என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஏஜி அறிக்கை"

    • நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    சேலம்:

    தமிழகத்தை பொறுத்தவரை 46 சுங்கச்சாவடிகள் மூலம், நாள் ஒன்றுக்கு 17 கோடி ரூபாய் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    குறிப்பாக கிருஷ்ணகிரி-தோப்பூர் வரை 62 கி.மீ. சாலை, கிருஷ்ணகிரி முதல் தும்பிபாடி வரையிலான 86 கி.மீட்டர் சாலைக்கு பாளையம் சுங்கச்சாவடிக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.715.86 கோடி கட்டணம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இதேபோல் தும்பிபாடியிலிருந்து நாமக்கல் வரை (68.62 கிமீ) செல்லும் வாகனங்களிடமிருந்து ஓமலூர் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கிறது.

    இந்த நிலையில் ஓமலூர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடிகளில் ஜூன் மாதம் 2010-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ. 133.36 கோடி வருவாய் இழப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஏற்படுத்தி இருப்பது சி.ஏ.ஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    இதில் பாளையம் சுங்கச்சாவடி ரூ. 73.88 கோடியும், ஓமலூர் சுங்கச்சாவடியில் 54.48 கோடியும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாலைகள் அமைக்க முன்னணி நிறுவனங்களுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் வருவாய்ப் பகிர்வு ஒப்பந்தத்தில் தும்பிப்பாடி-சேலம் பகுதி மட்டும் சேர்க்கப்பட்டு, சேலம் புறவழிச்சாலை அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அதுபோல் தொப்பூர்-தொப்பூர் கேட் வரை 7.4 கிலோ மீட்டருக்கான விதி சேர்க்கப்படவில்லை. இப்படி பல்வேறு வகைகளில் இழப்பை ஏற்படுத்துள்ளதை சி.ஏ.ஜி கண்டுபிடித்துள்ளது.

    • போக்குவரத்து கழக கடன் 2017க்கு முன்பாக இருந்த கடனைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது.

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதன்மை கணக்காய்வு துறைத் தலைவர் ஜெய்சங்கர் சிஏஜி அறிக்கையை வெளியிட்டார்.

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் 2017க்கு முன்பாக இருந்த கடனைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து ஊழியர்களின் செலவினம் மட்டும் 55.20% முதல் 63.55 % வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநில நிதிநிலை (ஏப்.2022 முதல் மார்ச் 2023 வரை) மீதான சிஏஜி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

    2022-23 நிதியாண்டில் தேசிய தனிநபர் GDP-ஐ விட, தமிழ்நாட்டின் தனிநபர் GDP அதிகமாக உள்ளது. CAG அறிக்கை தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் (GDP) தேசிய சராசரி ₹1,96,983 ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டின் சராசரி ₹3,08,020 ஆக உள்ளது.

    தமிழ்நாட்டில் 2021-2022ல் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2022-2023ல் 36,215 கோடியாக குறைந்துள்ளது. ஆகவே முந்தைய ஆண்டின் வருவாய் வரவுகளை விட 2022-2023ல் 17% வருவாய் அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) - ரூ.23.64 லட்சம் கோடியாகவும் வரி வருவாய் - ரூ.1.88 லட்சம் கோடியாகவும் மொத்த வருவாய் - ரூ.2.43 லட்சம் கோடியாகவும் GSDP வளர்ச்சி - 14.16% ஆகவும் உள்ளது.

    தமிழ்நாட்டில் மாநில அரசின் கடன் கட்டுக்குள் உள்ளது. தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது

    மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் 28% காலிப்பணியிடங்கள் உள்ளது.

    • அமைச்சரவை மற்றும் சட்டசபையின் ஒப்புதல்களை அரசு புறக்கணித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
    • இந்த அறிக்கை பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    CAG என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களை தணிக்கை செய்யும் சட்டப்பூர்வ அமைப்பாகும். டெல்லி மதுபான கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை ஒன்று தற்போது கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    டெல்லி ஆம் ஆத்மி அரசின் கீழ் வகுக்கப்பட்ட மதுதான் காலால் கொள்கைகளால் மாநிலத்திற்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

    கசிந்த அறிக்கையின் சில பகுதிகளின்படி, சரண்டர் செய்யப்பட்ட மதுபான உரிமங்களை மறு டெண்டர் விடாததால் ரூ.890 கோடியும், மண்டல உரிமதாரர்களுக்கு வழங்கப்பட்ட விலக்குகளால் ரூ.941 கோடியும் நஷ்டம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர், அமைச்சரவை மற்றும் சட்டசபையின் ஒப்புதல்களை அரசு புறக்கணித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

    அதுமட்டுமின்றி, மணிஷ் சிசோடியா தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM) நிபுணர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில் தேர்தல் நேரத்தில் இந்த அறிக்கை கசிந்துள்ளதாக கூறப்படுவது அரசியலில் புயலை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த அறிக்கை பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ எதுவும் வெளியாகாத நிலையில் கசிந்துள்ளதாக கூறும் இந்த அறிக்கையை பாஜகவால் தர முடியுமா என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ×