என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆல்கஹால்"
- கடந்த 2019-ம் ஆண்டில் மது அருந்துவதால் 26 லட்சம் இறப்புகள் ஏற்பட்டது.
- அந்த உயிரிழப்புகளில் முக்கால்வாசி பேர் ஆண்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
ஜெனீவா:
ஆல்கஹால் மற்றும் போதை பொருளால் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு ஆண்டும் மதுவினால் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இறப்பு விகிதம் சற்றே குறைந்திருந்தாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், மதுவினால் தூண்டப்பட்ட வன்முறை, துன்புறுத்தல், பல நோய்கள் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏற்படும் 20-ல் ஒரு மரணத்துக்குக் காரணமாக உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் மது அருந்துவதால் 26 லட்சம் இறப்புகள் ஏற்பட்டது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி அந்த எண்ணிக்கை உலகளவில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 4.7 சதவீதம் ஆகும். அந்த உயிரிழப்புகளில் முக்கால்வாசி பேர் ஆண்கள்.
2019-ம் ஆண்டில் மது காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் அதிகபட்சமாக 13 சதவீதத்தினர் 20 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மதுவினால் 2019-ல் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 16 லட்சம் பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்களில் 4,74,000 பேர் இதய நோய்களாலும், 4,01,000 பேர் புற்றுநோயாலும், 7,24,000 பேர் போக்குவரத்து விபத்துக்கள், சுய துன்புறுத்தல் உள்ளிட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
9 ஆண்டுக்கு முன் 5.7 லிட்டராக இருந்த உலகளவில் தனிநபர் மது நுகர்வு 2019-ம் ஆண்டில் 5.5 லிட்டராகக் குறைந்துள்ளது என தெரிவிக்கிறது.
- வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு.
- வாசனை எண்ணெய்கள் இயற்கையான வாசனையை வழங்குகின்றன.
இன்றைய காலகட்டத்தில் வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. தண்ணீர். எண்ணெய் மற்றும் ஆல்கஹால் என அதில் கலக்கப்படும் மூலப்பொருட்களின் அடிப்படையில் வாசனை திரவியங்களை வகைப்படுத்தலாம்.
இந்த கலவைகளின் செறிவைப் பொறுத்து நறுமணம் உடலில் நீடிக்கும் நேரத்தைக் கணக்கிடலாம். ஒவ்வொரு வாசனை திரவிய வகைகளும், அதில் சேர்க்கப்படுகின்ற 'எசன்ஷியல் ஆயில்' என்று சொல்லப்படும் எண்ணெய்யின் செறிவைப் பொறுத்து மாறுபடும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே...
பெர்ஃபியூம்:
இந்த நறுமணக் கலவையில் 20 முதல் 30 சதவீதம் வரை, அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனைச்சாறு கலந்திருக்கும். இது அதிக செறிவு கொண்டது. எண்ணெய்களின் அதிக செறிவு காரணமாக மற்ற எல்லா வகைகளை காட்டிலும் இது விலை உயர்ந்தது. இதன் நறுமணம் 24 மணி நேரம் வரை நீடிக்கும். பெர்பியூமில் குறைந்த அளவு ஆல்கஹால் இருப்பதால் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.
ஈவ் டி பொபியூம்:
15 முதல் 20 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனை சாறு கலந்திருக்கும் நறுமணக் கலவை இதுவாகும். இந்த கலவையில் சற்றே அதிக ஆல்கஹால் மற்றும் நீர் கலந்திருக்கும். இது 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும். ஆல்கஹால் கலப்பு சற்று அதிகமாக இருந்தாலும், உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற நறுமணக்கலவை இதுவாகும்.
ஈவ் டி டாய்லெட்:
இந்த வாசனை திரவிய வகையானது 5 முதல் 20 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய் அல்லது நறுமணச்சாறு கொண்டது. இதன் வாசம் 2 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும். இது உடலையும், கூந்தலையும் நறுமணப்படுத்த பயன்படுகிறது.
ஈவ் டி கொலோன்:
ஆண்களுக்கான வாசனை திரவியமாக கருதப்படும் இதில், 2 முதல் 4 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனைச்சாறு நிறைந்திருக்கும். இது 2 மணி நேரம் வரை நீடிக்கும். விலையும் மலிவானது.
ஈவ் பிரைஸ்:
இந்த வகை வாசனை திரவியமானது. 1 முதல் 3 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய் அல்லது வாசனைச் சாறு கொண்டது. தண்ணீர்தான் இதன் முக்கிய மூலப்பொருள். இது ஒரு மணி நேரம் வரை நீடிக்கும். இதில் குறைந்த அளவு ஆல்கஹால் கலக்கப்படும்.
வாசனை எண்ணெய்கள்:
உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை போக்க உதவுபவையே வாசனை எண்ணெய்கள், ஆல்கஹால் அடிப்படையிலான வாசனை திரவியங்களை விட இவை அதிக சக்தி வாய்ந்த, இயற்கையான வாசனையை வழங்குகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்