search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் நிலை"

    • நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
    • சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    காஞ்சிபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங் வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் , பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.

    அப்பகுதி மக்கள் இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை கார் ஒன்று விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.

    அப்போது திடீரென மர்ம கும்பல் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை காரில் கடத்தி சென்றனர்.

    இதனை கண்ட சிலர் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கோவிலில் விநாயகர் சிலையை தூக்கி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    காரை கிராம மக்கள் துரத்திச் சென்றனர். கொள்ளையர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இதனையடுத்து 4 பேர் கொண்ட கும்பலை ஆலங்காயம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையம் கத்தாரை கொல்லையை சேர்ந்த ஏழுமலை (வயது30), ஒடுகத்தூர் அடுத்த வண்ணான்தாங்கலை சேர்ந்த பிரகாசம் (50), அணைக்கட்டு அடுத்து பாளையத்தை சேர்ந்த செல்வம் (32), புத்தூரை சேர்ந்த சுரேஷ் (32) என்பது தெரிய வந்தது.

    மேலும் விநாயகர் சிலையை திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைத்தால் எங்கள் ஊருக்கு நல்லது நடக்கும் என்று விநாயகர் சிலையை தூக்கி வந்தோம் என்று கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×