search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஞ்ஞாசியார் திருவிழா"

    • முதல் நாள் விழாவில் குருவிகுளம் பங்குத்தந்தை சந்தியாகு புனித இஞ்ஞாசியார் கொடியினை ஏற்றி வைத்தார்.
    • திருப்பலி முடிந்ததும் மதியம் அன்னதானம் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சம்சிகாபுரத்தில் தூய லொயோலா இஞ்ஞாசியார் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாள் விழாவில் குருவிகுளம் பங்குத்தந்தை சந்தியாகு புனித இஞ்ஞாசியார் கொடியினை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்.

    2-ம் நாள் துரைச்சாமிபுரம் பங்குத்தந்தை பவுல் ஸ்டாலின் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு சப்பர பவனி நடைபெற்றது. 3-ம் நாளான நேற்று காலை திருவிழா திருப்பலியை வீரமாமுனிவர் சித்த மருத்துவமனை இயக்குனர் அருள்ராஜ் தலைமையில் திருவிழா திருப்பலியாக நிறைவேற்றப்பட்டது.

    விழாவில் சங்கரன்கோவில் பங்குதந்தை ஸ்டீபன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்ததும் மதியம் அன்னதானம் நடைபெற்றது. புனித இஞ்ஞாசியார் உருவம் பதித்த கொடியினை சாப்ளின் டெய்லரிங் உரிமையாளர் பாஸ்கரன் செய்து கொடுத்திருந்தார். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் பங்குதந்தை ஸ்டீபன் மற்றும் சம்சிகாபுரம் இறைமக்களும் இணைந்து செய்திருந்தனர்.

    ×