search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு வலை"

    • இவர் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் பழகி வந்துள்ளதாக தெரிகிறது.
    • அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் வ.உ.சி. நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகள் பவதாரணி (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற வாலிபருடன் பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பவதாரணி வீட்டை விட்டு மாயமானார். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது பவதாரணியை கிஷோர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து பழனிசாமி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பள்ளியில் இருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மாணவி அதன்பிறகு வெளியே சென்றவர் மாயமானார்.
    • மாணவியின் தாய் அப்பகுதியை சேர்ந்த வாலிபரின் மீது அளித்த கடத்தல் புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்த சன்னாசிராஜா மகள் சங்கீதா(17). இவர் கெங்குவார்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளியில் இருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு வெளியே சென்றவர் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை். இதுகுறித்து மாணவியின் தாய் மகேஸ்வரி தேனி போலீசில் புகார் அளித்தார். அந்தபுகாரில் தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் என்பவர்தான் தனது மகளை கடத்திச்சென்றிருக்ககூடும். எனவே அவரை கண்டுபிடித்து எனது மகளை மீட்டு தரவேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் சுருளிபட்டி 2-வது வார்டு வடக்குதெருவை சேர்ந்த சிரஞ்சீவி மகள் யுகேஸ்வரி(18). இவர் கம்பத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் கவுசல்யா ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் மாரிமுத்து தகராறு செய்ததை மாமியார் பேசியம்மாள் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மாமியார் என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தினார்
    • பலத்த காயங்களுடன் அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்

    நிலக்கோட்ைட:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள அய்யங்கோ ட்டையை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகள் பிரியாவுக்கும், நிலக்கோட்ைட பெரியார் நகரை சேர்ந்த மாரிமுத்து (32) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    வீட்டில் மாரிமுத்து தகராறு செய்ததை மாமி யார் பேசியம்மாள் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மாமியார் என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தினார். பலத்த காயங்களுடன் அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×