search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்குன் குனியா"

    • வித்தியாசமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
    • காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால்கள் வீக்கம், மூட்டு வலியால் அவதி.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் வித்தியாசமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால்கள் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த வைரஸ் காய்ச்சல் சிக்குன் குனியாவை ஒத்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் மச்சர்லா மற்றும் பல்நாடு பகுதிகளில் பரவி வருகிறது.

    வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலும் மற்ற அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்கள் பெரும்பாலானோர் குண்டூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    3,4 நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்தாலும் மூட்டு வலி, வீக்கம் குறையவில்லை. 4 முதல் 6 வாரங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர்.

    காய்ச்சல் பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்களை நடத்தி பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    2 வாரங்களுக்கு மேல் மூட்டு வலி இருந்தால் குறைந்த அளவு ஸ்டீராய்டு மருந்தை கொடுத்தால் நிவாரணம் பெறலாம் என நுரையீரல் நிபுணர் டாக்டர் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

    நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    இது ஆந்திராவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சாதாரண காய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.
    • வைரஸ் காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சிக்குன் குனியா காய்ச்சலும் அதிகமாக பரவ தொடங்கி உள்ளது.

    டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல வகை காய்ச்சல் மக்களுக்கு பரவி வந்தாலும் சிக்குன் குனியா காய்ச்சல் வந்தவர்கள் மிகவும் முடங்கி விடுவார்கள்.

    காய்ச்சல் வந்தாலே உடல் சோர்வடையும் உடம்பு நெருப்பால் கொதிக்கும் எனவும் சாப்பிட படிக்காது. பசியின்மை அடித்து போட்டது போல் உடம்பு வலி ஏற்படும். காய்ச்சலில் பல வகைகள் இருந்தாலும் சாதாரண காய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.

    பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும். பொதுவான வைரஸ் காய்ச்சல் ஒரு வாரம் வரை நீடிக்கலாம். இந்த வகை காய்ச்சல் தொண்டையில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்தி விடலாம்.

    ஆனால் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் என்பது ஏ.டி.எஸ். கொசு கடிப்பதால் வருகிறது.

    கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தொடர்ச்சியான வாந்தி, உடல் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

    சிலருக்கு உடலில் அரிப்பு, சிவப்பு புள்ளிகள், தோன்றும்.

    இந்த காய்ச்சல் தீவிரமாகி விட்டால் உடலின் உட்பகுதியில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். மூட்டு வலியும் அதிகமாகும். ரத்தத்தின் தட்டையணுக்கள் குறைந்து உயிருக்கு ஆபத்தாகி விடும்.

    எனவே சிக்குன் குனியா நோய் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் சிக்குன் குனியா காய்ச்சல் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக காணப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1,451 பேருக்கு சிக்குன் குனியா அறிகுறி இருந்தது. அதில் 331 பேருக்கு சிக்குன் குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு பாதிப்பு இருந்தாலும், பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
    • சிக்குன் குனியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும்.

    சென்னை:

    சென்னையில் தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்படும் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறிய அளவிலான கிளீனிக்குகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருகிறது.

    வைரஸ் தொற்று காரணமாக சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் டெங்கு காய்ச்சல் காரணமாகவும் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் சிக்குன் குனியா காய்ச்சலும் பரவி வருகிறது. கடந்த 20 நாட்களாகவே சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனையில் டெங்கு இல்லை என்பது உறுதியானால் அது சிக்குன் குனியாவாகவும் இருக்கக்கூடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    சிக்குன் குனியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும். ஆனால் கடந்த 2007-ம் ஆண்டு சிக்குன் குனியா பரவியபோது ஏற்பட்டது போன்ற கடுமையான மூட்டுவலி தற்போது ஏற்படவில்லை. ஆனாலும் மூட்டுவலி 10 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும்.

    இந்த பருவ காலத்தில் இதுபோன்று காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். இந்த பருவத்தில் சுவாச பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் சிகிச்ச்சைக்கு வருகிறார்கள். இதில் பெரும்பாலான குழந்தைகள் ஒரு வயதுக்கு குறைவானவர்கள். அவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சியும் உள்ளது.

    செப்டம்பர் 2-வது வாரத்தில் இருந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் சிலர் உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள். சிலர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களை கவனிப்பது தொடர்பாக பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

    மேலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளே அதிகமாக உள்ளன. குழந்தைகளுக்கு காய்ச்சலுடன், சுவாச பாதிப்பு, உணவு சாப்பிடுவதில் சிரமம் ஆகியவையும் உள்ளன. மேலும் சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. இது போன்ற பருவகால காய்ச்சல் பாதிப்புகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடைகின்றன.

    ஆனாலும் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×