக பணக்காரரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.

    விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

     

     

    கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி, பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பாலினம் மற்றும் பெயரை பள்ளித் தரவுகளில் மாற்றினால் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. இது LGBTQ+ மாணவர்களுக்கான தனியுரிமையாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தாலும், இதற்கு முன்பு சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும்  பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    அதன்படி தற்போது கலிபோர்னியாவின் ஹாத்ரோன் [HAWTHRONE] பகுதியில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களும் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை  தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் மாகாணங்கள் சுயாட்சி பெற்று இயங்கிவருவது  குறிப்பிடத்தக்கது.

     

    • கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார்.
    • சமூக வலைத்தளங்களில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி ஒருவர்.

    இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

    அந்த வகையில்பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. இது, மற்ற அரசியல் தலைவர்களை விடவும் பிரதமர் மோடி தனித்து நிற்பதை காட்டுகிறது.

    இந்திய அரசியல் தலைவர்களில் ராகுல் காந்திக்கு 26.4 மில்லியன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 19.9 மில்லியன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 7.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆர்ஜேடியின் லாலு பிரசாத் யாதவ் 6.3 மில்லியன், தேஜஸ்வி யாதவ் 5.2 மில்லியன், NCP தலைவர் சரத் பவாருக்கு 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளார்கள்.

    பிரதமர் மோடி, கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார். 10 கோடி பாலோவர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    எக்ஸ் தளத்தில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் இடம் பிடித்துள்ளார்.

    ×