என் மலர்
நீங்கள் தேடியது "மொபட்டில் இருந்து"
- மொபட்டில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார்.
- சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார்.
சிவகிரி:
திருப்பூர் மாவட்டம் சேனாபதிபாளையம் அருகே ஏக்கதான்வலசை சேர்ந்தவர் கார்த்திகேயன் (31) .தொழிலாளி. இவர் கொடுமுடி அருகே உள்ள ஒரு தனியார் புளூமெட்டல் நிறுவனத்தில் தொழிலாளி யாக உள்ளார்.
இவர் சம்பவத்தன்று கொடுமுடி அருகே உள்ள பெருமாகோயில்புதூர் எலந்ததோப்பு அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கார்த்தி கேயனுக்கு தலை யில் பலத்த அடிபட்டு ள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்தி கேயனை மீட்டு சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை க்காக கொண்டு சென்று ள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார். இசசம்பவம் குறித்து சிவகிரி போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.
- நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தார்.
- சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.
பெருந்துறை:
பவானி சீட்டி காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 33). மெக்கானிக். இவர் சம்பவத்தன்று இரவு பெருந்துறை சிப்காட்டில் வேலையை முடித்து விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பி சென்றார்.
பெருந்துறை பவானி ரோடு, டீச்சர் காலனி அருகில் சென்றபோது நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.