search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிகுறிகள்"

    • குரங்கம்மை பொதுமக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
    • குரங்கம்மை நோய் எப்படி பரவும்?

    'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் உலகளவில் வேகமாக பரவி, பொதுமக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

    விமானத்தில் பயணிப்பவர்கள் மூலம் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு எளிதாக ஊடுருவி விடுவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பும், கடும் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நோய் பற்றியும், அதன் தன்மை குறித்தும், அது ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள், மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

    ஒருவருக்கு குரங்கம்மை நோய் எப்படி பரவும்?

    முக்கியமாக விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. அதேவேளையில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுவதும் சாத்தியம். குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றொருவருக்கு நெருங்கிய தொடர்பு மூலமாகவும், சுவாசத் துளிகள் மூலமாகவும் பரவக்கூடும்.

    விலங்குகளின் மூலம் பரவுவதை பொறுத்தவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவும், அந்நோய் பாதிப்புக்குள்ளான விலங்குகளின் இறைச்சியை உண்பதன் மூலமாகவும் பரவும்.

    மனிதர்களை பொறுத்தவரை குரங்கம்மை பாதிக்கப்பட்டவருடன் உடல் ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருப்பது, அவர்களின் உடைகள், படுக்கை அறை, துண்டு போன்றவற்றை உபயோகிப்பது மூலம் பரவும்.

    உமிழ்நீர், சுவாச துளிகள் (தும்மல், இருமல்) மூலமும், கருவில் வளரும் குழந்தைக்கு தாயின் நஞ்சுக்கொடி மூலமும் எளிதில் பரவக்கூடும்.


    குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி உள்ளதா?

    சின்னம்மை ஒழிப்பு திட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்தலாம். இருப்பினும், 1980-ம் ஆண்டுக்கு உலக அளவில் சின்னம்மை ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை.

    ஜென்னோஸ்டம் என்ற பெயருடைய தடுப்பூசியை குரங்கு அம்மை, சின்னம்மை நோய்க்கு பயன்படுத்த அமெரிக்கா உரிமம் பெற்றுள்ளது.

    குழந்தைகளுக்கு இந்த நோய் எளிதில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியமானது.


    குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

    காய்ச்சல், முகம், கைகள், கால்கள், கண்கள், வாய் அல்லது பிறப்புறுப்புகளில் கொப்புளங்களுடன் கூடிய கடுமையான தோல் வெடிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை முக்கியமான அறிகுறிகள்.

    காய்ச்சல் ஏற்பட்ட முதல் 3 நாட்களுக்குள் சொறி உணர்வு ஏற்படலாம். முதலில் வாய், நாக்கு பகுதியில் புண்கள் தோன்றும். பின்பு முகத்தில் சொறி உணர்வு தோன்றி 24 மணி நேரத்திற்குள் கைகள், கால்கள் என உடலில் மற்ற பகுதிகளுக்கு பரவி கொப்புளங்களாக மாறும்.

    4, 5-வது நாளில், கொப்புளங்கள் பெரிதாகிவிடும். 2-வது வார முடிவில், அவை உலர்ந்து விடும். இதனுடன் தொடர்புடைய மற்ற சில அறிகுறிகள்: ஆஸ்தீனியா (கடுமையான உடல் பலவீனம்), தலைவலி, தசை வலி, உடல் வலி, முதுகுவலி, தொண்டை புண், இருமல், வியர்வை, உடல் குளிர்ச்சி.

    சின்னம்மை போன்றது தானா?

    குரங்கம்மையும் சின்னம்மையை போன்றே போக்ஸ்விரிடே குடும்பத்தை சேர்ந்தது. நோய் அறிகுறிகளும் கிட்டத்தட்ட சின்னம்மை போலவே இருக்கும். ஆனால் கூடுதலாக நிணநீர் அழற்சியையும் (நிணநீர் கணுக்களில் வீக்கம்) ஏற்படுத்தும்.

    சின்னம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த அறிகுறி ஏற்படாது. அத்துடன் சின்னம்மையுடன் ஒப்பிடும்போது இறப்புக்கு வழிவகுக்கும் அச்சுறுத்தலையும் குரங்கம்மை நோய் கொண்டிருக்கிறது.

    மறுபுறம் சின்னம்மையை பொறுத்தவரை விரிசெல்லா-ஜோஸ்வர் வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இருப்பினும் சின்னம்மை, குரங்கம்மை இவை இரண்டும் சுவாசம் மற்றும் தோல் தொடர்பு மூலம் பரவுகின்றன.


    குரங்கம்மை என்றால் என்ன?

    இது வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்தொற்று.

    இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

    கேரளாவில் மார்ச் மாதத்தில் முதல் நோய்த்தொற்று பதிவானது. சுமார் 30 பேர் இந்த நோய் தொற்று அறிகுறிகளுக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் குரங்கம்மை வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான அபாயம் குறைவாக இருப்பதாகவும், பீதி அடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    குரங்கம்மையை எவ்வாறு தடுப்பது?

    * அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். உடனே மருத்துவரை அணுகவும்.

    * நோய் பாதிப்புக்குள்ளான அல்லது சந்தேகிக்கப்படும் நபருடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.

    * நோயாளியுடன் தொடர்பில் இருக்கும் படுக்கை, பாத்திரங்கள் போன்ற எந்தவொரு பொருளையும் தொடுவதை தவிர்க்கவும்.

    * கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    * பாதிக்கப்பட்ட நபரின் கொப்புளத்தைத் தொடுவதை தவிர்க்கவும்.

