என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாங்குநேரி மாணவர் விவகாரம்"

    • ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்த 5 பேர் கொண்ட கும்பல் சின்னதுரையை சரமாரி தாக்கியது.
    • காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி மகன் சின்னதுரை. கடந்த 2023-ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்தபோது, அதே பள்ளியில் படித்து வந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர் சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டினர். இதைத்தடுக்க முயன்ற அவரது தங்கையையும் வெட்டினர்.

    இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதன்பின், சிகிச்சை பெற்று குணமடைந்து தனது படிப்பை தொடர்ந்த சின்னதுரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 78 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.

    இந்நிலையில், நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. சின்னதுரையை ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, நெல்லை மாநகர துணை ஆணையர் சாந்தாராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி இன்று நெல்லை வந்தார்.
    • மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.

    நெல்லை:

    நாங்குநேரியில் சக மாணவர்களால் பள்ளி மாணவர் தாக்கப்பட்டது சம்பந்தமாக விசாரணை நடத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளார்.

    பள்ளி மாணவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி இன்று நெல்லை வந்தார்.

    அவர் நாங்குநேரி பகுதியில் சட்டபூர்வமான உரிமைகள் மீறப்பட்டுள்ளதா?, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.

    பின்னர் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரை படித்த வள்ளியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியிலும் உறுப்பினர் ரகுபதி ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    ×