search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sirkazhi வீடு"

    • அச்சம் அடைந்த செல்வமணி பாம்பு பிடிப்பவருக்கு தகவல் அளித்தனர்.
    • பிடிப்பட்ட நாகப்பாம்பு வன பகுதியில் விடப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருத்தாளமுடையார் கோவில் தெருவை சேந்தவர் செல்வமணி. இவரது வீட்டில் நாகப்பாம்பு ஒன்று புகுந்து அச்சுறுத்தியது. இதனால் அச்சம் அடைந்த செல்வமணி குடும்பத்தினர் சீர்காழி சேர்ந்த பாம்பு பிடிக்கும் பாண்டியனுக்கு தகவல் அளித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பாண்டியன் விரைந்து சென்று செல்வமணி வீட்டில் புகுந்த சுமார் 6 அடி நீள நாக பாம்பினை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிப்பட்ட நாகப்பாம்பினை பாண்டியன் ஆள் நடமாட்டம் இல்லாத வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.

    ×