search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நந்தி தீர்த்தம்"

    • இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. நான்கு கால் மண்டபம்.
    • ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர்.

    வடக்கு வாயிலை அடுத்து வரும்போது 'நந்தி தீர்த்தம்' உள்ளது.

    கரையில் நந்தி உள்ளது. வலமாக வரும்போது அலுவலக மண்டபக் கற்சுவரில்,

    (நமக்கு இடப்பால்) அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது.

    இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. நான்கு கால் மண்டபம்.

    ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர்.

    இருவரையும் வணங்கி, ஐந்து நிலைகளையுடைய உள் கோபுரத்துள் நுழைகிறோம்.

    இக்கோபுரம் வண்ணக்கோபுரமாகச் சிற்பங்களுடன் காட்சி தருகிறது.

    நுழையும்போது, வாயிலில் இடப்பால் 'அநுக்கிரக நந்திகேஸ்வரர்' தேவியுடன் காட்சி தருகின்றார்.

    உள் நுழைந்து வலமாகப் பிராகாரத்தில் வரும்போது, சோமாஸ்கந்தர் சந்நிதி மிக அழகாகவுள்ளது.

    இப்பிராகாரத்தில், ஆத்மநாதர் சந்நிதி (பீடம் மட்டுமே கொண்டது), இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம் பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனிக் தனிக் கோவில்களாக அமைந்துள்ளன.

    ஆறுமுகப்பெருமான் சந்நிதி அழகாகவுள்ளது. கந்தர் அநுபூதிப் பாடல்கள் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் அழகான முன் மண்டபத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.

    உள்ளே வலம் வரலாம். நின்ற திருக்கோலம்.

    • பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது
    • கனமழையின் காரணமாக ஏரி, குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து, தண்ணீர் கொட்டுகிறது. இந்த தண்ணீர், நந்தி வாயில் இருந்து கொட்டுவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மலையில் உள்ள நந்தி தீர்த்தத்தில் தண்ணீர் கொட்டும் காட்சி பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது.

    ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் பல அருவிகள் காணப்படும் நிலையில், நந்தி வாயிலிருந்து தண்ணீர் ஊற்றுவதை காண உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    ×