    முதல் நோய்த்தொற்று எப்போது உறுதிபடுத்தப்பட்டது?

    1970-ம் ஆண்டு காங்கோ நாட்டில் ஒரு குழந்தை இந்த நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த குழந்தைக்கு பெரியம்மை தொற்று இருப்பதாகவே சந்தேகிக்கப்பட்டது.

    தொடர் பரிசோதனையின் முடிவில் குரங்கம்மை தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. குரங்குகளை தவிர அணில், அந்நாட்டை சேர்ந்த ஒரு வகை எலி, டார்மிஸ் போன்ற விலங்குகள் மூலமும் இந்த வைரஸ் தொற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நோய் கொடியதா?

    குரங்கு அம்மை அறிகுறிகள் சில வாரங்களுக்குள் தானாகவே மறைந்துவிடும். ஆனால் சிலருக்கு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளான நிமோனியா, மூளை அழற்சி, கண் நோய்த்தொற்றுகள் (பார்வை இழப்புக்கு வழிவகுக்கக்கூடும்) மற்றும் மரணம் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியமானது.

    குரங்குகளால் இந்த நோய் பரவுகிறதா?

    1958-ம் ஆண்டு, சிங்கப்பூரில் இருந்து டென்மார்க் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட குரங்குகள் நோய் பாதிப்புக்குள்ளாகி, இந்த நோய் பரவியது. எனவே `குரங்கம்மை' என்று அழைக்கப்படுகிறது.

    • மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
    • அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பீளமேடு:

    குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

    தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை விமான நிலையத்திலும் விமான பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடங்கிய மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சிங்கப்பூருக்கு தினமும், சார்ஜாவுக்கு 4 நாட்கள், அபுதாபிக்கு 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் மட்டும் இன்றி, பிற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிளும் கோவை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    விமானத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு மருத்துவக்குழுவினர் முதல் கட்டமாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதேபோல் கொப்புளங்கள் உளளனவா? என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.

    நேற்று கோவை விமான நிலையத்திற்கு 3 வெளிநாட்டு விமானங்களில் 275 பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் அல்லது அம்மை கண்டறியப்பட்டால், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகமும், ஏர்போர்ட் சுகாதார மருத்துவ குழுவினரும் இணைந்து பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இருக்கின்றனர். வெளிநாட்டு பயணிகள், பரிசோதனைக்கு பின்பே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அறிகுறிகளளோ, அம்மையோ கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு வசதியாக, விமான நிலைய வளாகத்தில் ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குரங்கம்மை வைரஸ் ஆனது நெருங்கியத் தொடர்புகள் மூலம் பரவக்கூடும்.
    • காய்ச்சல் மற்றும் தோலில் அதிக புண்களை ஏற்படுத்தும்.

    குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது.

    இதையடுத்து உலக சுகாதார அமைப்பு நேற்று (புதன்கிழமை) mpox பரவுவதை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது.

    குரங்கம்மை வைரஸ் ஆனது நெருங்கியத் தொடர்புகள் மூலம் பரவக்கூடும். இதன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் தோலில் அதிக புண்களை ஏற்படுத்தும்.

    ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

    இதன்படி, நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டு உள்ளன.

    கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்து உள்ளன. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து இருந்தது.

    ஆப்பிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசானது பரவி வருகிறது. காங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன.

    இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

    இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கருக்குழாயில் கரு தங்கும் முறைக்கு எக்டோபிக் கர்ப்பம் என்று பெயர்.
    • அரிதாக கருப்பை வாய் அடி வயிறு அல்லது கருப்பையிலும் வளரலாம்.

    கருக்குழாயில் கரு தங்கும் முறை எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கர்ப்பத்தின் போது கருவுற்ற முட்டை கருப்பையுடன் இணைக்காது.

    சில நேரங்களில் கருவானது ஃபெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாய் பாதையில் நிலைபெற்று வளரத்தொடங்குகிறது இதை கருக்குழாய் கருத்தரிப்பு என்று சொல்லப்படும்.

    சில நேரங்களில் இன்னும் அரிதாக கருப்பை வாய் அடி வயிறு அல்லது கருப்பையிலும் வளரலாம். இது கவலைக்குரிய நிலை என்பதோடு வலி, ரத்தப் போக்கு, வெடிப்புகளை உண்டாக்கி விடக்கூடும் என்பதால் இந்த கருக்குழாயில் குழந்தை தங்கும் ஆபத்து குறித்து முழுமையாக அறிவது அவசியம்.

    காரணங்கள்:

    * முந்தைய கர்ப்பம் எக்டோபிக் கர்ப்பமாக இருந்தால்

    * தொற்று அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஃபெலோப்பியன் குழாய்களின் வீக்கம் மற்றும் வடு

    * ஹார்மோன் காரணிகள்

    * மரபணு அசாதாரணங்கள்

    * பிறப்பு குறைபாடுகள்

    * ஃபலோபியன் குழாய்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் வடிவம் மற்றும் நிலையை பாதிக்கும்

    * புகைபிடிப்பது

    அறிகுறிகள்

    * இடுப்பு, தோள்பட்டை அல்லது கழுத்து பகுதியில் கூர்மையான வலி

    * அடிவயிற்றின் பக்கத்தில் ஏற்படும் கடுமையான தாங்க முடியாத வலி

    * லேசானது முதல் கனமான யோனி போக்கு

    * மயக்கமான உணர்வு

    * மலக்குடல் அழுத்தம் உணர்வு

    * கருவுற்று இருக்கும் போது இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை தாமதிக்காமல் தொடர்பு கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சை அவசியம்.

