search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுக்குறிப்புகள்"

    • கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும்.
    • மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம்.

    சப்பாத்தி மாவுடன் சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கையும், சிறிதளவு பாலையும் சேர்த்து பிசைந்து தயார் செய்தால் சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    ஒரு துணியில் ஒருஸ்பூன் அளவு உப்பு முடிந்து மாவில் போட்டுவைத்திருந்தால் மாவில் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

    கொத்தமல்லி தழை, புதினா வாடி விட்டால் அவற்றை தூக்கி எறிந்துவிடாமல் மிக்ஸியில் அரைத்துப்பொடி செய்து காய்கறி வறுவலில் தூவி இறக்கினால் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும். இலைப்பாகத்தை ஈரத்துணியில் மூடி வைக்கலாம். அப்படி செய்தால் கீரைக்கட்டு வாடாமல் இருக்கும்.

    சுண்டல் கெட்டுப்போகாமல் இருக்க கொப்பரைத்தேங்காயைத் துருவி, வதக்கிப் போடவும்.

    சாதம் குழைந்து போய் விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அடுப்பை சிறு தீயில் சிறிது நேரம் வைத்துவிட்டு வடித்தால் சாதம் குழைவாக இல்லாமல் கொஞ்சம் பதமாக இருக்கும்.

    மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம். மீன் தண்ணீருக்குள் மூழ்கினால் கெடவில்லை என்பதை அறியலாம்.

    உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு முன்பு உருளைக்கிழங்கை சீவி தண்ணீரில் ஊறப்போட்டு கழுவ வேண்டும். பின்பு மோரில் சிறிதுநேரம் ஊற விட்டு வடித்து எடுத்து பொரித்தால் சிப்ஸ் வெள்ளையாக இருக்கும்.

    தக்காளிப் பழங்களை சிறிது உப்பு கரைத்த நீரில் போட்டு வையுங்கள். பழம் கெடாது, சுவையும் மாறாது.

    • வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
    • பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம்.

    * தேங்காய்க்கு மாற்றாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்துச் சமைத்தால் குருமா புதுமையான சுவையுடன் இருக்கும்.

    * வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    * புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

    * பெருங்காயம் கட்டியாகி விட்டதா? அதில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வையுங்கள். இளகி விடும்.

    * தோசை மாவு சற்று புளித்திருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு தாளித்துப் போட்டு சுவையான ஊத்தப்பம் தயார் செய்யலாம்.

    * சலித்த சப்பாத்தி மாவை வீணாக்காதீர்கள். அடை மாவில் கலந்து சுவையான அடை செய்யலாம்.

     

    * பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம். அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.

    * ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல் தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையை பொடித்துப் போட்டு வதக்கினால் பொரியல் மிகவும் ருசியாக இருக்கும்.

    * இட்லிக்கு சட்னி செய்யும்போது பொட்டுக்கடலை, தேங்காயுடன் வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் ருசியாக இருக்கும்.

    * ரவா கேசரி, அல்வா போன்ற இனிப்பு வகைகள் செய்யும்போது கடைசியில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பு திகட்டாது. சுவையாக இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேன் வெப்பநிலை சாதகமாக இருக்கும்போது வளரக்கூடியவை.
    • பேனின் ஆயுள் ஒரு மாதம் தான். ஒவ்வொரு நாளும் 10 முட்டைகள் வரை இடும்.

    * பேன்கள் மனிதரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் சிறகில்லாத ஆறுகால் பூச்சிகள்.

    * மனிதரின் தலை, உடல், மேகனம் (பாலுறுப்பில் ரோமங்கள் வளரும் இடம்) ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம்.

    * தலையில் வசிக்கும் பேனும், உடற்பேனும் ஒன்றுபோல இருக்கின்றன. ஆனால் மேகனப்பேன் சிறியது.

    * இவற்றின் கால்களில் உள்ள உகிர்களால் இறுகப் பற்றிக் கொள்ளக் கூடியது. இதனால் பேன்கள் தலை மயிர்களையும், உடைகளின் துணிகளையும் இறுக்கமாகப் பற்றிக் கொள்கின்றன.

