என் மலர்
நீங்கள் தேடியது "வாக்கு சாவடி"
- வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் கட்சி நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும்.
- சிவானந்தம், பிரவீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகர தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் செயலாளர் ராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்றது. பகுதி செயலாளர் நடராஜன், சலீம், செயற்குழு உறுப்பினர் விக்ரமன், பொதுக்குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்யாத மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் கடலூர் மாநகரில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது. வருகின்ற அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் கட்சி நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும்.
வாக்கு சாவடி முகவர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கேட்டறிந்து மக்கள் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றிட வேண்டும். கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் புதிய மார்க்கெட் கட்டிடம் மற்றும் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு மாநகர திமுக சார்பில் பெருந்திரளாக வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், அமைப்பு சாரா தொழிலாளர் அணி ஓ.எல். பெரியசாமி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாவட்ட பிரதிநிதிகள் ராமு, செல்வமணி, பொருளாளர் ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆராமுது, சக்திவேல், இளைஞர் அணி மணிகண்டன், ஜெயமணி, ஜெயச்சந்திரன், குப்புராஜ், கோபி, மாநகர பிரதிநிதி சிவானந்தம், பிரவீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.