search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணராஜ சாகர் அணை"

    • பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 6 ஆயிரத்து 367 கனஅடியாக குறைந்து காணப்படுகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையும் கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டியது. இதையடுத்து உபரிநீர் அப்படியே 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 124.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 806 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7752 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 83.46 கனஅடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 346 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 12 ஆயிரத்து 752 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று அது 6 ஆயிரத்து 367 கனஅடியாக குறைந்துக் காணப்படுகிறது. மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ந் தேதி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு பின்னர் 21 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக் கப்பட்டு அது 10 ஆயிரம் கனஅடியாக மீண்டும் குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 8 நாட்களாக 120 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 119.54 அடியாக குறைந்தது.

    • தமிழ்நாடு- கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
    • காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் 2-வது முறையாக நேற்று நிரம்பியது. கேஆர்எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். இந்த அணைக்கு வினாடிக்கு 41,099 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் நீர் அப்படியே முழுமையாக திறந்துவிடப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 68,852 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு- கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் காவிரி நீர் வெள்ளமாக பாய்ந்தோடுவதால் கடந்த 10 நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படவில்லை. காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் ஆக்ரோஷமாக சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 28,856 கன அடியாக உள்ளது. அதாவது மேட்டூர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 52.662 டிஎம்சி ஆகும்.

    • கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
    • ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 8,425 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 102.80 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 562 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 81.89 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 4,711 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 2,292 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் 2,859 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. இங்கு நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் நடைபாதை, மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை, தொங்குப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தும், காவிரி ஆறு, மெயின் அருவி, சினிபால்ஸ உள்ளிட்ட இடங்களில் குளித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

    இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,465 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,832 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து சிறிது குறைந்து 2,149 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 39.76 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 40.05 அடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.22 அடி உயர்ந்தது. அணையில் 12.20 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    இனிவரும் காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் மளமளவென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80அடியாகும்.
    • தொடர் மழையின் காரணமாக 2 அணைகளுக்கும் வினாடிக்கு 36 ஆயிரத்து 517 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.80 அடியாக உயர்ந்து காணப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 644 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 496 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 75,06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 873 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையின் காரணமாக 2 அணைகளுக்கும் வினாடிக்கு 36 ஆயிரத்து 517 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் 2 அணைகளும் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு வெறும் 43 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 39.90 அடியாக குறைந்தது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் வெளி யேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.
    • கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் நீர்மட்டம் குறைந்தது. இதனால் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2899 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2600 கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.

    ஆனால் இந்த உத்தரவுப்படி நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. அதே போல் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் திறக்கவில்லை.

    கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 505 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

    • கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது.
    • கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 710 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் வாய்க்காலில் வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2691 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • கபிணி அணைக்கு வினாடிக்கு 438 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2691 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் கால்வாயில் வினாடிக்கு 4748 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கபிணி அணைக்கு வினாடிக்கு 438 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 ஆயிரத்து 48 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • கபிணி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக இருந்தது.

    கர்நாடகா:

    கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1864 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 884 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் கால்வாயில் வினாடிக்கு 3ஆயிரத்து 701 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது.
    • கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 76.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 64 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 682 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2ஆயிரத்து 688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று நீர்திறப்பு 5ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 2ஆயிரத்து 688 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    • மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது.
    • கபினி அணைக்கு வினாடிக்கு 2,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இன்று காலை நிலவரப்படி 100. 64 அடி (மொத்த கொள்ளளவு 124.80 அடி) தண்ணீர் இருந்தது.

    இந்த அணைக்கு வினாடிக்கு 5,578 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3,598 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 2,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5,598 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4156 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4565 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 3179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2176 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கபினி அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு4153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2176 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 3848 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வினாடிக்கு 3176 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    ×