    * பேன்களின் உறிஞ்சு குழல்கள் முனையில் சிறு கொக்கிகள் இருக்கின்றன. இதன் மூலம் மனிதனின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு மனிதனின் தோலுடன் ஒட்டிக் கொள்கிறது.

    * தலையிலிருக்கும் பேன் வெப்பநிலை சாதகமாக இருக்கும்போது செழித்தோங்கி வளரக்கூடியவை.

    * தட்டையாகவும், வெண்பழுப்பு நிறமுள்ள தலைப் பேன்கள் தோலைத் துளைத்து ரத்தத்தை உறிஞ்சும். அப்போது ஒரு நச்சுப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்நச்சுப் பொருள் கடித்த இடத்தில் ரத்தம் உறையாத படியும் எரிச்சலையும், நமைச்சலையும் கொடுக்கும். அவ்விடத்தில் சிவந்து நீர்க்கசிவு ஏற்பட்டு சீழ்பிடித்து கழுத்தின் பிற்பகுதியில் நெறிகட்டும். உடலின் மேற்பகுதியில் காணாக்கடியும் உண்டாகும்.

    * பேனின் ஆயுள் ஒரு மாதம் தான். ஒவ்வொரு நாளும் 10 முட்டைகள் வரை இடும்.

    * பேன்கள் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யக் கூடியவை.

    * ஒரு மாதத்திற்கு 300 முதல் 1000, 2000 என முட்டைகளை இடுகின்றது.

    * பேனின் முட்டையே ஈரு என்று சொல்லப்படும்.

    * முட்டைகளை தலைமயிரில் ஒட்ட வைத்து விடுகின்றன.

    * எட்டு தினங்களுக்குப் பிறகு குஞ்சு உண்டாகும். இது மறு எட்டு தினத்திற்குள் வளர்ந்து விடும்.

    * பேன் முட்டைகள் முக்கியமாக காதின் பின் பக்கம், கழுத்தின் பின்பக்கம் அதிகமாக காணப்படுகிறது

    * பேன்கள் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கின்றது. 15 முதல் 20 சதவிகிதம் பள்ளி செல்லும் பிள்ளைகளைப் பாதிக்கின்றது.

    * தோலில் உள்ள குருதியை உறிஞ்சி வாழும்.

    * இவை மனிதனின் உடைகளின் மடிப்புகளில் வசிப்பதுடன் அங்கேயே தங்கள் முட்டைகளை வைத்துவிடுகின்றன.

    * முட்டைகளில் இருந்து வரும் லார்வாக்கள் முதிர்ந்த தலைப் பேன்களைப் போல் இருக்கின்றன.

    * வயதானவர்களிடம், கும்பலாகக் கூடி வசிக்கின்றவர்களிடமும், நீண்ட நாட்களாக உடை மாற்றாதவர்களிடமும், அதிக உடைகளை அணிகின்ற குளிர் நாட்டு வாசிகளிடமும், ராணுவத்தினரிடமும் அதிகம் காணப்படும்.

    * உடல் முற்றும் அல்லது சிறப்பாகத் தோள் பட்டை, மார்பு, பிட்டம் முதலிய இடங்களிலும் அரிப்பு ஏற்படும்.

    * சொறிந்த இடங்களில் நகக்காயங்களும், ரத்தக் கசிவும், பக்கு கட்டுதலும் ஏற்படும். மேகனப்பேன் அல்லது அடிவயிற்றுப்பேன்:

    * மேகனத்தில் இருக்கும் சுருண்ட ரோமங்களிடையே காணப்படும்.

    * இப்பேன்கள் ரோமம் உள்ள கண் இமைகளிலும் அக்குள் ரோமங்களிலும், நெஞ்சு முடிகளிலும் பரவும்.

    * இவை ஒரு நாளைக்கு 10 செமீ அளவு ஊர்ந்துசெல்லும். இதனுடைய எடையை காட்டிலும் பலமடங்கு ரத்தத்தை உறிஞ்சக்கூடியது,

    * இவை உடலுறவின் மூலம் ஆணுக்கும் பரவி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவை வெகு சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடியது.

    * மேகனத்தில் அரிப்பு, சொறிவதால் புண்கள் உண்டாகும்.

