search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திராயன்-3"

    • பள்ளம் குப்பைகளால் நிரப்பப்பட்டுள்ளது.
    • பிரக்யான் ரோவரின் கேமராக்கள் பள்ளத்தை படம் பிடித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் சந்திராயன்-3 விஷன் 2023 சந்திரனில் அதன் வெற்றிக்கரமான பணியை முடிவு செய்த பிறகும் புதிய கண்டு பிடிப்புகளை செய்து வருகிறது.

    நிலவின் தென்துருவ பகுதியில் பிரக்யான் ரோவர் தனது தரையிறங்கும் இடத்திற்கு அருகில் 160 கி.மீ. அகலத்தில் பெரிய பள்ளத்தை கண்டுபிடித்துள்ளது. இதனை அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சமீபத்தில் அறிவியல் நேரடி இதழிலும் இது வெளியிடப்பட்டுள்ளது.

    பிரக்யான் ரோவர் அதன் தரையிறங்கும் தளத்தில் தென்துருவ-எய்ட்கன் படுகையில் இருந்து சுமார் 350 கி.மீ. தூரத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான படுகையை கடந்து சென்ற போது இந்த பள்ளத்தை கண்டுபிடித்துள்ளது.


    இந்த பள்ளம் தென் துருவ-எய்ட்கன் படுகையை உருவாக்குவதற்கு முன்பே உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த பள்ளம் குப்பைகளால் நிரப்பப்பட்டுள்ளது. இது சிதைந்த நிலையில் உள்ளது. பிரக்யான் ரோவரின் உயர் திறன் கொண்ட கேமராக்கள் இந்த பள்ளத்தை படம் பிடித்துள்ளது.

    இதன் மூலம் விஞ்ஞானிகள் சந்திரனில் புதைக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்வதற்கான அரிய வாய்ப்பை பிரக்யான் ரோவர் வழங்கியுள்ளது. பிரக்யான் ரோவரின் இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளது.

    இந்த பள்ளத்தில் இருந்து சேகரிக்கும் பழங்கால தகவல்கள் சந்திரனின் ஆரம்ப கால வரலாறு மற்றும் அதன் தனித்துவமான உருவாக்கம் பற்றி இருந்த நமது புரிதலை மாற்றியமைக்க முடியும்.


    இந்த படங்கள் நிலவின் புவியியல் பரிமானத்தை பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. காலப்போக்கில் தொடர்ச்சியான பேரழிவு தாக்கங்களால் மேற்பரப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    பள்ளம் கண்டுபிடிக்கப்பட்ட தென் துருவ-எய்ட்கன் படுகை கிட்டத்தட்ட 1400 மீட்டர் தாக்க குப்பைகளால் மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை ஆய்வு செய்வதன் மூலம் சந்திரனின் ஆரம்ப கட்டம் அதன் செயல்முறைகளை பற்றி விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள உதவும்.

    இது எதிர்காலத்தில் சந்திர பயணம் மற்றும் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு பல முக்கிய தகவல்களை தரலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

    • மாணவர்கள் தங்களுக் கிடையே இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.
    • 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,  

    நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது . இந்தியாவிற்குப் பெருமையைத் தேடித் தந்த சந்திராயன்-3 விண் கலத்தின் லேண்டர் சாதனம் மாலை நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

    இந்த நிகழ்வை அதியமான் கல்வி நிறுவனங்களில் நேரலையில் மாணவ- மாணவிகள் கண்டு களித்தும், கைத்தட்டியும், தேசியக் கொடியைக் அசைத்தும் கொண்டாடினர். மாணவர்கள் தங்களுக் கிடையே இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.

    இந்தியாவின் இவ்வு யரிய சாதனையைப் பெருமைப் படுத்தும் வகையில், அதியமான் கல்வி நிறுவனங்களின் சார்பாக ஊத்தங்கரை அண்ணா சாலையில் இருந்து ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அதியமான் பப்ளிக் பள்ளி மற்றும் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதியமான் மகளிர் கல்வி யியல் கல்லூரியில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமையில், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால்முருகன், செயலர் ஷோபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் சீனி கணபதிராமன், பப்ளிக் பள்ளி முதல்வர் லீனா ஜோஸ், மெட்ரிக் பள்ளி முதல்வர் கலைமணி சரவணகுமார், துணை முதல்வர் அபிநயா கணபதிராமன், அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரி முனைவர் மணிமேகலை ஆகியோர் போலீஸ் ஆய்வாளர் பார்த்திபன் முன்னிலையில் கொடி அசைத்து வெற்றிவிழா பேரணியைத் துவக்கி வைத்தனர்.

    இந்தியாவின் சாத னையை, இஸ்ரோ விஞ்ஞானி களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பை அவர்க ளின் வெற்றியை மாணவ மாணவிகள் முழக்கங்களாக முழங்கி பேரணியாக சென்றனர்.

    சந்திராயன்-3 வெற்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியிடையே பெரும் நம்பிக்கையையும், பேரெழுச்சியையும் உருவாக்கி உள்ளது. மாணவ-மாணவிகள் தன்னெ ழுச்சியாக இந்தியாவின் வலிமை யையும், பெருமையையும் பரைசாற்றிச் சென்றனர். இது ஆரம்பம் முடிவல்ல. இனி வரும் காலங்களில் உலகம் வியக்கும் வண்ணம் இந்திய இளைஞர்கள், விஞ்ஞானிகள் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவர் என்பதினை உணர முடிந்தது.

    இவ்வெற்றி விழா பேரணி மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும், இந்தி யாவின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் வலுப்பெறச் செய்துள்ளது. 

    ×