search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலகாரங்கள்"

    • உற்சாகமான மன நிலையில் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும்.
    • பாதாம் பருப்பு பயண பலகார பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டும்.

    பயணங்கள் மேற்கொள்பவர்கள் வீட்டை விட்டு புறப்படும்போதே அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்துச் செல்வது போல பயணத்திற்கு ஏற்ற பலகாரங்களையும் கொண்டு செல்ல வேண்டும். அவை உற்சாகமான மன நிலையில் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும் விதத்தில் அமையும்.

    அந்த வகையில் பாதாம் பருப்பு பயண பலகார பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டும். அதில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உண்டு. அது அன்றாட வைட்டமின் ஈ தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடும்.

    பயணத்திற்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக 5, 6 பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அதனை சாப்பிடுவது நொறுக்குத்தீனிக்கு மாற்றாக அமையும். உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை கொடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தயிரில் பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதும் உடலுக்கு வலு சேர்க்கும்.

    பிஸ்கெட் சாப்பிட விரும்புபவர்கள் ஓட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டை உடன் எடுத்துச் செல்லலாம். அது பயணங்களின்போது செரிமான செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு உதவி புரியும். நொறுக்குத்தீனி சாப்பிட ஆசைப்படுபவர்கள் புரதம் கலந்த குக்கீஸ், சாக்லெட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். கோதுமை பிரெட், உலர் பழங்கள், உலர் தானியங்களில் தயாரான பலகாரங்களையும் பயணத்தின்போது உட்கொள்ளலாம்.

    • பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள்.

    பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள். பண்டிகை நாட்களை தித்திக்க வைக்கும்படி, பரவலாக ருசிக்கப்படும் இனிப்பு பலகாரங்கள் உங்கள் பார்வைக்கு...

    குலாப் ஜாமூன்:

    சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு பலகாரம் இது. பாலை மிதமான சூட்டில் நீண்ட நேரம் கொதிக்கவிட்டு, அதனை சுண்ட வைத்து அதில் மைதா மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும். பின்பு அதனை சர்க்கரை பாகில் ஊற வைத்து ருசிப்பர். இப்போது குலாப் ஜாமூன் மாவு கடைகளில் கிடைக்கிறது. அதனை கொண்டு சுலபமாக தயாரித்து ருசிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    பால் பேடா:

    பால், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இது பண்டிகை காலங்களில் ருசிக்கப்படும் பலகாரங்களில் தனித்துவமானது. வட்ட வடிவில் இருக்கும் இதனை சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பால் பேடா செய்வதற்கு சுமார் 2 மணி நேரமாகும். ஒரு லிட்டர் பாலை பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடிப்பிடிக்க வாய்ப்புள்ளது.

    பால் பாதியாக குறைந்ததும் 100 கிராம் சர்க்கரை, அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் சேர்க்கவும். பால் நன்றாக சுண்டி, பாத்திரத்திலேயே தனியாக திரண்டு வரும். அப்போது மிக குறைந்த தீயில் வைத்து இறக்கவும். கோவா கையில் ஒட்டாத பதத்தில் இருக்க வேண்டும். அதனை சிறு உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவத்தில் அலங்கரித்து ருசிக்கலாம்.

    காஜு கத்லி:

    முந்திரி பர்பி என்றும் அழைக்கப்படும் இது முகலாய காலத்தை சேர்ந்தது. காஜு என்றால் முந்திரி என்றும், பர்பி என்பது பாலுடன் சர்க்கரை, குங்குமப்பூ போன்ற மசாலா பொருட்கள் கலந்து கொதிக்கவைத்து கெட்டி பதத்துக்கு மாற்றுவது என்றும் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இது வைரத்தை போன்று வெட்டி பரிமாறப்படுவதால் வைர வடிவ இனிப்பு பலகாரமாகவும் காட்சி அளிக்கிறது.

    ஜிலேபி:

    மைதா, கடலை மாவு, சர்க்கரை, நெய், குங்குமப்பூபோன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிலேபி சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி ருசிக்கும் பலகாரமாக இருக்கிறது. முறுக்கு போன்று சுருள் வடிவில் தயாரிக்கபப்டும் இது சர்க்கரை பாகில் ஊறவைத்து ருசிக்கப்படுகிறது.

    தேங்காய் பர்பி:

    தேங்காய் துருவல், முந்திரி, பாதாம், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயார் செய்யப்படும் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் இனிப்பு பலகாரமாகும். இதனை தயார் செய்வதும் எளிதானது.

    தேவையானவை:

    தேங்காய் துருவல் - 1 கப்

    சர்க்கரை - 1 கப்

    ஏலக்காய் - 4 (பொடித்தது)

    முந்திரி, பாதாம் - தலா 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:
    முதலில் தேங்காய்த் துருவலை வாணலியில் கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனை இறக்கியதும் மற்றொரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். அந்த பதத்துக்கு வந்ததும் தேங்காய் துருவலைக் கொட்டி கிளறவும். இடைவிடாமல் தொடர்ச்சியாக கிளறவும். இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும். கெட்டி பதத்துடன் வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். பின்பு நெய்யில் முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தேங்காய் கலவையில் கொட்டி லேசாக கிளறவும். ஓரளவுக்கு சூடு ஆறியதும் துண்டுகளாக வெட்டி ருசிக்கலாம்.

    • தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முத்தூ:

    முத்தூர் பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கு சுத்தமான பலகாரங்களை விற்பனை செய்யாத கடைகள் சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    வெள்ளகோவில், முத்தூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் முத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் பலகார கடைகள், உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள், தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயார் செய்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் தவறாமல் உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    காலாவதியாக உள்ள இனிப்பு, கார உணவு பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வதை தவிர்த்தல் வேண்டும். நல்ல சுத்தமான உணவு பொருட்கள், சுத்தமான எண்ணெய் ஆகிவற்றை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் புதிதாக தயார் செய்யப்பட்ட பலகாரத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே முத்தூர் நகர, கிராம பகுதி தீபாவளி பண்டிகை இனிப்பு காரம் தயார் செய்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் இனிப்புகள், காரங்கள், காலாவதியான உணவுப் பொருட்கள் ஆகியவற்றினை விற்பனை செய்ய வேண்டாம்.

    கெட்டுப்போன இனிப்பு கார வகைகள், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் மீது உணவு பாதுகாப்பு துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கிருஷ்ண சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.
    • சீடை , முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும்.

    கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான உணவுகள் வைத்து படைக்கப்படும். அதில் இனிப்பு சீடை, முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும். அதில் மிகமுக்கிய பலகாரமான சீடை எப்படி செய்வது என பார்க்கலாம். கிருஷ்ண சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு- ஒரு கப்

    வெல்லம் - 100 கிராம்

    எண்ணை - ஒரு கப்

    ஏலக்காய் பொடி- சிறிது

    உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

    வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி

    செய்முறை

    உளுத்தம் பருப்பு வெறும் கடாயில் வறுத்து அதனை மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். கடாயில் அரிசி மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு காய்ச்சவும். இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். பாகு பதம் அல்லாமல் வெல்லம் நன்கு கரைந்திருந்தாலே போதும் இறக்கி விடலாம். ஒரு வாய் அகண்ட பாத்திரத்தில் அரிசி  போட்டு அதில் வெல்லத்தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். அதில் எள் மற்றும் உளுத்தம் மாவையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். அதன் பின்னர் வாணலியில் எண்ணை ஊற்றி சூடாக்கி, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பிரித்து எடுக்கலாம். இதுதான் கிருஷ்ண சீடை.

    ×