என் மலர்
நீங்கள் தேடியது "விரிவுரை"
- கல்லூரியில் வணிகவியல் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
- மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார்.
மதுரை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வணிகவியல் நிறுமச் செயலரியல் துறை சார்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயராகவன் வாழ்த்திப் பேசினார்.
மாணவர் லோகேஷ் வரவேற்றார். விவேகானந்தர் கல்லூரி துணை முதல்வர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்திருந்து வேலை வாய்ப்பு அல்லது தொழில் முனைவோராக முன்னேறுவது குறித்து விளக்கிப் பேசினார். முடிவில் மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரங்கராஜ், பியூலா செய்திருந்தனர்.