    * அடிவயிறு, தொடை, நெஞ்சு, கைகளில் கரு நிறமுள்ள சிறு தடிப்புகள் ஏற்படும்.

    பேன்கள் பரவும் விதம்:

    * தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றும்.

    * குழந்தைகளுக்கு ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு தங்களுடைய பொருட்களை பகிர்வதால் அதிகம் பரவ வாய்ப்பு இருக்கிறது.

    * மாணவியர் விடுதிகளிலும், ஒருவருடைய சீப்பினை மற்றொருவர் எடுத்து உபயோகிக்கும் பொழுதும், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே சீப்பினை பயன்படுத்தும் பொழுதும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பேன் பரவுகிறது.

    * மேலும் பேன் உள்ளவர் பயன்படுத்திய ஆடை மூலமாகவும், தலையணை உறை, போர்வை ஆகியவற்றின் மூலமாகவும் பரவுகிறது.

    * நீண்ட தலைமுடி, சுத்தக்குறைவினாலும் பேன் பரவுகின்றது.

    * முக்கியமாக உடல் மற்றும் மேகன பகுதியில் வரும் பேன்கள் ஒழுங்கான சுகாதார முறைகளை பின்பற்றாமல் இருப்பதால் தோன்றும்.

    மருத்துவம்:

    * குழந்தைகளுக்கு பேன்கள் பற்றிய ஒரு அறிவையும் பேன் எப்படி பரவுகிறது என்பதனையும், பேன்களால் ஏற்பட கூடிய பிரச்சனைகளை பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.

    * பேன்களை நீக்கும் பொழுது ஆண்பேன், பெண்பேன், பேன் முட்டை முதலிய அனைத்தையும் முற்றிலுமாக நீக்க வேண்டும்.

    * உடலைச் சுத்தமாக வைத்திருப்பது போல துணிகளையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் பேன்கள் குறையும்.

    * ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பேன் தொற்றுவதைத் தவிர்க்க தலையணை உறைகள், போர்வைகள், ஆடைகள் ஆகியவற்றை கொதிக்கும் வெந்நீரில் இட்டு உலர்த்தி உபயோகிக்க வேண்டும்.

    * தலைப்பேனை ஒழிக்க மொட்டையடித்து ரோமத்தை அறவே நீக்குதல் வேண்டும். இல்லையேல் முடியை ஒட்ட வெட்டிவிடுதல் வேண்டும். அதேபோல் மேகனப்பேனை ஒழித்திட மேகன பாகத்திலுள்ள ரோமத்தை அகற்ற வேண்டும்.

    * குடும்பத்தில் அனைவரும் தனித்தனி சீப்புகளை பயன்படுத்த வேண்டும். அந்த சீப்புகளை அடிக்கடி கழுவி அழுக்குகளை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

    புறமருந்து:

    * தேங்காய் எண்ணெய்யுடன் பூண்டு சாறு கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ தலையில் உள்ள பேன்கள் நீங்கும்.

    * தேங்காய் எண்ணையை சூடு செய்து அதில் வேப்பிலைச் சாறு மற்றும் கற்றாழையை போட்டு காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து குளிக்க பேன் நீங்கும்.

    * வேப்பம்பூவினை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணையை தினம் பயன்படுத்த பேன்கள் வருவது குறையும்.

    * மரத்தினால் ஆன பேன் சீப்புகளைக் கொண்டு அடிக்கடி தலையினை சீவி தலையில் உள்ள பேன்களை நீக்க வேண்டும்.

    * தேங்காய் எண்ணையில் ஒரு டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணெய் கலந்து தலை முழுவதும் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து குளிக்க பேன் நீங்கும். வாரத்திற்கு இருமுறை இவ்வாறு செய்ய வேண்டும்

    * கிராம்பு பொடி செய்து வேப்ப எண்ணைய்யில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிக்க பேன்கள் நீங்கும். வாரத்திற்கு இருமுறை செய்யலாம்.

    * துளசி மற்றும் வேப்பிலை இரண்டையும் தனித் தனியாகக் காயவைத்து, பொடி செய்து இவற்றை சமமான அளவுகளில், எடுத்து, அதைக் கற்றாழை ஜெல்லுடன் சேர்த்துக் கலக்கி தலையில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சுத்தமாக அலசிவிடவும்.

