search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல் பணம்"

    • கோவில் பூசாரிகளும் அதிகாரிகளும் இணைந்து பணத்தை திருடுவது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
    • கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும்.

    கர்நாடகாவில் உள்ள காளி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் எண்ணப்படும் உண்டியல் பணத்தை கோவில் பூசாரிகள் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோவில் பூசாரிகளும் அதிகாரிகளும் இணைந்து பணத்தை திருடுவது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இணையத்தில் பலரும் இந்த வீடியோ தொடர்பாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டை போல கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் என்று பலரும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்ததாக ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலின் தலைமை அர்ச்சகர் ராமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய ராமச்சந்திரா, "கோவில் பணத்தை திருடிய 2 செயற்குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 2 சமையல்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் நன்கொடை எண்ணும் பணியில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

    பக்தர்களின் காணிக்கைகளை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் கோயில் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. ஆஞ்சநேய ஸ்வாமிக்கு காணிக்கை செலுத்தும் போது பக்தர்கள் பயப்பட தேவையில்லை. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை மோசடி செய்யவோ, திருடவோ வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.

    • ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.
    • மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது?

    திருப்பதி:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பட்ஜெட்டில் 1சதவீத நிதியை திருப்பதி மாநகர வளர்ச்சிக்காக செலவிட முடிவு செய்துள்ளது.

    இதற்கு பா. ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறியதாவது:-

    கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கும் இந்துக்களின் உணர்வுகளை திருப்பதி தேவஸ்தானம் புண்படுத்துகிறது.

    திருப்பதி கோவிலின் புனிதத்தைப் பாதுகாத்து ஆன்மீக மையமாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, கோவிலை பணம் புரளும் பொருளாக மாற்ற கூடாது. பக்தர்கள் மற்றும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் ஒரு நாளும் கழிவதில்லை.

    தேவஸ்தான விதிகளின்படி 1 சதவீதம் செலவழிக்க வாய்ப்பு இல்லை.

    இப்போது 1 சதவீதம் என்கிறார்கள், நாளை அது 10 அல்லது 50 சதவீதமாக அதிகரிக்கும். திருமலையில் தூப தீப நைவேத்யத்திற்கான செலவுகளைச் சமாளிக்க தேவஸ்தானகருவூலம் வறண்டுவிடும்.

    அதன் வசம் எந்த நிதியும் இருக்காது என்று பக்தர்கள் அஞ்சுகின்றனர். இதே போக்கு மற்ற கோவில்களிலும் தொடர்ந்தால், பக்தர்கள் கொடுக்கும் நன்கொடைக்கு யார் பொறுப்பு?

    ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.

    ஆனால், கோவில் நிதியை ஏன் பயன்படுத்த வேண்டும்? மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் நிதியை விடுவித்து வருகிறது.

    மேலும், மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது? பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கோவில் நிதியை ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாக அரசு வாதிடுகிறது.

    உண்மையில், திருப்பதியில் ஆயிரக்கணக்கான கோடி வணிகம் மற்றும் அது வசூலிக்கும் வரிகளை கருத்தில் கொள்ள வேண்டு மானால், அரசாங்கம் தான் பணம் கோவிலுக்கு செலுத்த வேண்டும்.

    திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அறக்கட்டளை வாரிய நியமனங்கள் அரசியல் மறுவாழ்வு மையங்களாக மாறிவிட்டன. மேலும் அவர்களின் முடிவுகள் ஏற்கத்தக்கதாக இல்லை.

    பா.ஜனதா இந்த முடிவுகளை எதிர்க்கும், அதற்கு எதிராக போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×