    இந்த எக்டோபிக் கரு குறித்த சந்தேகம் கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடல் பரிசோதனை மூலம் எக்டோபிக் கர்ப்பத்தை கண்டறிய முடியாது.

    டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மூலம் யோனிக்குள் சிறிய கருவி செருகப்படும். அப்போது மருத்துவர் கருப்பையில் கரு உள்ளதா என்பதை பார்க்க முடியும்.

    உங்கள் ஹெச். சி. ஜி. மற்றும் புரோஜெஸ்ட்ரான் அளவை கண்டறிய மருத்துவர் ரத்த பரிசோதனையை பயன்படுத்தலாம். இது கர்ப்பகாலத்தில் இருக்கும் ஹார்மோன்கள் ஆகும்.

    இந்த ஹார்மோன் அளவு குறைய ஆரம்பித்தால் அல்லது ஒரு சில நாட்களில் ஒரே மாதிரியாக இருந்தால் அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் கர்ப்பகால சாக்கு அதாவது அம்னோடிக் திரவம் இல்லையென்றால் அது கருக்குழாயில் கரு தங்கியதற்கான காரணம் ஆகும்.

    கருக்குழாய் கரு தங்கினால் உண்டாகும் ஆபத்துகள்?

    கருமுட்டை விந்தணுக்களுடன் இணைந்து கருக்குழாயில் தங்கி பிறகு அதன் வழியாக பயணித்து கருப்பைக்குள் உள்வைப்பு இருக்க வேண்டும். அப்போது தான் கரு வளர்ச்சி சீராக இருக்கும்.

    கரு ஃபலோபியன் குழாய் வழியாக மட்டுமே வளர்ந்தால் கரு வளராது. அதனோடு கருக்குழாயும் வெடிக்க செய்யலாம்.

    மேலும் தீவிர நிகழ்வுகளில் உடைந்து கடுமையான உள் ரத்தப்போக்கு ஏற்படலாம். சற்று அலட்சியம் செய்தாலும் அவை உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

    இந்த கருவானது தாய்க்கு பாதுகாப்பானது அல்ல. மெலும் கருவை கர்ப்பகாலம் முழுவதும் வளர்க்க முடியாது. தாயின் உடனடி ஆரோக்கியம் காக்க உடனடியாக கருவை அகற்றுவது அவசியம்.

    இந்த சிகிச்சை முறையில் எக்டோபிக் கர்ப்பம் இருக்கும் இடம் மற்றும் அதன் வளர்ச்சியை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

    சில நேரங்களில் கருக்குழாயில் கரு வளர்ச்சியை பொறுத்து அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அறுவைசிகிச்சை நிபுணர்கள் கருவை அகற்றி ஃபலோபியன் குழாய் சேதத்தை சரி செய்ய பரிந்துரைப்பார்கள். இது இலேபரோடமி என்று அழைக்கப்படுகிறது.

    • ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கும் பெண்கள் எளிதாகவே இதை கண்டறிந்துவிட முடியும்.
    • கர்ப்பப்பை இறக்கத்தை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டறியும் போது சிகிச்சை பெறுவதும் எளிதாக இருக்கும்.

    கர்ப்பப்பை இயல்பாகவே நான்கு பக்கமும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதசைகளால் சூழப்பட்டவை. அதனால் தான் ஓர் அங்குல வயிற்றில் குழந்தை வளரும் போது அதற்கேற்ப தசைகள் விரிவடைவதும், பிறகு தனது இடத்துக்குள் சுருங்கி கொள்வதுமாய் இருக்கிறது.

    இவை இருக்குமிடத்தில் இருந்து தள்ளி கீழிறிங்கி வருவது தான் கருப்பை இறக்கம் என்று அழைக்கப்படுகிறது. இவை எல்லோருக்கும் வருவதில்லை. 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கம் செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. அதிக குழந்தைகள், பிரசவத்துக்கு பிறகு உடனடியாக அதிக எடைகளை தூக்குவது. அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது. உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து கர்ப்பப்பை இறக்கம் உண்டாகிறது.கர்ப்பப்பை இறக்கத்தை ஒரு சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.


    கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுவிழந்து பலவீனம் அடையும் போது தான் கர்ப்பப்பை இறக்கம் நிகழ்கிறது. அப்போது கர்ப்பப்பை அருகில் இருக்கும் குடல், சிறுநீரகப்பை. மலக்குடல் மூன்றின் அருகில் இருப்பதால் இவை அழுத்தும் போது சிறுநீர் பிரச்சனை உண்டாகிறது.

    அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் கழிக்கும் உணர்வு இருப்பது, சிறுநீர் கழிக்கும் போது வலி உண்டாவது. வேகமாக சிரிக்கும் போதும், தும்மும் போதும் சிறுநீர் வெளியேறுவது, மலச்சிக்கல் ஏற்படுவது போன்றவை கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக பெண்கள் நினைக்கலாம்.

    கர்ப்பப்பை இறங்கும் போது அவை சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை சேர்த்து இழுப்பதால் இடுப்பில் வலி உணர்வு அதிகரிக்கும். இயல்பாக வரும் இடுப்புவலியை போன்று இல்லாமல் இடுப்பில் சற்று அழுத்தமாக கைவைத்து நின்றாலே வலி உணர்வு குறையும். பிறகு மீண்டும் வலி உண்டாகக்கூடும்.