    * நன்றாகப் பொடி செய்த காக்கை கொல்லிப் பருப்பை நீர்விட்டு அரைத்துத் தலையில் தேய்க்கப் பேன்கள் சாகும்.

    * துளசியைத் தலையணைக்கு அடியில் வைத்தும் தூங்கலாம். ஆனால், இதில் பலன் கிடைப்பதற்குக் கொஞ்சம் காலம் ஆகும்.

    * தேவையான அளவு கடுகு எண்ணைய்யை மிதமாக சூடாக்கி, தலை முழுவதும் தடவி, அதிகபட்சமாக 15 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு, சீயக்காய்த்தூள் போட்டு தலைக்குக் குளிக்க வைக்க பேன் தொல்லை நீங்கும்.

    * பத்து வெற்றிலைகளை நன்கு அலசி அரைத்து பேஸ்ட்டாக்கவும். அதைத் தேங்காய் எண்ணைய்யுடன் கலந்து தலையில் பேக்காகப் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசிவிடவும்.

    * ஒரு கைப்பிடி கொழுந்து வேப்பிலைகளை எடுத்து, மிக்சியில் போட்டு பேஸ்ட்போல அரைத்து, இதைத் தலை மற்றும் கூந்தல் முழுவதும் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்க பேன்கள் சாகும்.

    * தேயிலை எண்ணையை தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து குளிக்க பேன் நீங்கும்.

    • உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணம் சிறந்த தூக்கம்.
    • டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டினாலும் முடிவளர்ச்சி குறையும்.

    ஆண்கள் பலருக்கும் அதிக மீசை, தாடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதுள்ள காலக்கட்டத்தில் ஏணைய ஆண்களுக்கு மீசை, தாடி அடர்த்தியாக வளருவதில்லை. இதற்கு மோசமான உணவுப் பழக்கம், தவறான உணவு முறை உள்ளிட்ட பல காரணங்களால் மீசை, தாடி வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது.

    அதேபோல் குறிப்பாக சோப்பு, முகத்தில் தடவும், கிரீம், வேலை பார்க்கும் இடத்தின் சுற்றுச்சூழல் நிலை போன்ற காரணங்களாலும் மீசை தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

    புரோட்டீன் நிறைந்த உணவுகள்

    மீசை தாடி வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பிரச்சனை இருக்காது. இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பீன்ஸ், மீன், முட்டை, பால் உள்ளிட்ட உணவுகளை உங்கள் உணவு முறையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    விளக்கெண்ணெய்

    மீசை மற்றும் தாடி அடர்த்தியாக வளருவதற்கு மற்றொரு மிக எளிதான வழி விளக்கெண்ணெய் கொண்டு தினமும் 15 நிடமிடம் நன்கு மசாஜ் செய்வது நல்லது.

    தூக்கம்

    தூக்கம் உடலுக்கு மிக முக்கியம். உடலின் பல ஆரோக்கிய நன்மைகள் தூக்கத்தை பொறுத்தே இருக்கிறது. அதேபோல் மீசை, தாடி வளர்ச்சிக்கும் தூக்கம் மிக முக்கியம்.

    டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்

    டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண்களுக்கான ஹார்மோன் குறைவாக இருந்தாலும் முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். காரணம் இந்த ஹார்மோன் தான் முடி வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

    இந்த ஹார்மோனை அதிகரிக்க மீன், முட்டை, வேர்க்கடலை, எள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் 

    ஹேர் க்ரீம்

    ரோஸ்மேரி ஆயில், ஆப்பிள் சிடர் வினிகர், கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பின்பு கழுவினால். மீசை, தாடி வளர்ச்சிக்கு நன்கு உதவும்.

    தண்ணீர்

    உடலில் டாக்ஸின் அல்லது வறட்சி இருந்தாலோ முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இதன்காரணமாக தினசரி குறைந்தது 8 கிளாஸ் அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம்.

    மன அழுத்தம்

    மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் தலைமுடி நரைப்பதற்கும் இது முக்கிய காரணமாகும்.

    • இனி முகத்தை பிரகாசமாக வைக்க பார்லர் செல்ல வேண்டாம்.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.

