search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்திமதி அம்மன்"

    • சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
    • கடந்த 13-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.

    பல்வேறு சிறப்புகள் அமையப்பெற்ற சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆனித்தேரோட்ட திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 13-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் காலை-மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் 9-வது நாளான இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

    இன்று தேரோட்டத்தை யொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

    இன்று அதிகாலை 1.15 மணியளவில் விநாயகர் தேர் பக்தர்களால் இழுக்கப் பட்டு சுவாமி சன்னதி முன்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு முருகர் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் சுவாமி -அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

    காலை 6.30 மணி முதல்7.46 மணிக்குள் சுவாமி நெல்லையப்பர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார். அப்போது விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    பிற்பகலில் வடக்கு ரதவீதிக்கு வந்து சேர்ந்த சுவாமி தேர் அங்கு நிறுத்தப் பட்டது. அதனை தொடா்ந்து அம்பாள் தேரும், நிறைவாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    முன்னதாக தேரோட்டத்தை கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், ராபர்ட் புரூஸ் எம்.பி., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா, கீதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    4 முறை வடம் அறுந்ததால் இரும்பு சங்கிலி கட்டி இழுக்கப்பட்ட தேர்

    நெல்லையப்பர் சுவாமி தேரை முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அப்போது திடீரென தேரில் பொருத்தப்பட்டிருந்த 4 வடங்களில் 2 மற்றும் 3-வது வடங்கள் அறுந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அறநிலையத்துறையின் அலட்சியத்தால் வடம் அறுந்தது என்று கூறி இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

     உடனடியாக 2 மாற்று வடங்கள் பொருத்தப்பட்டு மீண்டும் 8.16 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பின்னர் சில நிமிடங்களில் மீண்டும் 2-வது முறையாக தேர் வடம் ஒன்று அறுந்து விட்டது. இதையடுத்து 3 வடங்களுடன் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. எனினும் 2 முறை வடம் அறுந்ததால் பக்தர்கள் மனவேதனை அடைந்தனர்.

    இந்நிலையில் 3 வடங்களுடன் இழுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 2 முறை வடம் அறுந்துவிட்டது. இதனால் 2 வடங்கள் மட்டுமே தேரில் இறுதியாக பொருத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து இரும்பு சங்கிலி கட்டப்பட்டு மீண்டும் தேர் இழுக்கப்பட்டது.

    • அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள்.
    • ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் கோவிலில் உள்ளன.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, 'வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி' என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் 'பிட்டாரத்தி அம்மன்' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இங்குள்ள அம்மன் நான்கு கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக்கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.

    அம்மன் கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில் (பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள்.

    இந்த அன்னைக்கு நடைபெறும் இருநேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது.

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணம் அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.

    மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

    ×