search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில் ரத்து"

    • 20 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படவில்லை.
    • பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு மின்சார ரெயில்களே பெரிதும் கை கொடுத்து வருகின்றன.

    இந்த மின்சார ரெயில்கள் பராமரிப்பு பணிகளுக்காக தற்போது அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் முகூர்த்த நாளான இன்று சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையில் மட்டுமே மின்சார ரெயில்கள் பெரிதும் இடைவெளிவிட்டே இயக்கப்பட்டன.

    இதனால் குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ஆகிய 3 ரெயில் நிலையங்களுக்கும் மின்சார ரெயில் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது.

    கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கம் போல 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படவில்லை. காலை 8.30 மணியில் இருந்து ஒரு மணிநேர இடைவெளிவிட்டே ரெயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    முகூர்த்த நாளான இன்று பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு ரெயில் பயணத்தையே பெரிதும் நம்பியிருந்தனர்.

    ஆனால் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்ததால் திருமண நிகழ்ச்சி களுக்கு சென்றவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர்.

    மணிக்கணக்கில் காத்திருந்தே மின்சார ரெயில்களில் பயணம் செய்ய நேரிட்டது. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப் பட்டதையடுத்து கூடுதல் பஸ் சேவைகளும் இயக்கப்பட்டன.


    பஸ்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மெட்ரோ ரெயில்களிலும் மக்கள் இன்று அதிக அள வில் பயணம் மேற்கொண்ட னர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    திருமண வீடுகளுக்கு செல்வதற்காக பட்டுச் சேலை பட்டு வேட்டியுடன் வீட்டில் இருந்து புறப்பட்ட கணவன்-மனைவி பலர் திருமண வீடுகளுக்கு செல்வதற்கு முன்பாகவே சேலைகளும் வேட்டிகளும் நெரிசலில் சிக்கி கசங்கி போயிருந்ததையும் காண முடிந்தது.

    இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, "இது போன்ற முகூர்த்த நாட்களை எல்லாம் கணக்கில் கொண்டு இனி வரும் காலங்களில் அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    பொதுமக்கள் அதிக அளவில் விடுமுறை நாட்களில் ரெயில்களை பயன்படுத்துவதாக இருந்தால் அன்றைய தினம் பராமரிப்பு பணிகளை தள்ளி வைத்துவிட்டு வேறு ஒரு நாளில் அந்த பணிகளை செய்ய வேண்டும்" என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    • சென்னை கடற்கரையிலிருந்து நாளை காலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
    • சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

    சென்னை:

    சென்னை கடற்கரை - விழுப்புரம் வழித்தடத்தில் கடற்கரை - எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணி முதல் நாளை (30-ந்தேதி) காலை 4.30 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரெயில்கள் முழுவதுமாகவும், சில மின்சார ரெயில்கள் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.10, 9.30 ஆகிய நேரங்களிலும், நாளை காலை 4.15 மணிக்கும் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.40, 11.20, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரையிலிருந்து நாளை காலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், மறுமார்க்கமாக, திருவள்ளூரில் இருந்து இன்று இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டியிலிருந்து இன்று இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும், மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

    * சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 10.40 மணிக்கும், நாளை காலை 3.55 மணிக்கும் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

    * செங்கல்பட்டிலிருந்து இன்று இரவு 8.45, 9.10, 10.10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

    * திருமால்பூரில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரவு 8.45 மணிக்கு செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் ரத்து.

    சென்னை:

    சென்னை கடற்கரை- விழுப்புரம் பிரிவில் கடற்கரை-எழும்பூர் இடையே இன்று இரவு 10.30 மணி முதல் நாளை 25-ந் தேதி அதிகாலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதன் காரணமாக 11 மின்சார ரெயில்கள் முழுவதும் 10 ரெயில்கள் பகுதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து.

    கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்.

    தாம்பரம்-கடற்கரை இரவு 10.40 மணி மின்சார ரெயில், இரவு 11.20 மணி தாம்பரம்-கடற்கரை ரெயில், இரவு 11.40 மணி தாம்பரம்-கடற்கரை ரெயில். திருவள்ளூரில் இருந்து கடற்கரைக்கு இரவு 9.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில். கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கு புறப்படும் ரெயில்.

    இரவு 9.20 மணி கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில், இரவு 9.55 மணி கும்மிடிப்பூண்டி-கடற்கரை மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு நாளை அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்,

    கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் ஆகிய ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இரவு 8.45 மணிக்கு செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 9.10 மணிக்கு செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை நிலையம் இடையே ரத்து. திருவள்ளூர்-கடற்கரை இடையே இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை இடையே ரத்து. செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 10.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை இடையே ரத்து.

    செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரவு 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்.

    கடற்கரை-தாம்பரம் இடையே 11.05 மணி, இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை அதிகாலை 3.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை- எழும்பூர் நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்று சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.

    • கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.55, 10.10, 10.40, 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், சென்னை எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து நாளை இரவு 10.30, 11, 11,20, 11.40, 11.59, மற்றும் 19-ம் தேதி அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து நாளை இரவு 10.10, 11 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து நாளை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    திருமால்பூரில் இருந்து நாளை இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகர்கோவிலுக்கு செல்லவே ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.
    • தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேலும் திருச்சி, மதுரை, நெல்லை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சென்றன. அந்த ரெயில்களில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரெயில் நிலையங்களில் இருந்து ஏற வேண்டியவர்கள் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணித்தனர்.

    மின்சார ரெயில்களும் பல்லாவரம் வரை இயக்கப்பட்டது. இதனால் மின்சார ரெயில்களில் சீக்கிரமாக சென்றுவிடலாம் என்று நினைத்தவர்களாலும் அது முடியவில்லை. எனவே பயணிகள் அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோ, கார்களில் படையெடுத்தனர்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு சென்ற பயணிகளும் அதிக அளவில் சென்றதால் ஜி.எஸ்.டி.ரோடு முழுவதும் வாகன நெரிசலில் சிக்கி திணறியது.

    குரோம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்கு 2 மணி நேரம் வரை ஆனதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ டிரைவர்கள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி வசூலித்தார்கள்.

    போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததை காரணம் காட்டி ஆட்டோ டிரைவர்கள் கிளாம்பாக்கத்துக்கு சவாரி வர மறுத்தனர். இதனால் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்து பயணித்தார்கள்.

    அரசு பஸ்கள் போதிய அளவில் இல்லாததால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இரவில் வேறு வழியில்லாமல் ஆம்னி பஸ்களை நாடினார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் இரு மடங்கு கட்டணம் வசூலித்தார்கள்.

    வழக்கமாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.700 முதல் ரூ.1500 வரை வசூலிக்கப்படும். நேற்று ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.

    தனி நபராக சென்றவர்கள் கட்டண உயர்வை கண்டு கொள்ளாமல் பயணித்தார்கள். ஆனால் குடும்பமாக சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டார்கள்.

    நேற்று இரவில் மதுரை செல்லவே ரூ.3,500 கட்டணம் வசூலித்தார்கள். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனாலும் இந்த மாதிரி அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

    செயலிகளில் வெளிப்படையாக வெளியிடப்படும் கட்டணங்கள் அதிகமாக இருந்தால் மட்டும் ஒரு சில பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது வெறும் கண் துடைப்பு நாடகம் என்றார் தஞ்சையை சேர்ந்த பயணி சிதம்பரம்.

    அவர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்ல ரூ.2,500 கொடுத்து டிக்கெட் வாங்கியதாக தெரிவித்தார்.

    • விடுமுறை நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையே ஸ்தம்பித்து போனது.
    • பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும்பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    சென்னை:

    தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் நேற்று 2-வது நாளாக பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ரெயில் ரத்து செய்யப்பட்டதை அறிந்த பயணிகள் அதிக அளவு தங்கள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றனர். தாம்பரம் பஸ் நிலையத்தில் வழக்கம்போல பரபரப்பாக காணப்பட்டது. மேலும், பல்லாவரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் மற்றும் தியாகராய நகர் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல, சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே எழும்பூர், கிண்டி, நுங்கம்பாக்கம் போன்ற ரெயில் நிலையங்களில் சிறப்பு ரெயிலுக்காக அதிக அளவு பயணிகள் காத்துகிடந்ததை பார்க்க முடிந்தது.

    இந்த நிலையில், இன்று (5-ம் தேதி) தொடர்ந்து 3-வது நாளாக பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. கடந்த 23-ம் தேதி முதல் நேற்று வரையில் விடுமுறை நாட்களில் மட்டுமே பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இன்று (திங்கட்கிழமை) வேலை நாட்களில் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.

    விடுமுறை நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையே ஸ்தம்பித்து போனது. கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டாலும், ரெயிலில் பயணிக்கும் பயணிகளின் கூட்டத்திற்கு பஸ்கள் இடம் எவ்வாறு போதும் என்ற அளவிற்கு கூட்டம் அலைமோதியது. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். ரெயில் பயணிகளுக்கு விடுமுறை நாள் மிகவும் மோசமான நாளாக அமைந்தது.

