என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துஷார் காந்தி"

    • தற்போது மற்றொரு மிகவும் ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரி கேரளாவிற்குள் நுழைந்துள்ளார்.
    • அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதாக ஐந்து ஆர்எஸ்எஸ்-பாஜக பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

    கேரள மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியில் மறைந்த காந்தியவாதி பி. கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

    இதில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் இடது ஜனநாயக முன்னணி (LDF) ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால் தற்போது மற்றொரு மிகவும் ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரி கேரளாவிற்குள் நுழைந்துள்ளார்.

    அதுதான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் பாஜகவை தோற்கடிக்க முடியும், ஆனால் ஆர்எஸ்எஸ் விஷம். இது குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இது நம் நாட்டின் கட்டமைப்பில் பரவினால், அனைத்தையும் அழித்துவிடும் என்று பேசினார். இந்த உரைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

     

    துஷார் காந்தி தனது கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும்  அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதாக ஐந்து ஆர்எஸ்எஸ்-பாஜக  பிரமுகர்கள்  நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் நெய்யாட்டின்கரா நகராட்சி கவுன்சிலர் மகேசன் நாயரும் அடங்குவார்.

    இந்நிலையில் துஷார் காந்திக்கு எதிரான செயல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல் என்று கண்டித்துள்ளார்.

    காங்கிரசும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று ஊடகங்களிடம் பேசிய துஷார் காந்தி, கேரளாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை. வகுப்புவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்தையும் கருத்தையும் திரும்பப்பெறப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகஸ்ட் 9ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • துஷாரை காந்தியை வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு காவல்துறை அதிகாரி தடுத்தார்.

    இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் "வெள்ளையனே வெளியேறு" எனும் இயக்கம் 1942ல் ஆரம்பிக்கப்பட்டது.

    பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கெதிராக இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமான ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படும் இந்த போராட்டம், மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினையடுத்து 1942 ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டதாகும்.

    இதில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 9ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு மும்பை கிராந்தி மைதானத்தில் இதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இதில் கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்திற்கெதிராக அமைதி வழியில் போராட மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தியும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் 8ம் தேதி இரவு மும்பை காவல்துறை இவர்களின் கொண்டாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்தது. அவர் வீட்டு வாசலில் சுமார் 20 காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்.

    தடையை மீறிய துஷார், ஆகஸ்ட் 9 தேதி காலை 07:00 மணியளவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டிலிருந்து புறப்பட்டார். துஷாரை அங்கு நின்றிருந்த ஒரு காவல்துறை அதிகாரி தடுத்தார்.

    இதனை மீறி துஷார் புறப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி மும்பை சான்டா க்ரூஸ் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த நிகழ்ச்சிக்கான கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை அவர் அங்கேயே வைக்கப்பட்டார்.

    இது குறித்து துஷார் காந்தி கூறுகையில், 'வெள்ளையர்களால் என் கொள்ளு தாத்தாவும் கொள்ளு பாட்டியும் கைது செய்யப்பட்ட நாளிலேயே என்னை காவலில் வைத்ததற்கு காவல் துறைக்கு நன்றி. இந்தியாவில் இன்றிருக்கும் நிலை அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த அடக்குமுறை நாட்களை போன்றே உள்ளது' என்றார்.

    ×