    இனி முகத்தை பிரகாசமாக வைக்க பார்லர் செல்ல வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.

    * பச்சை பயறு மாவு, தயிர், மஞ்சள் சேர்த்து முகத்தில் கழுத்து பகுதியில் தடவி காயவைத்து கழுவினால் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நிறம் குறையும்.

    * 2 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின்னர் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை குறையும்.

    * கற்றாழை சாறை குளிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன் தடவி, வந்தால் முகப்பரு குறையும். சிலருக்கு இது ஒவ்வாமை இருந்தால் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளலாம்.

    * பப்பாளி சாறுடன், முல்தானி மெட்டியை மிக்ஸ் செய்து முகத்தில் தடவிவிட்டு காய்ந்த பின்னர் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

    * வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழத்தின் தோல்களை அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகத்தை பிரகாசமாக வைக்கலாம்.

    * பாலை காய்ச்சி ஆற வைத்த பின்னர் காட்டன் பஞ்சை வைத்து பாலில் தோய்த்து முகத்தை துடைத்து வந்தால், முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு சுத்தமாகும்.

    • ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சையை பயன்படுத்தலாம்.
    • துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம்.

    'ஃபிரிட்ஜ்' எனப்படும் குளிர்பதன பெட்டி பலதையும் போட்டு அடைத்து வைப்பது பலரது வழக்கமாக உள்ளது. இதனால், ஃபிரிட்ஜ் கதவை திறந்ததுமே துர்நாற்றம் அடிக்கும் நிலையும் காணப்படுகிறது. இதைத் தவிர்க்கும் எளிய வழிகள் சில...

    * ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சையை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு துண்டாக வெட்டிய எலுமிச்சையை போடுங்கள். பின்னர் அந்த பாத்திரத்தை ஃபிரிட்ஜில் வைத்திடுங்கள். இப்படி செய்தால் ஃபிரிட்ஜில் தூர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்.

    * ஃபிரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து, அதை கொண்டு ஃபிரிட்ஜை கத்தம் செய்யவும். இது ஃபிரிட்ஜில் தூர்நாற்றத்தை எளிதில் நீக்கிவிடும்.

    * காபி கொட்டையின் உதவியுடனும் ஃபிரிட்ஜில் துர்வாசத்தை நீக்கலாம். காபி கொட்டைகளை ஃபிரிட்ஜில் வெவ்வேறு மூலைகளில் வைத்து இரவு முழுவதும் மூடி வைத்து, காலையில் ஃபிரிட்ஜை திறந்தால் துர்நாற்றம் அடிக்காது.

    * ஃபிரிட்ஜின் துர்நாற்றத்தை நீக்க உப்பு போட்டு சுத்தம் செய்யலாம். வெந்நீரில் உப்பு கலந்து அந்த தண்ணீரில் துணியை நனைத்து ஃபிரிட்ஜை சுத்தம் செய்தால் துர்வாடை எளிதில் நீங்கிவிடும்.

    * ஆரஞ்சு தோல்களை கொண்டும் ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை நீக்கலாம். இதற்கு ஆரஞ்சு பழத்தோலை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலே போதும். தூர்நாற்றம் தானாகவே மறைந்து விடும்.

    • பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • பருப்பு வேகவைக்கும்போது, விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    ஆட்டுக்குடல் குழம்பு வைக்கும்போது அதில் தேங்காய் சிரட்டை போட்டு வேகவைத்தால், ஆட்டுக்குடல் சீக்கிரம் வெந்து விடும்.

    பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    முட்டை ஆம்லெட் செய்யும்போது, காரம் சாப்பிடாதவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து குடை மிளகாயை சேர்த்தால், சுவை கூடுதலாகும்.

    ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும்போது அதனுடன் சிறிது கொள்ளுவையும் சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.

    சாம்பார் தயாரிப்பதற்கு பருப்பு வேகவைக்கும்போது, அதில் விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    புளிச்சோறு, ரசம், வத்தக்குழம்பு போன்ற புளி சம்பந்தப்பட்ட உணவு தயார் செய்யும்போது அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்தால், சுவை கூடும்.

    புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு, நிலக்கடலையை வறுத்துப் போடாமல், எண்ணெய்யில் பொரித்துப்போட்டால், மொறு மொறு என்று இருக்கும்.

    பீன்ஸ், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும்போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால், ருசியாக இருக்கும்.

    பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் செய்யும்போது, தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சுவை கூடும்.

    குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால், பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

    • வடைக்கு மாவு அரைக்கும் போது உப்பை கடைசியாக சேர்க்க வேண்டும்.
    • தேங்காய் பர்பிக்கு தேங்காய் துருவலை வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது வெல்லத்தை மிக்சியில் தூள் செய்து அத்துடன் வறுத்து சலித்த பயத்தம் மாவை போட்டு அரைத்தால் மாவு கட்டி இல்லாமல் இருக்கும்.

    * வடைக்கு உளுந்து அரைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மாவு இளகிவிடும்.

    * ஒருவருக்கு மட்டும் காபி போட வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை கலந்த காபித்தூளை டீ வடிக்கட்டியில் போட்டு வெந்நீர் ஊற்றினால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

    * சப்பாத்தியை சிறு துண்டுகளாக செய்து, அத்துடன் உருளைக்கிழங்கு குருமாவை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    * உளுந்தம் பருப்பு அதிகமாகவும், கடலை பருப்பு கொஞ்சமாகவும் போட்டு மிளகாய், கெட்டி காயம், உப்பு சேர்த்து வறுத்து அரைத்தால் இட்லி பொடி நல்ல சுவையாக இருக்கும்.

    * சாம்பார் சாதம் செய்யும்போது அரிசி, பருப்பு, காய்கறி கலவை, சாம்பார் பொடி ஆகியவற்றை மட்டும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். உப்பு, புளிக்கரைசலை தாளிக்கும் போது கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதம் குழைவாக இருக்கும்.

    * அப்பம் செய்யும் போது அரிசி, தேங்காய் அரைத்த கலவையில் வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரையவிட்டு ஆறிய பின்பு தான் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் அப்பம் சரியாக வராது.

    * தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காய் துருவலை ஈரப்பசை போக சிறிது வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * வாய் குறுகலான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கீரையை வைத்தால் அடுத்த நாள் கீரை பசுமை நிறம் மாறாமல், வதங்காமல் இருக்கும்.

    • ஊறுகாய், கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது.
    • வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி ஆப்பம் வார்த்தால் சுவையாக இருக்கும்.

    * பொதுவாக எந்த ஊறுகாய் செய்தாலும் கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது. வடநாட்டினர் பெரும்பாலும் பின்பற்றும் வழியும் இதுதான்.

    * குலோப்ஜாமூனை ஆறவைத்த சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்தால் விரிசல் விழாது, உடைந்தும் போகாது.

    * முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

    * பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து செயற்கை கலருக்கு பதிலாக பயன்படுத்தலாம். உணவுப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகான நிறங்களில் இருக்கும். உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

    * தேங்காயோடு பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * கோதுமை மாவு போட்டு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் பிரியாணி இலைகளையும் சேர்த்தால் வண்டு வராது.

    * சமையல் செய்யும்போது உடலில் சூடான எண்ணெய் பட்டுவிட்டால், அந்த இடத்தில் உருளைக்கிழங்கை அரைத்து பூசினால் கொப்பளம் வராது.

    * குலோப்ஜாமூன் ஜீரா மீந்துவிட்டால், அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெய்யில் பொரித்தால் சுவையான இனிப்பு பிஸ்கட் ரெடி.

    * ஆப்பத்திற்கு மாவு கலக்கும் போது இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி சேர்த்து ஆப்பம் வார்த்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டி தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    • பழ எசென்ஸ் விட்டு லட்டு பிடித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
    • தேங்காய்க்கு பதில் கசகசாவை அரைத்து மோர்க்குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.

    * இஞ்சியுடன் ஏலக்காயை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். டீ தயாரிக்கும்போது கொதி வந்த பின்பு இதை ஒரு டீஸ்பூன் அளவிற்கு போட்டு பருகவும். டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * மோர்க் குழம்பு செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக கசகசாவை சேர்த்து அரைத்து மோர்க்குழம்பு செய்தால் கெட்டியாக, சுவையாக இருக்கும்.

    * பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலையையும், பொடித்த முந்திரியையும் சேர்த்துப் பிடித்தால் சுவையாக இருக்கும்.

    * லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ எசென்ஸ் விட்டுப் பிடித்தால் லட்டு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * முட்டையை வேக வைக்கும் போது சில சமயங்களில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளைக்கரு வெளியே வரக்கூடும். அப்படி வெளியில் வராமல் இருக்க வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை சேர்க்கவும். இதனால் முட்டையின் ஓடு வெடித்தாலும் உள்ளே இருப்பவை வெளியில் வராது.

    * பூசணிக்காய் மீந்துவிட்டால் அதை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் அடுத்த நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

    * முட்டை கெடாமல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் மூழ்கும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அந்த முட்டை கெட்டு விட்டது. அது தண்ணீரில் மூழ்கினால் அந்த முட்டையை சமைப்பதற்கு பயன்படுத்தலாம்.

    * ஒரு கப் அளவு பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து காய்கறி சாலட் செய்யும்போது சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை நன்றாக இருக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது.

    * பச்சை மிளகாயில் உள்ள காம்பு பாகத்தை நீக்கி விட்டு அதை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு பிரெஷ் ஆக இருக்கும்.

    * பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டால் சாதம் உதிரி உதிராக இருக்கும்.

    • சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.
    • காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.

    மைக்ரோவேவ் அவன் சாதனத்தில் சமைக்கும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் சமைப்பதற்கான சமையல் டிப்ஸ்...

    * காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி வேகவைக்க வேண்டும்.

    * காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.

    * சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.

    * உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கறிகள் வறண்டு விடும். ஆதலால் அவை வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

    * சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும்.

    * ஒரு பவுல் அல்லது ஒருகப் தண்ணீரை மைக்ரோவேவில் சூடு செய்து அதில் தக்காளியை போட்டு எடுத்தால் ஓரிரு நிமிடத்தில் தோலை நீக்கி விடலாம்.

    * உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள்கரண்டியால் குத்தியோ அல்லது துண்டு துண்டாக வெட்டியோதான் அவனில் வைக்க வேண்டும்.

    * புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க, பச்சரிசியில் வைப்பது போலவே நேரம், அளவு வைக்கவேண்டும்.

    * பாசுமதி அரிசியில் சமைக்கும்போது அரிசியும், தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் 'மைக்ரோ-ஹை'யில் வைக்கவும்.

    * தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

    * நமத்துப் போன சிப்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிஸ்கட் வகைகளை, காட்டன் கர்ச்சீப் போன்ற துண்டு விரித்து அதில் பரப்பி வைத்து மூடாமல் ஒரு நிமிடம் சூடு செய்யலாம்.

    * பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும், நீரும் பாதி அளவுதான் இருக்க வேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

    * உலோக பாத்திரங்களை அவனில் வைத்து சமைக்கக் கூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து, ஓவனின் உட்புற உலோக தகட்டில் எதிரொலித்து பக்க விளைவுகள் ஏற்படும்.

    • மாவில் வண்டு வராமல் இருக்க சிறிதளவு உப்பை போட்டு வைத்தால் போதும்.
    • இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலையை போட்டு வைக்கலாம்.

    * கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்கு அதில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் போதும்.

    * காப்பர் பூசப்பட்ட பாத்திரம் மங்காமல் இருப்பதற்கு சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி, துணியால் அழுத்தி தேய்த்தால் போதும். பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

    * இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் அதன் உள்பகுதியை மாவில் போட்டு வைக்கவும். மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

    * மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். பின்பு நீரை ஊற்றிவிட்டு முயற்சி செய்தால் பிளேடை எளிதாக கழற்றலாம்.

    * மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து இட்லி சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் சுவையாக இருக்கும்.

    * வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் மணமாக இருக்கும்.

    * சப்பாத்தியை சில்வர் பாயில் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரம் காயாமல் இருக்கும்.

    * ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

    * வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

    * தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும்.

    * முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டு வைத்தால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

    ×