    இது ஒருபுறம் இருக்க, இன்று வேலை நாள் என்பதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் என காலை முதலே ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதும். ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் வேறு வழி இன்றி பஸ் நிலையங்களை நோக்கி படையெடுப்பார்கள். பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும்பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ரெயில் ரத்து செய்யப்படுவதால் சில ரெயில் பயணிகள் தங்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்ல இருப்பார்கள். இதனால் புறநகர் பகுதியில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதுவரையில் விடுமுறை நாட்களிலே பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இன்று வேலை நாள் சொல்லவா வேண்டும். இன்று மட்டும் இன்றி தொடர்ந்து வரும் 14-ம் தேதி வரை பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. பயணிகளின் நலனுக்காக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது பயணிகள் அனைவரும் தொடர்ந்து இதே அவதி நிலையில்தான் பயணம் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ரெயில்வே நிர்வாகம் என்ன தீர்வு கொடுக்கும் என பயணிகள் தங்கள் ஆதங்கங்களை எதிர்பாா்ப்பாக வைத்து காத்திருக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாம்பரம் ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தற்போது 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பயணிகளின் பாதுகாப்பு கருதி ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமாிப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கடந்த 23-ம் தேதி முதல் தாம்பரம் ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    அந்தவகையில், நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு ரெயில்வே நேற்று (1-ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரெயில் நேரத்தில் மாற்றம் இருப்பதாகவும், கூடுதலாக சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை ஏற்கனவே அறிவித்தது போலவே காலை 9.20 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது. தற்போது கூடுதலாக சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19, 9, 9.22, 9.40, 9.50 மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    * இதேபோல ஏற்கனவே அறிவித்திருந்த சிறப்பு ரெயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.45, 10, 10.15, 10.30, 10.45, 11, 11.15, 11.30, 11.45, மதியம் 12, 12.15, 12.30, 12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது.

    * பல்லாவரத்தில் இருந்து காலை 10.17, 10.32, 10.47, 11.02, 11.17, 11.32, 11.47 மதியம் 12.02, 12.17, 12.32, 12.47, 1.02, 1.17, 1.42 இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

    * செங்கல்பட்டு-கூடுவாஞ்சோி, கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

    * நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து காலை 7.45, 8.05, 8.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரெயிலும், அதற்கு மாற்றாக தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான ரெயில்களை போல அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும்.

    * நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மகளிர் சிறப்பு மின்சார ரெயில், அதற்கு மாற்றாக அனைவரும் பயணிக்கும் மின்சார ரெயிலாக இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல, கூடுவாஞ்சேரி-பல்லாவரம் இடையே நாளை(சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை காலை 9.20 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • ரெயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஆவடியிலிருந்து பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும் நாளை மற்றும் 5-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் ஆவடி பணிமனையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 5-ம் தேதி இரவு 12 மணி முதல் காலை 3.30 மணி வரை (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பட்டாபிராமிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், சென்னை சென்டிரலில் (மூர் மார்க்கெட்) இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 4-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், ஆவடியிலிருந்து காலை 3 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும் நாளை (சனிக்கிழமை) மற்றும் 5-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 4-ம் தேதிஆவடி - பட்டாபிராம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, பட்டாபிராமிலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 4-ம் தேதி ஆவடி - பட்டாபிராம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

    மேலும், பட்டாபிராமிலிருந்து காலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 5-ம் தேதி பட்டாபிராம் - ஆவடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
    • சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.30, 8.45 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இன்று காலை 10, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில் சேவை காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • திருவள்ளூருக்கு 5.40 மணிக்கு புறப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.30 மணி வரையில் 14 மின்சார ரெயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, மூர்மார்க்கெட்டிலிருந்து இன்று இரவு 10.35 மணிக்கு பட்டாபிராம் புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து இரவு 11.30, 11.45 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டிலிருந்து நாளை காலை 4.15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 4.30 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு 5.30 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு 5.40 மணிக்கு புறப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 44 மின்சார ரெயில்களின் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், தாம்பரம்-கடற்கரை இடையிலான சேவை காலை 10.05 மணி முதல் மதியம் 3.30 மணி வரையும், செங்கல்பட்டு-கடற்கரை இடையிலான ரெயில் சேவை காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே காலை 11 மணி, 11.50, மதியம் 12.30, 12.50, 1 மணி, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரெயில் சேவை இயக்கப்படும். மறு மார்க்கமாக காலை 9.40, 10.20, 10.55, 11.30, மதியம் 12 மணி, 12.20, 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரெயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ×