என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோத்ரேஜ் நிறுவனம்"

    • கோத்ரேஜ் நிறுவனம், மறைமலை நகரில் ஒரு உற்பத்தி மையத்தினை ஏற்கனவே நிறுவி உள்ளது.
    • புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழில்துறை அதிகாரிகளும் கோத்ரேஜ் குழும அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.

    சென்னை:

    'கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.515 கோடி முதலீட்டில் 446 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த புதிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், கோத்ரேஜ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

    கோத்ரேஜ் நிறுவனம், மறைமலை நகரில் ஒரு உற்பத்தி மையத்தினை ஏற்கனவே நிறுவி உள்ளது. இப்போது ஒரு புதிய ஆலையை நிறுவ திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி, இந்நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 515 கோடி ரூபாய் முதலீட்டில் சோப்புகள், முகஅழகு க்ரீம்கள், தலை முடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றிற்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது.

    இந்த திட்டத்தில், 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் மேலும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இன்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழில்துறை அதிகாரிகளும் கோத்ரேஜ் குழும அதிகாரிகளும் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.
    • பொதுமக்கள் ஏராளமானோர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பையனூர் சிப்காட்டில் ரூ.515 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த கோத்ரேஜ் தொழிற்சாலையை நேரில் சென்று திறந்து வைத்தார்.

    பின்னர் இந்த தொழிற் சாலையை பார்வையிட்ட அவர் அங்கு பணிபுரியும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் வழி நெடுக பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தி.மு.க. கொடி வைக்கப்பட்டிருந்தது.

    கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் சாலைகளில் நின்று முதலமைசசர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோத்ரேஜ் நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவியது எனக்கு 2 மடங்கு மகிழ்ச்சி தருகிறது.
    • இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுவது அனைவரும் அறிந்ததே.

    செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் சிப்காட்டில் கோத்ரேஜ் ஆலையில் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * வரலாற்று சிறப்புமிக்க கோத்ரேஜ் நிறுவனத்தின் அதிகாரிகள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கு வரவேற்கிறேன்.

    * கோத்ரேஜ் நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவியது எனக்கு 2 மடங்கு மகிழ்ச்சி தருகிறது.

    * அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு வருடத்திலேயே கோத்ரேஜ் நிறுவனம் திறந்துவைக்கப்பட்டுள்ளது எனக்கு பெருமை.

    * இந்தியாவில் மட்டுமல்ல தெற்கு ஆசியாவிலேயே தொழில் தொடங்க ஏற்ற மாநிலம் தமிழ்நாடு தான்.

    * நேர்மறையான சிந்தனைகள் எப்போதும் வெற்றியில் தான் முடியும்.

    * முதலீட்டாளருக்கு தேவையான அனைத்து ஆதரவு சேவையையும் தி.மு.க. அரசு செய்து வருவதால் பெரும் முதலீடு ஈர்ப்பு.

    * கோத்ரேஜ் நிறுவனம் தனது ஆலையில் 50 சதவீத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது.

    * திருநங்கைகளுக்கு கோத்ரேஜ் நிறுவனத்தில் பணி வழங்கியமைக்கு மனதார நன்றி கூறுகிறேன்.

    * உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முகவரி என அறிவித்த கோத்ரேஜ் நிறுவனத்திற்கு நன்றி.

    * தமிழகத்தில் 4-ம் தலைமுறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அதிநவீன திட்டம்.

    * இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுவது அனைவரும் அறிந்ததே.

    * சென்னையின் நுழைவு வாயிலான செங்கல்பட்டை போல் இந்தியாவின் பொருளாதார முதலீட்டின் நுழைவுவாயிலாக தமிழகம் உள்ளது.

    * சாதகமான வணிக சூழல் நிலவும் தமிழகத்தில் உங்கள் திட்டங்களை தங்குதடையின்றி செயல்படுத்தலாம் என்றார். 

    ×