என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயியிக்கு"
- கொல்லிமலை அருகே வாழவந்தி நாடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி விவசாயியான இவர் நேற்று தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொல்லிமலை அருகே வாழவந்தி நாடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (51). விவசாயியான இவர் நேற்று தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை பெற்று வரும் பழனிசாமி உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.