என் மலர்
நீங்கள் தேடியது "பிரேன் சிங்"
- போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது
- அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைய இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வன்முறை தொடர்வதால் அண்டை மாநிலங்களில் மணிப்பூர் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரமில் 13 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மிசோரமில் குகி-ஜோ பழங்குடியினர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா கலந்து கொண்டார். இந்த பேரணியின் போது மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் குறித்து அவதூறாக பேசப்பட்டுள்ளது.
மிசோ பழங்குடியினருக்கு குகி-ஜோ பழங்குடியினர் மற்றும் மியான்மரின் சின் மக்களுடன் நல்ல தொடர்பு உள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின் மக்கள் அகதிகளாக மிசோரம் மாநிலத்தில் உள்ள முகாமில் உள்ளனர்.
மிசோரம் மாநில முதல்வர் பேரணியில் கலந்து கொண்ட நிலையில், அடுத்த மாநில உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுறித்து பிரேன் சிங் கூறியதாவது:-
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது. மணிப்பூர் மாநிலத்தில் வாழும் குகி சமுதாயத்தினருக்கு எதிராக மணிப்பூர் அரசு செயல்படவில்லை.
அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது. மணிப்பூர் ஒருமைப்பாட்டை அழிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் வகையில் ஆயுதமேந்தியவர்களுக்கும் அரசுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. எனக்கு எதிராக மிசோரம் பேரணியில் அவதூறு குரல் எழுப்பியது காட்டுமிராண்டி தனமானது.
மற்றொரு மாநிலத்தின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மிசோரம் மாநில முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பிய யூனியன் கள நிலவரம் தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றி, அதிகாரிகள் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்தார்.
- பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது
- தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர செயல் அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனம் கிளம்பியது. தற்போது மணிப்பூரில் அமைதி திரும்பிய வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் மூன்று முக்கிய விசயங்கள்தான் மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்ப்பலிக்கு முக்கிய காரணம் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
77-வது சுதந்திர தினவிழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரேன் சிங் பேசியதாவது:-
'குறிப்பிட்ட தவறான புரிதல்கள், சுயநலனுக்கான செயல்கள், நாட்டை சீர்குலைப்பதற்கான வெளிநாட்டு சதி ஆகியவை மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாமலில் வசிக்க காரணமாகிவிட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. சொந்த வீட்டிற்கு உடனடியாக செல்ல முடியாதவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு மாற்றப்படுவார்கள். தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ளதற்கு எதிராக அரசு எதையும் செய்யவில்லை. யாரும் அவ்வாறு செய்ய முடியாது.
ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டத்தை வழங்கவும், மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
- லடாக் சென்றிருந்த ராகுல் காந்தி மணிப்பூர் குறித்து பேச்சு
- மக்கள் உயிர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது
மணிப்பூரில் அமைதி திரும்ப பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த, அம்மாநில முதல்வர் பிரேன் சிங், இன்று மணிப்பூரில் நடைபெறும் அனைத்தும், காங்கிரசால் உருவாக்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். இதுகுறித்து பிரேன் சிங் கூறியதாவது:-
நாங்கள் அவருடைய ஆலோசனையை எப்போதும் எடுத்துக்கொள்கிறோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் பேச்சை கேட்டபிறகு மணிப்பூரில் அமைதி நிலவுகிறது. தற்போது இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு மற்றும் மீண்டும் குடியேற்றத்திற்கான வழக்கமான பணி. இதற்கான உள்துறை அமைச்சரின் ஆலோசனையைப் பெறவே நாங்கள் வந்துள்ளோம்.
லடாக்கில் இருக்கும்போது ராகுல் காந்தியால் எப்படி மணிப்பூர் குறித்து நினைக்க முடியும்?. நீங்கள் லடாக் சென்றீர்கள் என்றால், லடாக்கை பற்றி பேச வேண்டும். இன்று மணிப்பூரில் நடப்பது அனைத்தும், காங்கிரசால் உருவாக்கப்பட்டவை. மனித உயிர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது'' என்றார்.
பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையின்போது, "ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுடன் இருக்கிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைதி மட்டுமே தீர்வு. மணிப்பூரில் அமைதி நிலவ மாநில மற்றும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன" என்றார்.
