என் மலர்
நீங்கள் தேடியது "பல்கலைக்கழக துணை வேந்தர்"
- முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 3 உறுப்பினர்கள் கொண்ட தேர்வு குழு அமைக்கப்படும் நிலையில் தற்போது 4 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைப்பு.
சென்னை பல்கலைக்கழகம் உள்பட மூன்று பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 3 உறுப்பினர்கள் கொண்ட தேர்வு குழு அமைக்கப்படும் நிலையில் தற்போது 4 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல்கலைக்கழகங்க துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் அறிவித்துள்ளார்.
- ஆளுநர் வெளியிட்ட அறிக்கையை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என்றார் அமைச்சர் பொன்முடி.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் வெளியிட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
மேலும், துணைவேந்தரை தேர்வு செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
- மாநில உரிமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார்.
- முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர்.
மதுரை:
மதுரை அரசு மீனாட்சி கலைக் கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் ஆணையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க அவரது வழிகாட்டுதலின்படி அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பல வகை தொழில் நுட்ப கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கான 2024-25 ஆண்டுக்கான பணி மாறுதல் திணை வழியாக ஒளிவு மறைவு அற்ற பொது கலந்தாய்வு நடத்த உத்தரவு விடப்பட்டது.
அதன் அடிப்படையில் இணைய வழியாக மனு செய்த 377 ஆசிரியர்களின் மனுக்களில் தகுதி உடைய 198 நபர்களுக்கு பணி மாறுதல் ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. அதே போல் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரியும் 285 நபர்களின் மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய 93 பணியிடங்களுக்கு பணி மாறுதல் ஆணையும் இன்று வழங்கப்பட்டது.
இதுவரை இல்லாத நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று எந்தவொரு ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படைத்த்தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது. பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரால் எந்த அளவுக்கு இடர்பாடுகள் நிலவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
மாநில உரிமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார். அத்துடன் அந்த விஷயத்தில் முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக இருந்து எங்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர். அந்த பணியும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.