என் மலர்
நீங்கள் தேடியது "பரந்தாமன் எம்எல்ஏ"
- திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
- தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விடியல் ஏற்பட்டுவிட்டது.
சென்னை:
எழும்பூர் தொகுதி தி.மு.க. எம். எல். ஏ. இ.பரந்தாமன் சட்டசபையில் பேசுகையில், திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. மகளிருக்கான விடியல் பயணத்திட்டத்தை கர்நாடகா பின்பற்றுகிறது. காலை உணவு திட்டத்தை தெலுங்கானா பின்பற்றுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் மருத்துவ கட்டமைப்பை குஜராத் மாடல் ஆட்சி நடக்கும் மாநிலத்தவர் கூட இங்கு வந்து பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள். நடைபெற இருக்கும் 5 மாநில தேர்தல் வாக்குறுதிகளும் கூட திராவிட மாடல் ஆட்சியின் நகல்களாக இருந்தால் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விடியல் ஏற்பட்டுவிட்டது. இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு விடியல் ஏற்படும். அதுவும் முதலமைச்சர் பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணியினால் ஏற்படும். தமிழ்நாட்டிற்கு விடியலை தந்த உதயசூரியன் நம் தலைவர் ஆர்.எஸ்.எஸ்-பாஜக என்னும் இருளை விரட்டியடிப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் 2வது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம்.
- தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 2வது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம் நாளை (23ம் தேதி), நாளை மறுதினம் (24ம் தேதி) நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளனர்.
இந்நிலையில், எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ஐ. பரந்தாமன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்.? என்ன செய்ய வேண்டும்… எப்படி செய்ய வேண்டும்... உங்களுக்கான பதிவுதான் இது..!" என குறிப்பிட்டிருந்தது.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
நம் அனைவருக்கும் வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை தேடி பார்த்துவிட்டு இல்லை என்று ஏமாற்றம் அடைவதைவிட சிறப்பு முகாமை பயன்படுத்தி பெயர் பதிவு செய்துக் கொள்ளலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. அதன்படி, இம்மாதம் நாளை மற்றும் நாளை மறுநாள் (23ம், 24ம் தேதிகளில்) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
யார் யாருக்கெல்லாம் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையோ அவர்களும், வரும் ஜனவரி மாதத்தில் 18 வயது பூர்த்தி செய்யும் இளைஞர்களும் வாக்காளர் சிறப்பு முகாமிற்கு சென்று பெயரை பதிவு செய்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே பதிவு செய்தவர்கள் பிழை ஏதேனும் இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம். முகவரி மாறியிருப்பவர்கள், எழும்பூர் தொகுதிக்கு குடிவந்தவர்கள், அடுத்த முறை எழும்பூர் தொகுதியில் இருந்து வாக்கு செலுத்த நினைப்பவர்கள் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, தேர்தல் நேரத்தில் தங்களின் இருப்பிடத்தின் அருகாமையில் செயல்படும் வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள். அங்கு, வாக்காள அதிகாரிகள் இருப்பார்கள். திமுகவின் நிர்வாகிகளும் தங்களுக்கு உதவ காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நீங்கள் அங்கு செல்லும்போது 18 வயது பூர்த்தியானதற்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் அல்லது படிப்புச் சான்றிதழ் உடன் எடுத்துக் செல்லவும்.
முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இருப்பிடச் சான்றிதழுக்கு அட்டாச்சியாக பேங்க் பாஸ் புக், கேஸ் பில், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, சொத்து பத்திரம் ஆகியவை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
இந்த ஆவணங்களை எடுத்துச் செல்லும்போது அங்கு தரப்படும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.
வாக்காளர் சிறப்பு முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுவதால் விடுமுறை தினத்தை வீட்டில் இருந்தே கழிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.
இந்த இரண்டு நாட்களில் உங்களுக்கு சவுகரியப்படக்கூடிய ஒரு நாளில் 10 நிமிடம் செலவழித்து பதிவு செய்துக் கொள்ளுங்கள்.
எழும்பூர் தொகுதி மக்கள் உங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தல் போன்றவற்றை சிறப்பு முகாமில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
- அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடங்கி புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது வரையிலும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மக்களுக்குக் கிடைக்கின்றன.
இந்த திட்டங்கள் எல்லாமே எழும்பூர் தொகுதி மக்களிடம் முழுமையாக சென்றடைந்துவிட்டதா என்பதை அறியவும் மக்களின் குறைகளைக் கேட்டறியவும் வீடு வீடாகச் சென்று தரவுகள் சேகரிக்கும் பணியில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் குழுவினர் களப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
இந்த களப்பணி குழுவினர் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் நலத்திட்ட உதவிகள் அடங்கிய கையேடு வழங்குகிறார்கள்.
அதோடு, திராவிட மாடல் அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை போன்ற உதவிகள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்கிறார்கள்.

அதோடு, சுய உதவிக் குழுவில் சேர்ந்திருக்கிறார்களா அல்லது சேர விரும்புகிறார்களா? என்றும் மேலும் சிறு தொழில் தொடங்குவதற்கு விருப்பம் இருக்கிறதா என்பதையும் கேட்டு அறிகிறார்கள்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்திட்டங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான உதவிகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கபடுகிறது.
இந்த வகையில், திராவிட மாடல் அரசு வழங்கும் திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் எழும்பூர் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக க்யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டு, வீடு தோறும் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.
இதன் மூலம் அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தேவையான உதவிகள் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை திட்டம் போட்டு செயல்படுத்தி வருவதாக எம்எல்ஏ பரந்தாமன் தெரிவித்தார்.