search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "150 சிறப்பு பஸ்கள்"

    • சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை 15-ந் தேதி முதல் 19 -ந் தேதி வரை பயணிகள் தேவைக்கேற்ப 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
    • பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    சேலம்:

    வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை 15-ந் தேதி முதல் 19 -ந் தேதி வரை பயணிகள் தேவைக்கேற்ப 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சேலம் புறநகர் பஸ் நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை திருப்பூர் திருவண்ணாமலை சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மற்றும் மதுரை, நாமக்கலில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூர், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு, ஓசூரில் இருந்து சேலம் புதுச்சேரி கடலூர், சேலத்தில் இருந்து சிதம்பரம் காஞ்சிபுரம், ஈரோட்டில் இருந்து பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும் இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    • சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
    • நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை 150 சிறப்பு பஸ்கள் கூடுதல் நடைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    சிறப்பு பஸ்கள்

    இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் திருமண முகூர்த்தத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை 150 சிறப்பு பஸ்கள் கூடுதல் நடைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும் சேலத்தில் இருந்து கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் நிலையங்களுக்கும் இயக்கப்பட உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பாதுகாப்பான பயணம்

    எனவே பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்திடும்படி போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • அரசு விரைவு போக்கு வரத்து முன்பதிவு மையங்க ளிலும் இணையதளம் வழியா கவும் முன்பதிவு நடக்கிறது.

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வார இறுதி நாள் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம் புறநகர், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    16-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம், தர்மபுரியில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலை, சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர் கோவில் ஆகிய ஊர்களுக்கு பயணியர் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அரசு விரைவு போக்கு வரத்து முன்பதிவு மையங்க ளிலும் இணையதளம் வழியா கவும் முன்பதிவு நடக்கிறது.

    இந்த சேவையை பயன்ப டுத்தி சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், ஓசூரில் இருந்து தர்மபுரி, மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல்லில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூருக்கும் பயணிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    ×