என் மலர்
நீங்கள் தேடியது "புளியமரம்"
- தாலுகா அலுவலகம் முன்பு புளியமரம் சாய்ந்தது.
- தற்போது அந்த புளியமரம் அருகில் அகற்றி வைக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீரானது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மதுரை -திண்டுக்கல் நகர்புற சாலையில் புளியமரம் இன்று காலை 6 மணிக்கு திடீரென்று சாலையின் நடுவே சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா மற்றும் தீயணைப்பு வீரர்கள் மரத்தினை அகற்ற வந்தனர். அப்போது அங்கிருந்த சாலை பணியாளர் ஜே.சி.பி. மூலம் மரத்தினை அகற்றுவதாக கூறியதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர். ஆனால் 10 மணியாகியும் மரம் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தது.
இதனால் போக்குவரத்து பாதித்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மதுரை செல்லும் நகர் புறவழிச்சாலை வழியாக எதிரும் புதிருமாக வந்தது செயற்கையான விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்தது. தற்போது அந்த புளியமரம் அருகில் அகற்றி வைக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீரானது.
விழுப்புரம்:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. இதில் கிளியனூர் அருகேயுள்ள கூத்தப்பாக்கம் பள்ளி தெருவில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகள் மீது இன்று காலையில் விழுந்தது.
கான்கீரிட் வீடு என்ப தால் வீட்டிற்குள் வசித்த செல்வி (வயது 38) மற்றும் குடும்பத்தார் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பி னர். அதேசமயம் வீட்டின் மேல்பகுதி சேதமடைந்தது. மேலும், மரங்களின் கிளை கள் முறிந்து விழுந்ததில் பக்கத்தில் இருந்த 2 வீடுகளின் கழிப்பறைகள் சேத மடைந்தது.