என் மலர்
நீங்கள் தேடியது "லால்குடி"
- மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது, இங்கு வந்தனர்.
- இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.
மனைவியை விரட்டினால் தண்டனை தரும் லால்குடி சப்தரிஷிஸ்வரர்
திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் பாதையில் 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது லால்குடி.
இங்கு பழம்பெரும் சிறப்புமிக்க ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
மனைவி மீது கோபப்பட்டு, மாமனார் வீட்டுக்கு விரட்டி விட்ட ஆண்களுக்கு தண்டனை தரும் கோவில் இது என்கிறார்கள்.
மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இந்த ஊர்பக்கம் வந்தார்கள்.
அப்போது திருவத்துறை ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் கோவில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகு படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
அதனைக் கவனித்த மகாலிக்காபூர் அருகில் இருந்த தளபதியிடம் உருது மொழியில்," அது என்ன லால் (சிகப்பு) குடி (கோபுரம்)?.." என்றான். அச்சொற்றொடரே லால்குடி என்று மாறி விட்டது.
இந்த கோவிலில் மிகப்பழமையான கோவில். மூலவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி.
சப்தரிஷிகளான அத்தரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 பேரும் சிவனை அடைந்த தலம் என்பதால், இறைவனுக்கு ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் எனப் பெயர் ஏற்பட்டது.
இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.
மாரிசி மகரிஷியின் பேரன் தான் சூரியன் அத்திரியின் மகன் தான் சந்திரன், சந்திரனின் மகன் புதன், அங்கீசரின் மகன் குரு, வசிட்டரின் வழி வந்தவர்தான் செவ்வாய்.
எனவே நவக்கிரகங்களால் இன்னல்படுபவர்கள் சப்தரிஷிஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும் என்று சொல்லப்படுகிறது.
இங்குள்ள லிங்கத்தின் மேல் வரி வரியாய் பள்ளங்கள் காணப்படுகின்றன.
தாரகா சூரனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள்.
சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார்.
அதன் பொருட்டுத்தான் சூரனை அழிக்க முருகன் பிறந்தார்.
அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர்.
அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம் பாலகனாக உள்ள முருகனை கொண்டு வந்து அந்த 7 குடில் பகுதியில் போட்டார்.
ரிஷி பத்தினிகள் அதிசயமாய் அந்தக் குழந்தையைப் பார்த்தனர்.
பால குமாரன் லேசாய் அழத் துவங்கினான். 7 பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர்.
குழந்தைக்கு பசி ஏற்பட அழுகை அதிகரித்தது.
ரிஷிபத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள் தூக்கிப் பரிவோடு தாலாட்டிப் பாலூட்டினார்கள்.
வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர்.
சிவனின் வாரிசுக்குப் பால் கொடுத்ததால் எவ்வளவு பெரும் பாக்கியம், காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே.
அந்த நல்ல வாய்ப்பைப் கெடுத்து, அந்தப் புகழைக் கார்த்திகைப் பெண்களுக்குக் கொடுத்து விட்டீர்களே என்று மனைவியரை அடித்து விரட்டினர்.
முருகப் பெருமான் தனது அவதார காரணத்தை உணர்ந்தார்.
தாராகா சூரனைக் கொன்று போட்டு, வெற்றி வீரராய்த் திரும்பிக் கொண்டிருந்தபோது, சப்தரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார்.
அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார்.
நேராக திருவையாறு சென்று, சிவனை வணங்கித் தவம் செய்தனர்., பலன் கிடைக்கவில்லை.
பிறகு லால்குடி (திருவத்துறை) வந்து, சிவனை நினைத்துக் கடும் தவும் புரிந்தனர்.
கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்குப் பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு கடும் தவம் இருந்தனர்.
இதையடுத்து சிவன் ஆண்களுக்கு சாப விமோசனம் தரும் தலமாக இது கருதப்படுகிறது.
- முதலில் கோவில் காளையும், தொடர்ந்து உள்ளூர் காளைகளும் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
- சில காளைகள், மாடுபிடி வீரர்களை சிதறி ஓட செய்தது.
லால்குடி:
திருச்சியை அடுத்த லால்குடி கீழ வீதி ஸ்ரீ மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுபோட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 61-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தகுதியான காளைகள் மட்டுமே மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதேபோல் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 400 வீரர்கள் காளைகளை அடக்க களத்தில் இறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், லால்குடி வட்டாட்சியர் முருகன் கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
முதலில் கோவில் காளையும், தொடர்ந்து உள்ளூர் காளைகளும் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. வெளியூரில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளையையும் அவிழ்த்துவிடுவதற்கு முன்பாக பரிசு பொருட்கள் பற்றியும் ஒலிப்பெருக்கியில் அறிவித்து கொண்டே இருந்தனர். காளையா...வீரனா.. என வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி மாடுபிடி வீரர்கள் சூழ்ந்து மல்லுக்கட்டி கொண்டு அதன் திமிலை பிடித்தும், கழுத்தை இறுகப்பிடித்தும் அடக்க முயன்றனர்.
சில காளைகள், மாடுபிடி வீரர்களை சிதறி ஓட செய்தது. மாடுபிடி வீரர்களை கொம்புகளால் முட்டி தூக்கி பந்தாடியது. சில காளைகள் தரையோடு தரையாக போட்டு போட்டு புரட்டி எடுத்தது. இதேபோல் திமிறிய காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களது வீரத்தை நிரூபித்தனர்.
காளைகளும் மாடுபிடி வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டிய காட்சியை கண்ட பார்வையாளர்கள் விசில் அடித்தும், கைகளை தட்டியும் உற்சாகப்படுத்தினர். வீரர்கள் காயம் அடைந்தால் முதல் உதவி சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
லால்குடி டி.எஸ்.பி தினேஷ் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழக அரசால் வரையறுக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.