என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில வியாபாரி உள்பட"

    • ஈரோடு டவுன் போலீசார் மளிகை கடைகள் , பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர்.
    • தாராராம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையி லை பொருள்கள் விற்பனை யை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதி யான சத்தி ரோடு, கொங்கல ம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள் , பெட்டிக்கடைகளில் சோத னை நடத்தினர்.

    அப்போது சத்தி ரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றின் அருகி ல் உள்ள பெட்டிக்கடையில் சோதனையிட்டதில் அங்கு தடைசெய்யப்பட்ட பான்ம சாலா, குட்கா உள்ளிட்ட அர சால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் 1.562 கிலோ கிராம் விற்பனை க்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 4,040 ஆகும்.

    இதையடுத்து பெட்டிக் கடை உரிமையாள ரான ஈரோ டு அடுத்துள்ள அவல்பூந்துறை பூவாண்டி வலசு பகுதியை சேர்ந்த மணி (59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல கொங்கலம்ம ன் கோவில் மேற்கு வீதியில் உள்ள ஜெனரல் ஸ்டோரில் சோதனை யிட்டதில் 1.489 கிலோ கிராம் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதன் மதிப்பு ரூ.20,770 ஆகும். இதையடுத்து டவுன் போலீசார் கடையின் உரிமை யாளரான ராமசாமி லைன் பகுதியை சேர்ந்த தாராராம் (38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×