- வெள்ளிக்கிழமை பாதுகாப்புப்படை வீரர்கள்- கும்பல் இடையே சண்டை
- 3 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் காயம் அடைந்தனர்
மணிப்பூரில் முற்றிலும் அமைதி திரும்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதிலும், ஆங்காங்கே சில இடங்களில் வன்முறை நடைபெற்ற வண்ணம் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை மத்திய பாதுகாப்புப்படைக்கும் ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று மணிப்பூர் மாநில மந்திரி சபை கூட்டம், அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது வெள்ளிக்கிழமை சம்பவத்தில் மத்திய பாதுகாப்புப்படையின் தேவையற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விசயத்தை மத்திய அரசிடம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பதற்றம் அதிகமாக இடங்களில் சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தின்படி, ஆயுதப்படைக்கான அதிகாரத்தை விரிவு படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதியில் வீரர்களுக்கான அதிகாரம் மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வன்முறையின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு நான்கு மாதத்திற்குள் நிரந்தரமான வீடுகள் அமைத்துக் கொடுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு 75 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரேன் சிங் தலைமையிலான பா.ஜனதா அரசு, முதன்முறையாக பாதுகாப்புப்படை மீது விமர்சனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மணிப்பூரில் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது.
- வெடிக்காத மோட்டார் வெடிகுண்டு ஒன்று கிடந்தது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடந்த ஆண்டு மே மாதம் கலவரமாக வெடித்தது. அம்மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. சமீபத்தில் மீண்டும் கலவர சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
இந்த நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங்கின் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் லுவாங்ஷாங்பாம் பகுதியில் முதல்-மந்திரி வீடு அருகே வெடிக்காத மோட்டார் வெடிகுண்டு ஒன்று கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.
நேற்றிரவு ராக்கெட் மூலம் வெடிகுண்டு வீசப்பட்ட தாகவும், ஆனால் அது வெடிக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
- மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள்.
மணிப்பூரில் முதல்வர் பைரன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 இல் குக்கி மெய்தேய் இங்குளுக்குக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இடையில் சற்று ஓய்ந்த கலவரம் ஆயுதமேந்திய போராட்ட குழுக்களால் கடந்த வருட இறுதியில் மீண்டும் தீவிரமடைந்தது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொல்லப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாகின. இந்நிலையில் மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.
இவை சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்ததால் கடந்த வருட இறுதியில் மீண்டும் கலவரம் மூண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குக்கி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், தனது முதல்வர் பதவியை பைரன் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
- சட்டசபை கூட்டத்தொடர் ரத்து.
- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் பிரேன்சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு கடந்த 2023 மே மாதத்தில் இருந்து மைதி மற்றும் குகி இன மக்கள் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.60 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் தங்களது வீடுகளை விட்டு இடம் பெயர்ந்தனர். அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
குகி-மைதி இன மக்கள் இடையேயான கலவரத்தை முதல்-மந்திரி பிரேன்சிங் தூண்டியதாக குகி இனத்தவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் பேசிய ஒரு ஆடியோவும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பிரேன்சிங்கின் குரல் பதிவை மத்திய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங் நேற்று மாலை பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க இருந்த நிலையில் அவர் பதவி விலகியது மணிப்பூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள், மாநில பா.ஜ.க. தலைவர் ஏ.ஷர்தா ஆகியோருடன் கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். புதிய முதல்-மந்திரி பதவி ஏற்கும் வரை பொறுப்பு முதல்-மந்திரியாக நீடிக்குமாறு அவரிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.
இன்று தொடங்க இருந்த சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
பிரேன் சிங் தலைமையின் மீது பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் இருந்த தாகவும் கூறப்பட்டது.காங்கிரஸ் நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏக்களே அதற்கு ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு எடுத்தார்.
பிரேன்சிங் கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் திரும்பியதுமே அவர் ராஜினாமா செய்தார்.
மணிப்பூர் முதல்-மந்திரி பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளதால் இன்று நடைபெற இருந்த சட்டசபை கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக கவர்னர் அஜய்குமார் பல்லா அறிவித்துள்ளார்.
இந்திய அரசிய லமைப்பின் பிரிவு 174-ன் பிரிவு (1) -ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன் படுத்தி, 12-வது மணிப்பூர் சட்டசபையின் 7-வது கூட்டத்தொடரை கூட்டுவதற்கான முந்தைய உத்தரவு இன்னும் தொடங்கப்படாத நிலையில், உடனடியாக செல்லாது என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்" என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.
அங்கு அனைத்துகளும் அரசி யல் மாற்று வழிகள் ஆய்வு செய்யப்படும். புதிய முதல்-மந்திரிக்கு உரிமை கோர போதுமான அளவு பா.ஜனதாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதன் பிறகும் புதிய அரசு அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படாவிட்டால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா டெல்லிக்கு அவசர மாக செல்கிறார். மத்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் டெல்லி செல்கிறார். மணிப்பூரில் சட்டசபை பதவிகாலம் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
இதற்கிடையே பிரேன்சிங் விலகலால் மணிப்பூரில் மைதி- குகி இன மக்களிடையே அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று மத்திய அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது.