search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து தர்மம்"

    • இந்து வாழ்வியலே சனாதானம்.
    • இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.

    சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.

    சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்கள் பெற்றோர் மற்றும் ஆன்றோரை மதித்தல்,
    • அனைத்து உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துதல்.

    சிவதர்மம் என்பது யாது?

    1.கொல்லாமை,

    2.பழிக்கு அஞ்சுதல்,

    3.பொறுமை,

    4.நலம்புரிதல்,

    5.உள்ளன்புடன் இருத்தல்,

    6.இயன்றவரை கொடைச் செயல்கள் புரிதல்,

    7.சிவனாகிய சச்சிதானந்தத்தை அர்ச்சனை செய்தல்,

    8.புண்ணிய காரியங்களை செய்தல்,

    9.சிவபெருமானை மானசீகமாக நினைத்து பூஜித்தல்,

    10. அனைத்து உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துதல்,

    11. மனசாட்சிக்கு மீறிய செயல்களை செய்யாதிருத்தல்,

    12. தீய வார்த்தைகளை உபயோகிக்காதிருத்தல்,

    13. பெண்கள் பெற்றோர் மற்றும் ஆன்றோரை மதித்தல்,

    14. எந்த உயிரையும் துன்புறுத்தாதிருத்தல்,

    15. நல்வழி நற் சிந்தனையில் செல்லுதல்

    • யோகாசன பயிற்சி செய்தல்.
    • அடிக்கடி மந்திரம் கூறி பகவானை நினைத்தல்.

    இந்து மக்களின் 7 கடமைகள்

    1.தினம் காலையில் மந்திரம் கூறி தியானப்பயிற்சி செய்தல் பிறகு அன்றாட வேலைகளை திட்டமிடுதல்.

    2. யோகாசன பயிற்சி செய்தல்.

    3. காரம், புளிப்பு, எண்ணை குறைவாக உள்ள உணவை அளவாக உட்கொள்ளுதல்.

    4. ஓய்வு நேரங்களில் சிறிது ஆன்மீக நூல் படித்தல் அல்லது ஆன்மீக சொற்பொழிவு கேட்டல்.

    5. அடிக்கடி மந்திரம் கூறி பகவானை நினைத்தல்.

    6. தன் குற்றம் கண்டறிந்து பகவானிடம் மன்னிப்பு கேட்டு ஆன்ம உயர்வு பெறுதல்.

    7. சமயத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புண்ணியம் சேர்த்தல்

    இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இந்த உலக வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். மறுமைக்கான பாதை தெளிவாகும்.

    ×