    ஒவ்வொரு முறை இடுப்பு வலி உண்டாகும் போதெல்லாம் இடுப்பில் கை வைத்து ஊன்றி இருந்தால் வலி குறைவாக இருக்கும். சாதாரனமாக இடுப்பு வலி இருக்கும் போது இப்படி இருக்காது. தொடர்ந்து வலி இருக்கும் போது உங்கள் கைகளை ஊன்றி வைத்து பாருங்கள். ஒரு வேளை கர்ப்பப்பை இறக்கமாக இருந்தால் வித்தியாசத்தை நன்றாக உணர்வீர்கள்.


    வெள்ளைப்படுதல் இயல்பானது. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு முந்தைய நாட்களில் வெள்ளைப்போக்கு இருக்கும். சிலருக்கு அதற்கு பின்பு இருக்கும் இவை சாதாரணமானது தான் ஆனால் எல்லா நேரங்களிலும் எப்போதும் வெள்ளைபோக்கு இருந்தால் அது கர்ப்பப்பை இறக்க அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

    வெள்ளைபோக்கு துர்நாற்றத்துடன், வெளிறிய நிறத்தில் இருப்பது கருப்பை பிரச்சனைகளை குறிக்கும்.ஆனால் கர்ப்ப்பை இறக்கத்தால் உண்டாகும் வெள்ளைபோக்கு சாதாரணமாக இருக்கும். தொடர்ந்து இருக்கும் என்பதால் இதை பல பெண்களும் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

    பொதுவாக பெண்கள் குழந்தைபேறுக்கு பிறகு நடுத்தர வயதுக்கு மேல் தான் கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை அதிகம் சந்திக்கிறார்கள். ஆனால் பலரும் இது மெனோபாஸ் காலத்தில் பெண் உறுப்பில் உண்டாகும் வறட்சி என்று நினைக்கிறார்கள்.

    சிலருக்கு கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறியாக பெண் உறுப்பில் உலர்வுத்தன்மை, அந்த இடத்தில் அரிப்பு, சொரிந்து புண் இவை தொடர்ந்து ஏற்படும்.

    35 வயதுக்கு மேல் மெனோபாஸ் வருவது அதிகரித்துள்ளது என்றாலும் கூட உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியும் சீராக இருந்தால் அது கர்ப்பபை இறக்கமாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

    உடலுறவு கொள்ளும் போது யோனி பகுதி அருகில் கர்ப்பப்பை வாய் இறங்கியிருந்தால் அவை அதிக அசெளகரியத்தை உண்டு செய்யும். உடலுறவில் திருப்தியின்மை, உறவு கொள்வதில் சிக்கல், உறவுக்கு பின் ரத்தபோக்கு போன்ற அறிகுறிகள் கூட இதன் காரணமாக இருக்கலாம். இதை தொடர்ந்து தான் படிப்படியாக சிறுநீர்ப்பை, மலச்சிக்கல் பிரச்சனை உருவாகக்கூடும்.


    ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கும் பெண்கள் எளிதாகவே இதை கண்டறிந்துவிட முடியும். திடீரென வரும் தும்மல், தொடர்ச்சியான இருமல் போன்ற காலகட்டங்களில் வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு போன்று கருப்பை இறங்குவது போன்ற உணர்வு ஏற்படும். சதைப்பகுதி கீழ்ப்பாகத்தில் உரசுவது போன்று இருக்கும். வேகமாக நடக்கும் போது சிரமமாக இருக்கும்.

    கர்ப்பப்பை இறக்கத்தை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டறியும் போது சிகிச்சை பெறுவதும் எளிதாக இருக்கும். மேற்கண்ட இந்த அறிகுறிகள் எல்லாமே கர்ப்பப்பை இறக்கத்துக்கான அறிகுறிகள் என்று அச்சப்பட வேண்டாம். அதே நேரம் அலட்சியப்படுத்தவும் வேண்டாம். ஏனெனில் கர்ப்பப்பை இலேசாக இறக்கம் கொள்ளும் போது இந்த அறிகுறிகளையும் தீவிரமாகவெளிப்படுத்தாது.

    40 வயதுக்கு பிறகு மாதம் ஒருமுறை கர்ப்பபை குறித்த முழுபரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.

    • நோயாளிகளின் சளி, உமிழ் நீர், வியர்வை மூலமாக பரவுகிறது.
    • தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும்.

    கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 50 பேருக்கும் மேற்பட்டோர் வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரளாவில் பரவும் நிபா வைரஸ் பாதிப்பு எல்லையோர தமிழக பகுதிக்குள் பரவாமல் இருக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை மற்றும் நீலகிரிக்கு பஸ்கள் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் எல்லையோரம் தீவிர மருத்துவ சோதனைக்கு பின்னரே இங்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளூர் ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு கண்காணிக்கிறார்கள். வாகனங்களில் வருபவர்கள் யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி பிரச்சனை உள்ளதா என சோதித்து பார்க்கிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரங்களையும் வினியோகித்து வருகிறார்கள்.

    அதே போல கோவை-கேரளா எல்லையில் வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நிபா வைரசின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து நீலகிரி மாவட்ட

    நிர்வாகம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றி ஆகியவற்றின் சிறுநீர், எச்சில் மற்றும் இதர திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சளி, உமிழ் நீர் மற்றும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் கடித்த பழங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

    நோய் அறிகுறிகள்

    கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவிழத்தல், மனக்குழப்பம், கோமா ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். கிருமி தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் வெளிப்படும். மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணி முதல் 48 மணி நேரத்துக்குள் தீவிர மயக்க நிலை, சுயநினைவிழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தடுக்கும் முறைகள்

    1. விலங்குகள் கடித்த பழங்கள், காய்கறிகளை உபயோகப்படுத்தக் கூடாது.

