search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடல்"

    • பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும், இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்ந்து நன்கு வதக்கவும்.
    • இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    ஆடு போட்டி - 1

    சின்ன வெங்காயம் - 100கி

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 2

    பச்சை மிளகாய் - 4

    பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு

    சோம்பு - தேவையான அளவு

    மிளகு, சீரகம் - 2 ஸ்பூன்

    தேங்காய் - துருவியது சிறிதளவு

    இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    கொத்தமல்லி - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    • ஆடு போட்டியை இரண்டு முதல் மூன்று முறை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்

    • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும் அதில் லவங்கம், கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

    • பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து அதையும் நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

    • இதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கி விடவும்.

    • இதை ஆறவிட்டு பின்னர் ஒரு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்து பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து வதக்கவும்.

    • இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    • பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும், இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்ந்து நன்கு வதக்கவும்.

    • அதன்பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள ஆடு போட்டி சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் நன்கு பிரட்டவும்.

    • பிரட்டிய ஆடு போட்டியில் உள்ள நீர் வெளியே வந்தவுடன், அதனுடன் அரைத்து வைத்திருந்த சின்னவெங்காயம் விழுதை சேர்க்கவும்.

    • இதனுடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியா தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்

    • பின்னர் குக்கரை மூடி வைத்து 7 முதல் 8 விசில் வரும் வரை சமைக்கவும்.

    • இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

    • இதோ சுவையான இட்லி, தோசை, சாப்பாடு, சப்பாத்தி என்று அனைத்திற்கும் சாப்பிட உகந்த ஆடு போட்டி கிரெவி ரெடி.

    • சிறுநீர் பை அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை.
    • மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வலி நிவாரணிகளை வழங்கினர்.

    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டபோது அவரது குடல் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    63 வயதான அந்த நபருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சிஸ்டெக்டமி என்கிற சிறுநீர் பை அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    அடி வயிற்றில் தையல் போட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு பிறகு அவை மருத்துவர்களால் அகற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து, நபர் அவரது குடும்பத்தினருடன் சாப்பிடுவதற்காக உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருமலும் வந்துள்ளது.

    அவர் தும்பிய வேகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் இருந்து குடல் வெளியே வந்தது. இதனால், பயந்துபோன நபர் தனது சட்டையால் வயிற்றை மூடிக் கொண்டு ஆம்புலன்சை வரவழைத்தார்.

    மருத்துவ உதவியாளர்கள் விரைவாக வந்து, காயத்தை சரி செய்தனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வலி நிவாரணிகளை வழங்கினர்.

    மூன்று சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்கள், குடல்களை மீண்டும் வயிற்றுக்குள் கவனமாக வைத்து சிறு குடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்தனர்.

    காயங்கள் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    இருப்பினும், தும்மலால் குடல் வெளியேறிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • துரித உணவு வகைகளை சாப்பிட வேண்டாம்.
    • செரிமானம் சரியாக இருந்தாலே நம்முடைய உடல் சரியாக இருக்கும்.

    இரைப்பை குடல் கோளாறுகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நவீன மையத்தை அப்பல்லோ ஆஸ்பத்திரி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. இதுதொடர்பாகவும், இரைப்பை குடல் ரத்தப்போக்கு குறித்தும் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் இரைப்பை குடல் மூத்த டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் ஆர்.கே.வெங்கடாச்சலம், இரைப்பை குடல் சார்ந்த லண்டன் டாக்டர் மோ தபீக் ஆகியோர் விளக்கி கூறினார்கள். இதில் மூத்த டாக்டர் கே.ஆர்.பழனிசாமி கூறியதாவது:-

    இரைப்பை குடல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை மையத்தை வருகிற 18-ந்தேதி (நாளை மறுதினம்) அப்பல்லோ ஆஸ்பத்திரி தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. இதற்கு முன்னதாக இரைப்பை குடல் சார்ந்த நோய் குறித்த கருத்தரங்கம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதன் பின்னர், தென் இந்தியாவை சேர்ந்த 24 இளம் டாக்டர்களுக்கு செரிமானப்பாதையில் இரைப்பை குடல் ரத்தப்போக்குக்கான சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    இரைப்பை, குடல், ரத்தப்போக்கு பிரச்சினைகளில் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் உயிரிழப்பை சந்திக்கிறார்கள். இந்த பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரைப்பை குடல் ரத்தப்போக்கு என்பது செரிமான கோளாறு, வயிற்று புண்கள் மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களின் அறிகுறிகளாக இருக்கிறது.

    தற்போதைய நாகரிக உலகில் துரித உணவுகள் (ஜங்க் மற்றும் பாஸ்ட் புட்) குடல் சார்ந்த நோய்களுக்கு ஆணி வேராக உள்ளது. ஏனென்றால் இந்த வகை உணவுகளால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. துரித உணவு வகைகளை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை தொடர்ந்து சாப்பிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம். அதுவும் தற்போது கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    தாமதமாக இரவு உணவு சாப்பிடுவது, தூக்கமின்மை, ஆல்கஹால் அதிகம் எடுத்துக்கொள்வது, சிகரெட் பிடிப்பது போன்றவை காரணமாகவும் இரைப்பை குடல் நோய் பிரச்சினை வருகிறது. இதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடல் அழற்சிநோய் மேற்கத்திய நாடுகளில் அதிகம் இருந்தது. தற்போது மேற்கத்திய கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்க தொடங்கியதில் இருந்து, இங்கும் குடல் அழற்சிநோய் பாதிப்பு அதிகரித்துவிட்டது. அதிலும் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    செரிமானம் சரியாக இருந்தாலே நம்முடைய உடல் சரியாக இருக்கும். அதில் பழைய சோறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதை சாப்பிடுவதால் செரிமானம் சீராக உள்ளது. குடிநீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்து நன்றாக தூங்குவது, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலமும் நம் உடல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×