என் மலர்
நீங்கள் தேடியது "சப் கலெக்டர்"
- சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார்.
- ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரள ஐகோர்ட்டு பிறப்பித்த ஏராளமான உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 243 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சப்-கலெக்டர் விஷ்ணுராஜ் எதிர்கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தை பொறுத்தவரை, போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில மறுவகைப்படுத்துதல் வழக்குகள் அதிகம் என்பதால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இருப்பதால் கோர்ட்டு விதிக்கும் காலக்கொடுவுக்குள் தீர்ப்பை அமல்படுத்த முடியாததால் சப்-கலெக்டர் இத்தனை கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
- பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு சப் கலெக்டர் தாக்கியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
- இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பேட்மிண்டன் வீரர்களை சப் கலெக்டர் ஒருவர் துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு சப் கலெக்டர் தாக்கியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பேட்மிண்டன் வீரர்கள், "நாங்கள் உள்விளையாட்டு அரங்கில் விளையாடி முடித்து கிளம்பும் நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த துணை ஆட்சியர் சிஷிர் குமார் மிஸ்ரா எங்களிடம் பேட்மிண்டன் விளையாட ஆசைப்பட்டார். ஏற்கனவே விளையாடி முடித்த களைப்பில் இருந்த நாங்கள் சோர்வாக இருக்கிறது இப்போது விளையாட முடியாது என்று கூறினோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு எங்களை துரத்தி துரத்தி அடித்தார்" என்று தெரிவித்தனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த துணை ஆட்சியர் சிஷிர் குமார், "பேட்மிண்டன் வீரர்கள் என்னிடம் அநாகரீகமான மொழியில் பேசினார்கள். அதனால் தான் அடித்தேன்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தரன்ஜோத் சிங் தெரிவித்தார்.