    2. காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

    3. இறந்த வவ்வால்கள், பன்றிகள் இதர விலங்குகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    4. பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்த வேண்டும்.

    5. பொது இடங்களுக்கு சென்று வரும்போது சோப்பினால் கை கழுவுவதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    6. வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

    7. தேவையின்றி காடுகள் மற்றும் குகை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    8. காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    இதேபோல கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில் நிபா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு உமிழ்நீர், சிறுநீர், சளி போன்றவை மூலம் நேரடியாகவும் பரவுகிறது.

    எனவே பொது இடங்களில் தும்மும் போதும், இருமும்போதும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை சார்பாக தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் சுகாதாரக்குழு நியமிக்கப்பட்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். 

    • உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது.
    • கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது.

    'பசித்து உண்' என்று பழமொழியே இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:-

    1) நாம் சாப்பிடும் பல மருந்துகளின் பக்க விளைவுகளில் பசி குறைவது

    2) மனச்சோர்வு ஏற்படும் போது மூளையைத் தூண்டி ஒரு ஹார்மோனை சுரக்கச் செய்யும். இது பசியைக் குறைத்துவிடும்

    3)விபத்துகளில் மூளையில் பாதிப்பு, காயம் ஏற்பட்டால், உணவு மேல் நாட்டம் இருக்காது

    4) ஜலதோஷத்தின் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பசிக்காது

    5) ஒற்றைத் தலைவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு காரணமாக சாப்பிட தோன்றாது

    6) கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதத்தில் மசக்கை வாந்தியினால் உணவைப் பார்த்தாலே ஓடத்தோன்றும்

    7) ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பசி குறைவாக இருக்கும்

    8) வயிற்றுப் பிரச்சினை, வாந்தி, பேதி, வயிறு உப்புசம் போன்றவை இருந்தால் பசி சரியாக இருக்காது

    9) புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பசி குறையும்

    10) அதிக ரத்த சர்க்கரை காரணமாக ஜீரண நரம்பு பாதிக்கப்படுவதால் பசியும் செரிமானமும் குறைந்துவிடும்

    11) ரத்தச் சோகை இருப்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சரியாக கிடைக்காமல் உடல் சோர்வாகி பசியும் குறைந்துவிடும்

    12) வயது ஆக ஆக உங்களது ஜீரண உறுப்புகள் வேலை செய்வதும் குறைந்துவிடும்,

    13) மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை ஜீரணத்தை மெதுவாக்கி பசியார்வத்தைக் குறைத்துவிடும்

    14) உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது

    15) கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது.

    பசி என்பது உடலில் உண்டாகும் இயற்கையான மாற்றங்களினால் ஏற்படும் ஒரு செயலாகும். பசி இல்லை என்றாலும் கூட ஓரளவாவது சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியம். நீங்கள் சாப்பிடும் உணவின் மூலம் தான் உங்களது உடலுக்குத் தேவையான கலோரி சக்தி வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் உப்பு, சர்க்கரை, புரதம், மாவுச்சத்து கொழுப்புச்சத்து முதலியவை கிடைக்கின்றன.

    ஒரு வேளை, இரண்டு வேளை பசி எடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடலாம். ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் பசியில்லாமல் இருந்தால் உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திப்பது தான் நல்லது.

    • கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.
    • அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.

    மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.

    உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

    அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.

    எனவே கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    கால்களில் வீக்கம்

    ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும். எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.

    மஞ்சள் காமாலை

    எப்போது ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.

    வயிற்று உப்புசம் மற்றும் வலி

    கல்லீரலில் கட்டிகளானது அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனால் கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற்றிற்கு சற்று மேலே வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும்.

    வாந்தி, சோர்வு, காய்ச்சல்

    கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி. உங்களுக்கு கல்லீரல் அழற்சி இருந்தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

    தலைச்சுற்றல்

    ஆல்கஹால் குடிப்பவராக இருந்தால், விரைவில் கல்லீரல் பாதிக்கப்படும். ஆல்கஹால் அதிகம் பருகி கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி ஏற்படும்.

    குமட்டல்

    கல்லீரல் சரியாக இயங்காமல் இருப்பின், குமட்டலை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு அவ்வப்போது குமட்டல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

    அடர் நிற சிறுநீர்

    கல்லீரலில் பிரச்சனைகள் இருந்தால், உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளிவரும். எனவே இந்த நிலையை நீங்கள் சந்தித்தால், தவறாமல் மருத்துவரை சந்தியுங்கள்.

    சோர்வு

    நாள்பட்ட சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியே. ஆகவே உங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான காரணத்தைக் கண்டறியுங்கள்.

    • நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
    • நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்மை காலங்களில் கேரளாவில் 4 பேர் மூளைக்காய்ச்சல் நோயினால் இறந்து இருக்கிறார்கள். இந்த மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து வலி, மன குழப்பம், பிரமைகள் போன்ற சிந்தனைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இந்த அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நோயில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் மாசுபட்ட அழுக்கு நீரீல் குளிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

    தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரமாக உள்ளதா என்று உறுதி செய்யப்பட வேண்டும்.

    பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

    நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வெளியூர் பயணம் மற்றும் சந்தேகத்திற்குரிய நோயின் அறிகுறிகளின் கண்டறிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வளைவு லேசானதாகவோ அல்லது மிதமாகவோ இருந்தால், அது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் தலையிடாது.
    • உட்கார்ந்து அல்லது நிற்கும் போது சரியான தோரணையை பராமரிக்கவும், இது முதுகெலும்பு மேலும் சுழற்சி அல்லது வளைவைத் தடுக்கலாம்.

    ஸ்கோலியோசிஸ் என்பது முதுகுத் தண்டு பக்கவாட்டு வளைவைக் காட்டும் ஒரு உடல் கோளாறு ஆகும். இந்த நிலை பொதுவாக நீங்கள் குழந்தையாகவோ அல்லது இளைஞனாகவோ இருக்கும்போது தோன்றும். வளைவின் கோணம் சிறியது, மிதமானது அல்லது பெரியது. உங்கள் முதுகுத்தண்டின் சுழற்சி கோணம் 10 டிகிரிக்கு மேல் இருக்கும் போது மருத்துவர்கள் நிலைமையை கண்டறிகின்றனர். எலும்பியல் வளைவின் தன்மையை விவரிக்க "S" அல்லது "C" எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது.

    ஸ்கோலியோசிஸின் முதன்மை அறிகுறிகள்:

    உங்களுக்கு கோளாறு இருந்தால், நீங்கள் நிற்கும்போது கற்றுக் கொள்வீர்கள். இது போன்ற பிற அறிகுறிகள் இருக்கும்:

    • உங்கள் முதுகில் தெரியும் வளைவு

    • சீரற்ற தோள்கள்

    • சீரற்ற இடுப்பு

    • ஒரு தோள்பட்டை கத்தி மற்றொன்றை விட பார்வைக்கு அதிகமாகத் தோன்றும்.

    • விலா எலும்புக் கூண்டின் ஒரு பக்கத் திட்டம்.

    • நீங்கள் முன்னோக்கி குனியும்போது பின்புறத்தின் ஒரு பக்கத்தில் தெரியும் முக்கியத்துவம்.

    • ஒரு இடுப்பு அருகில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.


    பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முதுகெலும்பு பக்க வளைவுடன் சேர்ந்து சுழலும் அல்லது சுழலும். சுழற்சியானது உடலின் மேற்புறத்தில் உள்ள தசைகள் மற்றும் விலா எலும்புகளை மறுபுறம் இருப்பதை விட முக்கியமாக ஒட்டிக்கொள்ளும். கூடுதலாக, காணக்கூடிய அறிகுறிகள் பின்வருமாறு:

    • முதுகெலும்பு விறைப்பு

    • கீழ்முதுகு வலி

    • தசைப்பிடிப்பு காரணமாக சோர்வு

    • கால்களில் வலி மற்றும் உணர்வின்மை

    ஸ்கோலியோசிஸின் காரணங்கள்:

    சில வகையான ஸ்கோலியோசிஸ் குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டுள்ளது. மருத்துவர்கள் இந்த வளைவுகளை இரண்டு முதன்மை வகைகளாகப் பிரிக்கிறார்கள் - கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு அல்லாதவை.

    கட்டமைப்பு இல்லாத நிலையில், முதுகெலும்பு பொதுவாக வேலை செய்யும், இருப்பினும் வளைவு தெரியும். போன்ற பல்வேறு காரணங்களால் இது நிகழலாம்

    தசைப்பிடிப்பு

    • ஒரு கால் மற்றதை விட நீளமானது

    • குடல் அழற்சி போன்ற அழற்சிகள்

    கட்டமைப்பு கோளாறில், வளைவு கடினமானது மற்றும் மீள முடியாதது. காரணங்கள்:

    • பெருமூளை வாதம் போன்ற நரம்புத்தசை நிலைகள்.

    • கடுமையான தசைநார் சிதைவு, இது தசை பலவீனத்தை விளைவிக்கும் ஒரு மரபணு கோளாறு ஆகும்.

    • முதுகெலும்பு தொற்று மற்றும் காயங்கள்

    • ஸ்பைனா பிஃபிடா போன்ற குழந்தையின் முதுகெலும்பு எலும்புகளை பாதிக்கும் பிறவி குறைபாடுகள்.

    • கட்டிகள்

    • டவுன்ஸ் சிண்ட்ரோம் அல்லது மார்பன் சிண்ட்ரோம் போன்ற மரபணு நிலைமைகள்.

    • முள்ளந்தண்டு வடம் அசாதாரணங்கள்

    பிசியோதெரபிஸ்ட்டை எப்போது பார்க்க வேண்டும்:

    உங்கள் பிள்ளையில் ஸ்கோலியோசிஸின் அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், மருத்துவரிடம் செல்வது கட்டாயமாகும், முன்னுரிமை எலும்பியல் மருத்துவர். மெதுவான வளைவுகள் உங்களுக்குத் தெரியாமல் படிப்படியாக உருவாகலாம், ஏனெனில் படிப்படியான தோற்றம் ஆரம்பத்தில் எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் குழந்தை பதின்ம வயதினராக வளரும்போது, வலியின் தோற்றம் ஏற்படலாம். குழந்தை முதுகுவலி அல்லது விறைப்பு பற்றி புகார் செய்தால் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.


    ஸ்கோலியோசிஸின் ஆபத்து காரணிகள்:

    ஸ்கோலியோசிஸின் பொதுவான வகைகளை உருவாக்க எண்ணற்ற ஆபத்து காரணிகள் உள்ளன. இவை:

    வயது: இளமை பருவத்தில் ஆரம்ப அறிகுறிகளும் அறிகுறிகளும் தொடங்குகின்றன.

