என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறிேநாய்"

    • முதுகுளத்தூர் அருகே வெறிேநாய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் கீரனூர் கால்நடை மருந்தகம் சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. நல்லூர் ஊராட்சி தலைவர் தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் நல்லூர், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வெறிநாய் கடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கீரனூர் கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×