search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருங்கை காய்"

    • அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில நேரம் கொதிக்க விடவும்.
    • அம்புட்டுதான் சுவையான நெத்திலி கருவாடு குழம்பு ரெடி.

    தேவையான பொருட்கள்:

    நெத்திலி கருவாடு – 200 கிராம்

    கத்தரிக்காய் – 1/4 கிலோ

    முருங்கைக்காய் – 2

    பச்சை மிளகாய் – 2

    தக்காளி – 2 (நறுக்கியது)

    புளி – 1 எலுமிச்சை அளவு

    வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

    கடுகு – 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை – சிறிது

    எண்ணெய் – தேவையான அளவு

    உப்பு – தேவையான அளவு

    மசாலா அரைப்பதற்கு:

    சின்ன வெங்காயம் – 1 கையளவு

    மல்லித் தூள் – 50 கிராம்

    சீரகம் – 1/2 டீஸ்பூன்

    மிளகு – 1 டீஸ்பூன்

    வரமிளகாய் – 2 (காய்ந்த மிளகாய்)

    கறிவேப்பிலை – சிறிது

    பூண்டு – 4 பற்கள்

    துருவிய தேங்காய் – 1/4 கப்.

    செய்முறை:

    • முதலில் கருவாட்டை வெந்நீரில் ஊறவைத்து சில நேரங்கள் கழித்து கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    • பின்பு கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    • புளியை ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, ஊறியதும் புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.


    • ஒரு மண்சட்டியை எடுத்து கொள்ளவும் அவற்றை அடுப்பில் வைத்து மண்சட்டியில் சூடேறியதும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் காய்ந்தமிளகாயை வறுத்து, பின்பு அதனுடன் சின்ன வெங்காயம், மல்லித் தூள், சீரகம், பூண்டு, மிளகு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை வதக்கி ஆறியதும் அதனுடன் தேங்காவை சேர்த்து மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

    • அம்மியில் அரைத்தால் குழம்பு சுவையாகவும், மிகவும் வாசனையாகவும் இருக்கும்.

    • பின்பு மற்றொரு மண்சட்டியை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

    • பின்பு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அவற்றில் கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    • காய்கள் நன்றாக வெந்ததும் அவற்றில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில நேரம் கொதிக்க விடவும்.

    • பின்பு கரைத்து வைத்துள்ள புளிச்சாறை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். புளிசாறானது நன்கு கொதித்ததும், அதில் நெத்திலி கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.

    • அம்புட்டுதான் சுவையான நெத்திலி கருவாடு குழம்பு ரெடி.

    • ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது
    • 105 விவசாயிகள் 60 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்

    வெள்ளகோவில் : 

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள். அந்த வகையில் நேற்று 105 விவசாயிகள் 60 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 6 க்கும், மரம் முருங்கை ரூ.5 க்கும், கரும்பு முருங்கை ரூ. 8 முதல் ரூ.10 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 125 விவசாயிகள் 100 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 8 க்கும், மரம் முருங்கை ரூ.7 க்கும், கரும்பு முருங்கை ரூ. 10 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

    நேற்று 125 விவசாயிகள் 100 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 8 க்கும், மரம் முருங்கை ரூ.7 க்கும், கரும்பு முருங்கை ரூ. 10 க்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 1 கிலோ ரூ.10-க்கு கூட வாங்க ஆள் இல்லை.
    • பல விவசாயிகள் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம், சிவவிடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மானாவாரி நிலங்களாக இருப்பதால் ஆண்டுதோறும் விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு காய்க்கும் முருங்கைகள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

    இந்த ஆண்டு முருங்கைக் காய்கள் நன்றாக காய்த்துள்ளன. ஒரு ஏக்கருக்கு சுமார் 1 டன் அளவுக்கு முருங்கை காய்த்துள்ளது. ஆனால் உரிய விலை இல்லாததால் வியாபாரிகள் வாங்க வரவில்லை. 1 கிலோ ரூ.10-க்கு கூட வாங்கவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள்

    கூறும்போது:-

    தற்போது ஆடி மாதம் என்பதால் முகூர்த்த நாட்கள் இல்லை. இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதால் முருங்கையின் பயன்பாடு பெருமளவில் குறைந்துள்ளது. வியாபாரிகளும் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல விவசாயிகள் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். தற்போது தக்காளி உள்பட சில காய்கறிகளின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது வேதனையாக உள்ளது என்றனர்.

    இது பற்றி தோட்டக்கலை அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து மதுரை, திண்டுக்கள், திருச்சியில் உள்ள வியாபாரிகளின் தொடர்பு எண்களை விவசாயிகளிடம் கொடுத்துள்ளோம். அவர்களும் முருங்கைக்காய் வாங்குவது தொடர்பாக பேசி வருகின்றனர். அரசு சார்பில் விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியுமோ அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம் என்றனர்.

    ×