search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கண்டனம்"

    • புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது.
    • இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நேபால்:

    இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா,கலாபானி ஆகிய பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய பகுதிகளை இணைத்து புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படம், நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளது.

    100 ரூபாய் நோட்டுகளில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி உள்ளிட்ட பகுதிகள் உள்ள நேபாளத்தின் புதிய வரைபடத்தை அச்சிட பிரதமர் புஷ்பகமல் பிரசந்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு செய்தித்தொடர்பாளர் ரேகா சர்மா தெரிவித்தார். நேபாளத்தின் இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • கொலம்பியா மாகாணத்தில் 17 வயது சீக்கிய மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
    • குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.

    கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 17 வயது சீக்கிய மாணவர் தாக்கப்பட்டுள்ளார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் அவர், ரட்லேண்ட சாலை தெற்கு-ராப்பூர் சாலை கிழக்கு சந்திப்பில், பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றபோது இரண்டு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு முன்பு பஸ்சில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் பஸ்சில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய துணை தூதரகம் கூறும்போது, "சீக்கிய மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்து உள்ளது.

    ×