என் மலர்
நீங்கள் தேடியது "மாசாணி அம்மன்"
- தை மாதத்தில் 18 நாள் புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
- மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
1. ஆனைமலை மாசாணி அம்மன் ஆலயம் கோவையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. காரில் சென்றால் சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.
2. மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை சிறப்பு வாய்ந்தது.
3. இத்தலம் அருகே உப்பாறு ஓடினாலும் கிணற்று நீர் தீர்த்தமாக உள்ளது.
4. தை மாதத்தில் 18 நாள் இங்கு புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
5. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.
6. மாசாணி அம்மன் ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
7. அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.
8. குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க இத்தலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.
9. அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.
10. பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளை சந்தித்து, உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள்.
11. யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை "உம்பற்காடு' என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.
12. இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும்.
13. செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.
14. இக்கோயில் வளாகத்தில் உள்ள "நீதிக்கல்லில்' மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும்.
15. "முறையீட்டு சீட்டில்' குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.
16. அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.
17. மாசாணியம்மன் அருள் வேண்டி தினமும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.
அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது.
18. ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேஷ பூசைகள் நடத்தப்படுகின்றன.
19. ஒவ்வொரு ஆண்டும் தை மாத பவுளர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேஷ பூசைகளுடன், 16 -ம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.
20. வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
- கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
- கோவில் கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவிலில் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்ஒருபகுதியாக கடந்த ஜூன் மாதம் விமான கோபுரம், ராஜகோபுரத்துக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 65 அடி உயரம் உள்ள ராஜ கோபுரத்துக்கு ரூ.35 லட்சம் செலவிலும், மற்ற பகுதிகளுக்கு ரூ.25 லட்சம் செலவிலும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுகிறது.
கடந்த 14-ந்தேதி மூலஸ்தானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இந்த நிலையில் கோவிலில் உள்ள ராஜ கோபுரம், மேற்கு, கிழக்கு கோபுரங்கள், கருவறை விமானங்கள், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கான கலசங்கள் ஆகியவை மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டு நா.மூ.சுங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தயார்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் ராஜகோபுரத்துக்கு 4 அடியில் 7 கலசங்கள், கருவறை விமானத்துக்கு 3 அடியில் 3 கலசங்கள், திசை கோபுரங்களுக்கு 3 அடியில் 10 கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு ஒரு அடியில் 32 என மொத்தம் 52 கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளில் மதுரை ஸ்தபதி கார்த்திக் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மொத்தம் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் 12-ந்தேதி காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக மூலவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடத்தப்பட்டு உள்ளது. தற்போது கோவில் கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.