    குடும்ப வரலாறு: குடும்பத்தில் நிலைமை இயங்குகிறது. ஆனால் இந்த கோளாறால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு குடும்ப வரலாறு இல்லை.

    பாலினம்: லேசான ஸ்கோலியோசிஸின் வளர்ச்சி விகிதம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளில் ஒரே மாதிரியாக இருக்கும். இருப்பினும், பெண்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் வளைவு மோசமடைவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

    ஸ்கோலியோசிஸை எவ்வாறு தடுப்பது:

    நிலைமையைத் தடுப்பதற்கான வழிகள் பற்றி நிரூபிக்கப்பட்ட உண்மை எதுவும் இல்லை. இருப்பினும், காயத்தால் வளைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றலாம்.

    உங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருந்தால், கழுத்து, முதுகு மற்றும் தோள்களில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதால், அதிக கனமான பைகளை எடுத்துச் செல்ல நீங்கள் அவர்களை அனுமதிக்கக்கூடாது. கண்டறியப்படாத லேசான கோளாறு இருந்தால், அழுத்தம் வலியைத் தூண்டும்.

    உட்கார்ந்து அல்லது நிற்கும் போது சரியான தோரணையை பராமரிக்கவும், இது முதுகெலும்பு மேலும் சுழற்சி அல்லது வளைவைத் தடுக்கலாம்.

    ஸ்கோலியோசிஸிற்கான சிகிச்சைகள்:

    சிகிச்சை திட்டம் பல காரணிகளைப் பொறுத்தது:

    • முதுகெலும்பு வளைவின் அளவு

    • உங்கள் வயது

    • வளைவு வகை

    • ஸ்கோலியோசிஸ் வகை

    • மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்பு

    முதன்மை சிகிச்சை விருப்பங்களில் பிரேசிங் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும்.

    சுழற்சி 25 முதல் 40 டிகிரிக்கு மேல் இருக்கும்போது வளரும் வயதில் வளைவை கட்டுப்படுத்த முடியும். முன்கூட்டியே கண்டறிதல் பிரேஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் வளைவைத் தடுக்கலாம். நீங்கள் நீண்ட காலத்திற்கு பிரேஸ்களை அணிந்தால், அது சிதைவைக் கட்டுப்படுத்தும். இரண்டு வகையான பிரேஸ்கள் உள்ளன:

    அக்குள்: பிளாஸ்டிக் மற்றும் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாததை உள்ளடக்கிய நெருக்கமான பிரேஸ். இது கீழ் முதுகுத்தண்டு வளைவுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.


    மில்வாக்கி: பிரேஸ் கழுத்தில் தொடங்கி, கால்கள் மற்றும் கைகளைத் தவிர்த்து, உங்கள் முழு உடற்பகுதியையும் உள்ளடக்கியது.

    வளைவு 40 டிகிரிக்கு மேல் இருக்கும் ஸ்கோலியோசிஸுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே சிகிச்சை விருப்பம். முதுகெலும்பு இணைவு என்பது அறுவை சிகிச்சையின் நிலையான வழியாகும். மருத்துவர் இந்த அறுவை சிகிச்சையில் தண்டுகள், திருகுகள் மற்றும் எலும்பு ஒட்டுதல்களைப் பயன்படுத்தி முதுகெலும்புகளை ஒன்றிணைப்பார். எலும்பு ஒட்டுதல்கள் எலும்பு போன்ற பொருள் அல்லது உண்மையான எலும்பைக் கொண்டிருக்கும். தண்டுகள் முதுகெலும்பை நேராக வைத்திருக்கும், மேலும் திருகுகள் முதுகெலும்புகளை வைத்திருக்கும்.

    தொடர்புடைய நிபந்தனைகள்:

    வளைவு லேசானதாகவோ அல்லது மிதமாகவோ இருந்தால், அது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் தலையிடாது. ஆனால் நிலைமை கடுமையானதாக இருக்கும்போது, உடல் வரம்புகள் ஏற்படலாம். வளைவு வயதுக்கு ஏற்ப மோசமடையக்கூடும் என்பதால் நிலையான வலி உங்கள் துணையாக இருக்கும்.

    ஸ்கோலியோசிஸுடன் வாழ்வது சவாலானதாக இருக்கலாம் . அதிகரிக்கும் சிதைவு உங்கள் இயக்கத்தை பாதிக்கத் தொடங்கும் போது மன அழுத்தம் அடிக்கடி மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. வலியைச் சமாளித்து, சிறந்த வாழ்க்கையை வாழ உதவும் ஆதரவுக் குழுக்களைத் தேடுவது நல்லது. இதே போன்ற அல்லது மோசமான அறிகுறிகளை அனுபவிக்கும் மற்றவர்களை நீங்கள் சந்திக்கலாம். தினசரி அடிப்படையில் நிலைமையைச் சமாளிக்க இது உங்களை ஊக்குவிக்கும்.

    • UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.
    • அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சிறுநீர் உங்கள் ஆரோக்கியம் தொடர்பான பல ரகசியங்களை வெளிப்படுத்தும். வயிற்றில் அல்லது உடலில் பல பிரச்னைகள் இருக்கும்போது சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

    ஆனால் சில நேரங்களில் தனிப்பட்ட சுகாதாரத்தை சரியாக கவனிக்காததால், பலர், குறிப்பாக பெண்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். பல நேரங்களில், தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்த பிறகும், UTI வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.

    UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். இதன் காரணமாக உங்களுக்கு சிறுநீர் கழித்தல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். இது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், வயிறு மற்றும் சிறுநீரகங்களுக்கும் பரவுகிறது.

    சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள்

    சிறுநீர் தொற்று ஏற்பட்டால், சில பொதுவான அறிகுறிகளைக் காணலாம். இது உங்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால், அது சிறுநீர் தொற்றுக்கு காரணமாக இருக்கலாம். இதனுடன், சிறுநீரில் ரத்தப் பிரச்சனையும் அதிகரிக்கிறது.

    எனவே, இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால், அவை சிறுநீர் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சிறுநீர் தொற்று மிகவும் சங்கடமாக இருக்கும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சைய அளிக்கப்படாவிட்டால், அது வயிற்று தொற்றுக்கு வழிவகுக்கும். சிறுநீர் நோய்த்தொற்றை நிர்வகிப்பதில் நீர் மிகவும் முக்கியமானது. எனவே UTI ஏற்பட்டால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தொடர்ந்து தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் பாக்டீரியாவை வெளியேற்றவும் மற்றும் UTI களை தடுக்கவும் உதவுகிறது. எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

    பாக்டீரியாவால் சிறுநீர் தொற்று

    UTI -ன் மிகவும் பொதுவான காரணம் பாக்டீரியா ஆகும். பாக்டீரியாவால் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தொற்றுநோயைத் தடுக்க, நீங்கள் சுகாதாரத்தைப் பேணுவது மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அல்லது அதிகரிப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிப்பது முக்கியம்.

    • அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்க்கலாம்.
    • குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி இருக்கும்.

    பெண்கள் பெரும்பாலும் 45 நாட்கள் கர்ப்பம் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று பல குழப்பத்தில் இருப்பார்கள். 45 நாட்கள் கர்ப்பம் என்பது 6 வாரங்கள் அதாவது இரண்டு மாதம் ஆகும்.

    45 நாட்களில் உங்கள் குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி இருக்கும். அதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்க்கலாம்.

    கண்கள் மற்றும் நாசிகள் போன்றவை சிறிதாக உருவாக தொடங்கும். அவர்களின் சிறிய வாய்க்குள், நாக்கு மற்றும் குரல் நாண்கள் உருவாகத் தொடங்கி இருக்கும்.

    கைகள் மற்றும் கால்கள் சிறிய துடுப்புகளாக வளரத் தொடங்கி, அவை நீண்டு, மூட்டுகளாக வளரும். முதுகெலும்பு ஒரு சிறிய வால் போன்று நீண்டு இருக்கும். அது சில வாரங்களில் மறைந்துவிடும்.

    அறிகுறிகள்

    * காலை நோய் என்பது நாளின் எந்த நேரத்திலும் ஏற்படும் குமட்டல் ஆகும். இது பொதுவாக கர்ப்பத்தின் 5 அல்லது 6 வது வாரத்தில் தொடங்கி முதல் மூன்று மாதங்களின் முடிவில் குறையலாம்.

    * அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில், உங்கள் உடலில் அதிக ரத்தம் பாய்வதால் உங்கள் சிறுநீரகங்கள் அதிகப்படியான தண்ணீரை சமாளிக்க வேண்டிய நிலை வருகிறது.

    * கர்ப்பகால ஹார்மோன்களும் இதில் பங்கு வகிக்கின்றன. நிறைய தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லது நிறமற்றதாக இருந்தால், உங்கள் உடலில் நன்கு நீரேற்றமாக இருக்கும்.

    * பல கர்ப்பிணிப் பெண்கள் 6 முதல் 10 வாரங்களில் தங்கள் மனநிலை மாற்றம் அதிகரிக்கிறது. ஒரு தாயாக மாறும் உணர்வினை அவர்கள் அதிகம் உணர்வார்கள். சில நேரங்களில் எதையாவது நினைத்து திடீரென்று மனம் நோகும் நிலையில் இருப்பார்கள்.

    * கர்ப்பிணிகளை அவர்களது துணை கண்டிப்பாக நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். நீங்கள் மேலும் மனச்சோர்வடைந்திருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் அவர் உங்களுக்கு தேவையான விஷயங்களை பரிந்துரைப்பார்.

    * மார்பக மென்மை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். அதிகரித்த ஹார்மோன் அளவுகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன, இது உங்கள் மார்பகங்களில் வீக்கம், வலி, கூச்சம் அல்லது தொடுவதற்கு வழக்கத்திற்கு மாறாக மென்மையாக்கும்.

    * பல பெண்களுக்கு, சோர்வு கர்ப்பத்தின் முதல் அறிகுறிகளில் ஒன்றாகும். ஆரம்பகால கர்ப்பத்தில் சோர்வு ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் இது புரோஜெஸ்ட்டிரோனின் வியத்தகு அதிகரிப்பு போன்ற ஹார்மோன் மாற்றங்களால் இந்த சோர்வு இருக்கலாம்.

    கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில், ஈஸ்ட்ரோஜனின் அதிகரிப்பு உங்கள் வாயில் ஒரு உலோக சுவையை ஏற்படுத்தும். 1 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது, புளிப்பு அல்லது அமில உணவுகளை உண்பது அல்லது புதினா பசையை மெல்லுவதன் மூலம் இந்த சுவை உணர்வை கட்டுப்படுத்தலாம்.

    குறிப்பாக கர்ப்ப காலத்தில் தலைவலி பொதுவானது. கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதத்தை அடைந்தவுடன் தலைவலி குறையலாம். யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் இந்த தலைவலியினை குறைக்கலாம்.

    ×